இந்த மரத்தை உங்கள் கையால் ஒருமுறை நட்டு வைத்தால் போதும். இந்த மரம் வளர வளர உலகம் முழுவதும் உங்கள் செல்வாக்கு ஓஹோன்னு கொடிகட்டி பறக்கும்.

tree
- Advertisement -

சில பேருக்கு, வாழ்க்கையில் ரொம்பவும் பிரபல்யமாக வேண்டும் என்று ஆசை இருக்கும். நடிக்க வேண்டும், பாட வேண்டும், கலை துறையில் ஈடுபட வேண்டும், உலகம் முழுவதும் பெயர் புகழ் போற்றும் படி வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எவ்வளவோ முயற்சி செய்து பார்ப்பார்கள். முட்டி மோதி பார்ப்பார்கள். ஒரு எளிமையான நடுத்தர குடும்பத்திலிருந்து மேலே வருவதற்கு ரொம்பவும் சிரமப்படுவார்கள். யாருடைய சப்போர்ட்டும் அவர்களுக்கு கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு நல்லதொரு சப்போர்ட் கிடைத்து, வாழ்க்கையில் பிரபலமாக மாறுவதற்கு செய்ய வேண்டிய ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

எந்தத் துறையில் படித்து நீங்கள் பிரபல்யமாக வேண்டும் என்று நினைத்தாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம் அல்லது உங்களுக்கு இருக்கும் ஸ்பெஷல் திறமையை வெளிக் கொண்டு வர இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு சப்போர்ட் செய்து கை தூக்கி மேலே விட்டு விடுவார்கள்.

- Advertisement -

செல்வாக்கு அதிகரிக்க எந்த மரத்தை நம் கையால் நட வேண்டும்?
செல்வாக்கு அதிகரிக்க, உயர் அதிகாரிகளின் சப்போர்ட் கிடைக்க, நண்பர்களின் சப்போர்ட் கிடைக்க, அம்மா அப்பா சப்போட் என்று எல்லாருடைய ஒத்துழைப்பும் நமக்கு கிடைக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான சப்போர்ட் கிடைக்க வேண்டும் என்றால் நாம் நம் கையால் நடவேண்டிய மரம் சப்போட்டா மரம். நிச்சயமாக இதை படித்தால் நம்ப முடியாது. உங்களுடைய வீட்டில் சப்போட்டா மரம் நட்டால் உங்களுக்கு நிறைய வகையில் நிறைய பிரபல்யங்கள் மூலமாக ஒத்துழைப்பு கிடைத்து வாழ்க்கையில் சீக்கிரம் பிரபலியம் ஆகிவிடலாம்.

உங்களுடைய கையால் ஒரு பொது இடத்திலோ, அல்லது ஒரு கோவிலிலோ ஒரு சப்போட்டா செடி நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றி பெரிய மரமாக வளர்த்து விடுங்கள். இந்த சப்போட்டா செடி நாளுக்கு நாள் வளர்ந்து மரமாக மாறுவதற்குள், உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றமும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்லும். நீங்கள் தமிழ்நாடு மட்டுமல்ல இந்த உலகமே போற்றும் வகையில் பெரிய அளவில் உயர்ந்து விடுவீர்கள்.

- Advertisement -

சப்போட்டா தானம்:
ஒரு நல்ல காரியத்துக்கு போறீங்க. அதற்கு எல்லோருடைய சப்போர்ட்டும் ஒட்டு மொத்தமாக தேவை என்றால், அந்த நல்ல காரியத்திற்கு செல்வதற்கு முன்பு, ஒரு கிலோ சப்போட்டா பழத்தை வாங்கி ஒரு ஏழை குடும்பத்திற்கு தானமாக கொடுங்கள். வீதி ஓரங்களில் ரோட்டோரங்களில் குடிசை போட்டு இன்றும் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு கிலோ சப்போட்டா வாங்கி தானம் கொடுத்தால் நீங்கள் செய்யும் முயற்சியில் உடனடி வெற்றி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: நிலைவாசல் படியில் இந்த 1 பொருள் இருப்பதை பார்த்து விட்டால் போதும். உங்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று வீட்டிற்குள் வருபவர்கள், அப்படியே தலை தெறிக்க திரும்பி ஓடி விடுவார்கள்.

பெரிய அளவில் வீடு கட்ட போறீங்க. தொழில் தொடங்க போறீங்க அல்லது ஏதோ ஒரு விஷயம் சக்சஸ் ஃபுல்லாக செய்ய வேண்டும் என்றால், ஒரு மூட்டை சப்போட்டா பழத்தை வாங்கி ஒரு ஆசிரமத்திற்கோ, முதியோர் இல்லத்திற்கோ தானமாக கொடுத்துவிட்டு, பிறகு நல்ல காரியத்தை தொடங்கி பாருங்கள். அந்த நல்ல காரியத்தை தடுக்க யாருமே வர மாட்டாங்க. உங்களுக்கு சப்போர்ட் செய்ய நிச்சயம் நாலு பேர் வருவாங்க. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிய பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -