உங்களுடைய வீட்டில், பீரோ வைத்திருக்கும் இடத்தில், இந்த தவறை நீங்கள் செய்து இருக்கிறார்களா என்று பாருங்கள்! இதனால் கூட பண கஷ்டம் வரும்.

bero1
- Advertisement -

வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு சிலருக்கு சாஸ்திர சம்பிரதாயங்களின் மேல் சுத்தமாக நம்பிக்கையே வராது. அவர்களது நேரம் நன்றாக இருக்கும். அவர்கள் செய்யக்கூடிய தவறுகள் அவர்களை பாதிக்காமல் இருந்திருக்கும். ஆனால், நம்முடைய நேரம் என்பது எப்போதுமே ஒரே மாதிரி இருந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. என்றைக்கோ செய்த தவறுக்காக, நீண்ட நாள் கழித்து, அந்தத் அதற்கான தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்பட்டிருக்கும். அந்த வரிசையில் நம்முடைய நேரம் சற்று தடுமாறும் சமயத்திலும், நாம் செய்யக்கூடிய தவறுகள் நம்மை பாதிக்காமல் இருக்க முன்கூட்டியே நாம் என்னென்ன பரிகாரங்களை செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bero

இந்த பரிகாரத்தை செய்து விட்டால் நாம் தவறுகள் செய்யலாம். அந்த தவறுகள் மன்னிக்கப்படும் என்று சொல்ல வரவில்லை. அறியாமல் செய்யக்கூடிய தவறுகளாக இருந்தால், அந்த தவறுகளுக்கான தண்டனை முழுமையாக நம்மை வந்து சேராது, ஏற்படக்கூடிய கஷ்டங்கள் குறைவதற்கு என்னென்ன செய்யலாம்?

- Advertisement -

முதலில் நிறைய பேர் வீடுகளில் பீரோவை தரையில் வைக்கும் பழக்கம் இருக்கும். பீரோவை நேரடியாக தரையில் வைக்காமல், பீரோ வைப்பதற்கு ஸ்டாண்டுகள் இப்போது நிறையவே இருக்கின்றது. அந்த ஸ்டாண்டில் பீரோ வைக்கலாம். அப்படி இல்லை என்றால் அந்த பீரோவுக்கு அடியில் சிறிதளவு மஞ்சளை தடவி விட்டு, அதற்குப் பின்பு பீரோவை வைக்க வேண்டும். பீரோ வைக்கும் ஸ்டாண்டின் மேலும் கொஞ்சமாக மஞ்சள் தடவி வைப்பதும் நல்லது. அதாவது பீரோவை எப்படி வைத்திருந்தாலும், பீரோ கால்களுக்கு அடியில் மஞ்சள் இருக்க வேண்டும் அவ்வளவுதான். இதன் மூலம் உங்களுக்கு வரக்கூடிய சின்ன சின்ன பணக் கஷ்டங்கள் கூட வராமல் இருக்கும். பணவரவு தங்குதடையின்றி உங்கள் கைகளில் கட்டாயம் இருக்கும்.

bero-stand

கொஞ்சமாக மாதுளை இலைகளையும், வில்வ இலைகளையும் சேர்த்து உங்கள் பீரோவுக்குள், பணம் வைக்கும் இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த இலை காய்ந்தாலும் தோஷமில்லை. தேவையற்ற தோஷங்கள் உங்களுக்கு இருந்தாலும், உங்கள் கைகளுக்கு வரக்கூடிய பணத்தில் இருந்தாலும் கூட, அந்த தோஷங்கள் நிவர்த்தி அடைய இந்த பரிகாரம் சிறந்தது.

- Advertisement -

உங்களால் முடிந்தால் திருநங்கைகள் கையில் இருந்து ஒரே ஒரு ரூபாயை வாங்கி வந்து பீரோவில் வைக்கலாம். அது நமக்கு பெரிய அதிர்ஷ்டத்தை தேடி தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. பெரும்பாலும் அவர்கள் கையால்  அடுத்தவர்களுக்கு காசு கொடுக்க மாட்டார்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் மனநிறைவோடு, ஆசீர்வாதத்தோடு அவர்கள் கையிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை பெறுவது நமக்கு நல்லது.

aravanigal3

வீட்டில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் நீங்கி, வீடு சுபிட்சம் அடைவதற்கு, அனுமன் வழிபாடு மிக மிக நல்லது. உங்களுடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகமாக இருந்தாலும்கூட, மகாலட்சுமி தங்க மாட்டாள். இதற்குப் பரிகாரமாக உங்களுடைய வீட்டில் தெற்கு முகமாக அனுமன் படத்தை மாட்டி வைப்பது நல்லது. இதேபோல் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க வேண்டுமென்றால் கிழக்கு பார்த்தவாறு சிவபெருமான் தன்னுடைய குடும்பத்தோடு இருப்பார் அல்லவா அந்த படத்தை மாட்டி வைப்பது நல்லது.

- Advertisement -

sivan

இப்படிப்பட்ட சின்ன சின்ன மாற்றங்களை உங்கள் வீட்டில் கொண்டு வாருங்கள். அதற்குப் பிறகு வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை கண்கூடாக காணலாம். மனநிறைவான நம்பிக்கையான இறைபக்தி, நம்மை கஷ்டமாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும் கட்டாயம் காப்பாற்றும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வாழ்வில் நீங்கள் பெறக்கூடாத இந்த 3 சாபங்களை போக்கும் அற்புதமான பரிகாரங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -