சிவனுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் அற்புத பலன்கள்

Sivan
- Advertisement -

சிவனுக்கு பலரும் பல பொருட்கள் கொண்டும் அபிஷேகம் செய்வோம். அதில் சில முக்கிய பொருட்களால் செய்யப்படும் அபிஷேகத்திற்கான பலன்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சுத்தமான பசும்பாலில் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.

- Advertisement -

அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லைகள் நீங்கும்.

11 மூட்டை அரிசியால் அன்னம் சமைத்து அதனை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் வயிற்றில் உண்டாகும் அணைத்து நோய்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.

- Advertisement -

தூய்மையான கங்கை நீர் நூறு குடம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்திலுள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.

சந்தனத்தை பன்னீரில் கரைத்து அதில் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும்.

- Advertisement -

சர்க்கரை கலந்த பாலால் அபிஷேகம் செய்தால் மந்திர ஏவல்களின் பாதிப்பு இருக்காது.

நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும்.
வாசனைத் திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் செய்தால் எதிரிகள் அழிந்துபோவர்.

தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து சிவனுக்கு நூறு குடம் அபிஷேகம் செய்தால் நோய்கள் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் மனதில் உள்ள துக்கங்கள் நீங்கும். அதோடு இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும்.

பத்தாயிரம் பழங்காலால் பஞ்சாமிரதம் செய்து அதில் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்துக்குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேகத்தினை பெறலாம்.

நூறு மூட்டை சக்கரையினால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.

சுத்தமானப பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.

ஆயிரம் குடம் இளநீர் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.

கரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும்.

தயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.

திராட்சை ரசத்தினால் அபிஷேகம் செய்தால் செல்வம் பெருகும்.

மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.

ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைக்க வேண்டும். ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது சல்லடைக்கண்கள் உள்ள தாராபாத்திரத்தில் அபிஷேகம் செய்யதால் நன்மைகள் பல உண்டு.

- Advertisement -