இருளில் இருக்கும் உங்களது வாழ்க்கை பிரகாசமானதாக மாற, சிறிய துண்டு கருப்பு நிறத் துணி போதும்!

amman3
- Advertisement -

இருட்டாக இருக்கக்கூடிய கருப்பு நிறத் துணி, எப்படி நம்முடைய வாழ்க்கையை பிரகாசமாக மாற்றும்? என்று தானே சிந்திக்கிறார்கள். நம்பிக்கையோடு நினைத்தால் நிச்சயமாக எல்லாமே சாத்தியம்தான். கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய துணியில் ஒரே ஒரு வெள்ளை நிற பொட்டு வைத்து விட்டால் போதும். அந்த கருப்பு நிறம் முழுவதும் நம்முடைய கண்களுக்கு தெரியாது. நாம் வைத்த வெள்ளை நிற பொட்டு மட்டுமே நம்முடைய கண்களுக்கு பிரகாசமாக தெரியும். இதே போல்தான் இந்த பரிகாரமும். உங்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டம் இருந்தாலும் சரி, அது அத்தனையும் விலகி, உங்கள் வாழ்க்கையில் சந்தோஷமும் உற்சாகமும் பிரகாசமாக மின்னத் தொடங்கிவிடும்.

badham

இப்படி ஒரு பரிகாரத்தை தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆவலாக உள்ளதா? தெரிந்து கொள்வோம் வாருங்கள். முதலில் சிறிய அளவு சதுர வடிவில் இருக்கும் கருப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 9 பாதாம் பருப்புகளை வைத்து ஒரு கருப்பு நிற நூலிலேயே சிறிய முடிச்சு போல கட்டிக்கொள்ளுங்கள். நவக்கிரகங்களை மனதார நினைத்துக்கொண்டு, இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள். பூஜை அறையிலேயே இந்த முடிச்சினை தயார் செய்யலாம்.

- Advertisement -

தயார் செய்த இந்த முடிச்சினை பூஜை அறையில் வைத்து விட்டு, குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்துகொண்டு குல தெய்வத்திற்கு ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, வழிபாடு செய்துவிட்டு அதன் பின்பு இந்த முடிச்சை உங்களுடைய வீட்டின் தென்மேற்கு மூளையில் வைத்துவிட வேண்டும்.

அவ்வளவு தான். கைக்கு எட்டாத ஒரு இடத்தில் வைத்து விட்டாலும் பரவாயில்லை. யார் கண்ணுக்கும் தெரியாமல் ஒரு டப்பாவில் போட்டு வைத்தாலும் பரவாயில்லை. ஆனால் இதை டப்பாவில் மூடி வைக்க வேண்டாம். துணியில் பாதாம்பருப்பு கட்டியிருக்கும் போது அதிலிருந்து ஒரு விதமான நேர்மறை ஆற்றல் நமக்கு வெளி வந்து கொண்டே இருக்கும். டப்பாவில் போட்டு மூடி வைத்தால் அதனுடைய நேர்மறை ஆற்றல் நமக்கு கிடைக்காது அல்லவா, அதனால் தான்.

- Advertisement -

சரி, இதை எப்போது மாற்றுவது. 6 மாதத்திற்கு ஒரு முறை பழைய பாதாமை எடுத்து ஓடும் தண்ணீரிலோ அல்லது கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதிய பாதாமை எடுத்து மேல் சொன்ன படி, பூஜை அறையில் அமர்ந்து, முடிந்து தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி ஒன்பது பாதாமை கருப்பு நிறத் துணியில் முடிந்து வைப்பதன் மூலம் உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய கெட்ட சகுனங்கள், கெட்ட நேரங்கள் அனைத்தும் நல்லதாக மாறும். வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீக்கப்படும். நவ கிரகங்களால் வரக்கூடிய தோஷங்கள் அகலும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்க இது ஒரு அற்புதமான தாந்திரீக வழி. நம்பிக்கையோடு முயற்சி செய்தால் நல்ல பலனை விரைவில் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -