பீரோவில் இருக்க வேண்டிய சாமி படம் எது? இந்த கடவுளை பீரோவில் வைத்தால் செல்வ மழை பொழியுமா? கையில் பணம் புழங்குமா?

bero1
- Advertisement -

மனிதனாகிய ஒவ்வொருவரும் தனக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொள்ள தான் சம்பாதிக்கிறான். தன்னை நம்பியிருக்கும் உறவுகளுக்காக அவன் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொண்டு வந்து வைக்கும் இடம் தான் பீரோ! என்னதான் பணத்தை பாதுகாப்பாக வைக்க நவீன உபகரணங்கள் நம்மிடம் இருந்தாலும், பீரோவில் கொஞ்சமாவது பணம் இருப்பது தான் நல்லது. அப்படியான இந்த பீரோவில் வைக்க வேண்டிய சாமி படம் என்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

bero

ஒரு வீட்டை எப்பொழுதும் வாஸ்து முறைப்படி அமைப்பது மிகவும் நல்லது. அதே போல வீட்டில் இருக்கும் பொருட்களும் வாஸ்து அமைப்பின்படி அந்தந்த திசைகளில் இருக்கும் பொழுது அதற்குரிய அதிர்வலைகள் நமக்கு நல்ல விஷயங்களை செய்து தரும். இந்த வகையில் கட்டாயம் பீரோவை வாஸ்து முறைப்படி வைத்திருப்பது நமக்கு பல பிரச்சினைகளிலிருந்து விடுபட ஒரு நல்ல பரிகாரமாக இருக்கும்.

- Advertisement -

வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்ட பீரோவில் எப்பொழுதும் இரும்பு சம்பந்தப்பட்ட ஆயுதங்களை வைக்கக் கூடாது. அதே போல தேவையற்ற பொருட்களை குவித்து குப்பை தொட்டி போலவும் வைத்துக் கொள்ளக் கூடாது. பீரோவில் அழகாக துணிமணிகளை நேர்த்தியாக அடுக்கி வைப்பதும், பணம், ஸ்வர்ணம் போன்ற பொருட்களை வைத்திருப்பது மென்மேலும் அதனை பெருக்கி தர ஏதுவாக இருக்கும்.

mahalakshmi

பொதுவாக இப்போது வரக்கூடிய பீரோக்களில் விநாயகர், பெருமாள், மகாலட்சுமி ஆகியோரின் திருவுருவங்கள் பதித்து விற்பனைக்கு வருகின்றன. இப்படி தெய்வப் படங்கள் இல்லாத பீரோக்களில் நாம் தெய்வ படங்களை ஒட்டி வைப்பது சிறப்பு. விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் படத்தையும், செல்வங்களுக்கு அதிபதியாக விளங்கும் மகாலட்சுமியின் படத்தையும் கட்டாயம் பீரோவில் வைத்து இருப்பது நமக்கு மிகுந்த நன்மைகளை கொடுக்கக் கூடியது. பீரோவில் கஜலட்சுமி படத்தை முன்புறமாக ஒட்டி வைப்பதும், உள்ளே மகாலட்சுமியின் படத்தை ஒட்டி வைப்பதும் சிறப்பு. கஜலட்சுமி இரண்டு புறமும் யானைகளுடன் கம்பீரமான தோற்றம் தருபவளாக இருக்கிறாள்.

- Advertisement -

இவருடைய படத்தை பணம் வைக்கும் இடங்களில் நாம் வைத்து இருந்தால் அங்கு இருக்கும் பணமானது பன்மடங்காகப் பெருகி கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுப் பெற்றிருந்தால் அவர் சுக போக வாழ்க்கையை வாழ்வார். சுக போகத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய சுக்கிரனுடைய அம்சமாக விளங்கக் கூடிய பொருள் தான் வெள்ளி. வெள்ளியால் ஆன மகாலட்சுமியின் சிறிய அளவிலான திருஉருவத்தை நீங்கள் பீரோவில் வைத்து இருந்தால் அங்கு உங்களுக்கு செல்வச் செழிப்பை உண்டாக்கக்கூடிய வகையில் சகல, செல்வங்களும் பெருகிக் கொண்டே இருக்கும்.

gold3

பீரோவை எப்பொழுதும் பூஜை அறையை போல மிகுந்த சுத்தத்துடனும், வாசத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும். பீரோவில் பட்டுத் துணியை விரித்து அதில் உங்களுடைய தங்க நகைகளையும், வெள்ளி நாணயங்களையும் வைக்கலாம். அதனுடன் ஒன்றிரண்டு துளசி இலைகள் போட்டு வைப்பது சிறப்பு. பச்சை கற்பூரம், கிராம்பு, சோம்பு, ஏலக்காய் போன்ற பணத்தை ஈர்க்கக் கூடிய தெய்வீக சக்தி கொண்ட பொருட்களை சிறிய அளவிலான வெள்ளைத் துணியில் முடிந்து வைத்திருப்பது மென்மேலும் அங்கு பணம் பெருக செய்யும். எனவே எந்த சுவாமி படத்தை நீங்கள் தவிர்த்தாலும், பீரோவில் கட்டாயம் மகாலட்சுமியின் படம் அல்லது வெள்ளியில் ஆன சிறிய சிலை ஒன்றை வைத்து இது போல் தெய்வீக மணம் கமழ செய்து பாருங்கள்! உங்களை அறியாமல் உங்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.

- Advertisement -