நீங்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு உங்க முடி கரு கருன்னு வளந்துட்டே போகனுமா? அப்ப இந்த எண்ணெ ஒன்னு போதும். முடி வளர்வதோடு ஹேர் டை அடிக்கும் வேலையே இருக்காது.

hair
- Advertisement -

அந்த காலத்து பெரியவர்களுக்கு எல்லாம் சாதாரணமாகவே முடி இடுப்புக்கு கீழே தான் இருக்கும். ஐம்பது வயது பெரியவர்கள் கூட நரை முடி இல்லாமல், ஏன் ஐம்பது வயது என்று சொன்னால் கூட நம்ப முடியாத அளவுக்கு தான் அவர்களின் தோற்றமே கூட இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் சிறு குழந்தைகளுக்கு கூட செம்படையாக மாறி நரைமுடி தோன்றி சிறு வயதிலே வயதானவர்கள் போல இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் கெமிக்கல் கலந்த ஷாம்பு ஆயில் இன்னும் என்னனோவோ தலை முடிக்கு போடுகிறார்கள். இது எதுவுமே தலை முடி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு இல்லை. அப்படியானால் இதற்கு என்ன தான் தீர்வு என்கிறீகளா, இதோ இதற்கவே இயற்கை நமக்கு தந்திருக்கும் மிக எளிய தீர்வை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் கரிசலாங்கண்ணி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து நன்றாக நீரில் அலசி எடுத்து நிழலில் ஆற வைத்துக் கொள்ளுங்கள். இலை நன்றாக ஈரம் இல்லாமல் காய்ந்த பிறகு மிக்ஸி ஜாரில் (பெரிய ஜார் ) சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அரைத்து எடுத்து இந்த கரிசலாங்கண்ணி இலையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு பெரிய அகலமான தட்டில் வைத்து நல்ல வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை காய வைத்தால் போதும் இதிலுள்ள ஈரப்பதம் முற்றிலும் போய் விடும்.

காய வைத்து எடுத்த கரிசலாங்கண்ணி உருண்டையில் ஒரு பத்து உருண்டைகளை எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு விட்டு, அதில் கால் லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி விடுங்கள். இதை தேங்காய் எண்ணெயில் சேர்த்த பிறகு இந்த கிண்ணத்தின் மூடியை ஒரு வெள்ளை துணி வைத்து கட்டி விடுங்கள். இந்த வெள்ளை துணி அதற்கு மேல் தூசு படாமல் இருப்பதற்காக மட்டும் தான். இதையும் வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ளுங்கள். இதை குறைந்தது ஒரு வரம் வரை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்தால் தான் கரிசலாங்கன்னியில் உள்ள சாறு இந்த தேங்காய் எண்ணெய்யில் இறங்கும்.

- Advertisement -

காய வைத்த எண்ணெய்யை ஒரு மெல்லிய காட்டன் துணி வைத்து வடிகட்டி எடுத்து, ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து விடுங்கள். அவ்வளவு தான் கரிசலாங்கண்ணி எண்ணெய் தயாராகி விட்டது. இதை தொடர்ந்து மூன்று மாதம் வரை தலைக்கு தேய்த்து வந்தால் செம்பட்டை முடி கூட கருமையாக மாறி, முடியும் நன்றாக வளர தொடக்கி விடும்.

இந்த எண்ணெய்யில் கரிசலாங்கண்ணியை போட்டு சில பேர் காய்ச்சுவார்கள். அப்படி எண்ணெயில் போட்டு சூடு படுத்தும் போது அந்த இலையின் மருத்துவ குணம் மாற வாய்ப்பு உள்ளது. அதிக அளவு உடல் குளுமை தன்மை உடையவர்கள் இந்த எண்ணெய்யை தேய்க்கும் முன் வேண்டுமானால் லேசாக சூடு படுத்தி தேய்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -