பணம் தங்காமல் போவதற்கு நீங்கள் பீரோவில் வைக்கும் இந்த பொருட்களும் காரணமாக இருக்குமாம்! அது என்ன பொருட்கள்?

bero1
- Advertisement -

பணத்தை வைக்கும் பீரோவில் பணத்தை மட்டுமல்ல நாம் துணிமணிகளையும் தான் வைக்கிறோம். பணம், துணிமணி, நகைகள் வைப்பதற்கு மட்டுமா பீரோ? ஒவ்வொருவரின் பீரோவை திறந்து பார்த்தால் அதில் ஒரு இடம் கூட விட்டு வைக்காமல் கண்டதையும் போட்டு அடுக்கி வைத்திருப்பார்கள். பீரோவில் வைக்கும் பணத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே நாம் அதனை இது போல வைத்துக் கொண்டால் உள்ளே இருக்கும் மகாலட்சுமி வெளியில் சென்று விடுவாள். பிறகு எப்படி நம்மிடம் பணம் தங்கும்? எனவே பீரோவில் வைக்க கூடாத பொருட்களை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

bero

பீரோவில் வைக்க வேண்டிய முக்கிய பொருட்களில் ஒன்று நீங்கள் சம்பாதிக்கும் பணம். பீரோவை வைக்க வேண்டிய திசையில் வைத்து சம்பாதிக்கும் பணத்தை பீரோவில் வைத்து பின்னர் அதில் இருந்து எடுப்பது தான் முறையாகும். இரும்பு பீரோவை விட மர பீரோக்கள் அதிகமான பணத்தை சேமித்து கொடுக்கும் வல்லமை கொண்டுள்ளது. அதிலும் தேக்கு மர பீரோவில் நீங்கள் பணத்தை சேகரித்தால் அள்ள அள்ள குறையாத பணம் சேர்ந்து கொண்டே செல்லுமாம். அதனால் தான் என்னவோ முந்தைய காலங்களில் எல்லாம் தேக்கு மரத்தாலான பீரோக்கள் பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது.

- Advertisement -

தேக்கு மர பீரோ வாங்கி வைக்க முடியாவிட்டாலும் ஒரு சிறிய பெட்டியையாவது தேக்கு மரத்தில் வாங்கி அதில் பணத்தை வைத்து வைக்கலாம். இதனால் செல்வ செழிப்பும், பணமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. பணம் வைக்கும் பீரோவில் மகாலட்சுமி இருப்பதால் அங்கு மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகளை வைப்பது சரியல்ல.

bero1

உள்ளாடைகளை தனியாக வேறு ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளலாம். உங்கள் பணம் வைக்கும் பீரோவில் இவற்றை இல்லாமல் பார்த்துக் கொண்டால் பணமானது மென்மேலும் பெருகும். பணம் வைக்கும் பீரோவில் இது போன்ற பொருட்கள் இருப்பதால் அங்கு பண தடை ஏற்படும். அது போல பட்டுப் புடவைகளை ஒரு முறை அணிந்து விட்டு மீண்டும் அதனை பெரும்பாலும் துவைப்பது கிடையாது.

- Advertisement -

துவைக்காத எந்த ஒரு துணிமணிகளையும் பீரோவில் அடுக்கி வைக்க கூடாது. இதனால் நிச்சயம் வீட்டில் பணத்தடை ஏற்படும். வருமான தடை உண்டாகும், கடன் பிரச்சனைகள் தலை தூக்கும். சுத்தமாக துவைத்த துணிகளை மட்டுமே பணம் வைக்கும் பீரோவில் வைக்க வேண்டும். எனவே நீங்கள் பட்டுப் புடவையை கட்டிவிட்டு ஒரு நாள் முழுவதும் காற்றில் காய விடுங்கள். உங்கள் வியர்வை துளிகள் காய்ந்து போன பின்பு மடித்து வைக்கலாம்.

silk-saree

வியர்வை உள்ள துணிமணிகள், ஈரமுள்ள துணிமணிகள், அழுக்கு படிந்த துணி மணிகள், மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் துணிமணிகள் போன்றவற்றை ஒரு பொழுதும் பணம் வைக்கும் பீரோவில் வைக்க கூடாது. இதனால் கண்டிப்பாக வீட்டில் பண கஷ்டம் வரும். மேலும் கூர்மையான பொருட்கள், ஆயுதங்கள் போன்றவற்றையும் பீரோவில் வைக்க கூடாது. இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களையும் பீரோவில் வைக்க கூடாது. தேவையற்ற குப்பைகளை பீரோவில் இருந்து அகற்றிவிட்டு பீரோவை எப்பொழுதும் தெய்வீக மணம் கமழும் படி வைத்துக் கொண்டால் நிச்சயம் இல்லத்தில் பண தடை அகலும்.

- Advertisement -