கண்திருஷ்டியினால் உண்டாகும் பாதிப்பிலிருந்து விடுபடவும், பில்லி சூனியம் போன்ற தீய வினைகளிலிருந்து தப்பிக்கவும் இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும்

garudan
- Advertisement -

பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் உதவியாகவும், ஒற்றுமையாகவும் கிடைத்த பொருட்களை அனைவரும் பகிர்ந்துண்டும் வாழ்ந்தனர். ஆனால் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க பற்றாக்குறை காரணமாக ஒருவர் மீது ஒருவருக்கு பொறாமை எண்ணம் ஏற்பட்டது. காரணமே இல்லாமல் ஒருவரைப் பார்த்து இழி சொல் பேசுவது, அவர்களின் சந்தோஷத்தை கெடுப்பது என பல தேவையற்ற செயல்களை செய்ய ஆரம்பித்தனர். இவ்வாறு நமக்கு யாரெல்லாம் பிரச்சனை கொடுக்கிறார்கள் என்று நம்மால் ஆராய்ந்து பார்க்க முடியாது. எனவே இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த ஒரு பொருளை மட்டும் நமது வீட்டில் முறையாக பயன்படுத்தி எந்த பாதிப்பும் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். வாருங்கள் அது என்ன பொருள் என்றும் அதனை எவ்வாறு உபயோகிப்பது என்றும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

poramai

ஆகாச கருடன் கிழங்கு:
ஆன்மீக ரீதியாக சிறப்புமிக்க பலன்களை கொடுக்கும் இந்த ஆகாச கருடன் கிழங்கு சித்த வைத்தியத்திலும் மகத்துவமான மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. அனைத்து நிலப்பரப்பிலும் வளரக்கூடிய ஆகாச கருடன் கிழங்கு பெரும்பாலும் காடுகளிலும், மலைகளிலும் தான் அதிகமாக காணப்படுகிறது. மண்ணில் புதைந்து காணப்படும் இதனை தோண்டி தான் வெளியே எடுக்க வேண்டும். இதனை வெளியே எடுத்த பின்னரும் மண் மற்றும் தண்ணீர் இல்லாமல் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை வைத்தே வளரக் கூடிய அற்புத ஆற்றல் பெற்றது.

- Advertisement -

இந்த உலகத்தில் இருக்கும் கொடிய விஷங்களில் மிகவும் கொடிய விஷமான பாம்பின் விஷத்தை முறிக்க வல்ல ஆற்றல் பெற்ற ஆகாச கருடன் கிழங்கு எதிரிகளின் கண் பார்வையிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இதனை பார்க்கும் பொழுது கருட பகவானின் தோற்றத்தில் இருப்பதால் ஆகாச கருட கிழங்கு என்று பெயர் பெற்றுள்ளது. இது இவ்வாறான வடிவத்தைப் பெற்றுள்ளதாலே அனைவரும் இதனை தெய்வாம்சம் நிறைந்ததாக பார்க்கின்றனர். இந்த கிழங்கை முறையாக நமது வீட்டில் குறிப்பிட்ட இடத்தில் வைப்பதன் மூலம் நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் நிலைத்திருக்கச் செய்ய முடியும்.

Cobra snake

அதற்காக முதலில் ஒரு ஆகாச கருடன் கிழங்கை எடுத்து அதனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு மஞ்சளை நீரில் குழைத்து ஆகாச கருடன் கிழங்கிற்கு முழுவதுமாக பூசிவிட வேண்டும். அதன் பின் ஆங்காங்கே குங்கும பொட்டு வைத்துவிட வேண்டும். அதன்பின் கிழங்கின் வேர் பகுதியில் ஒரு நூலைக் கொண்டு கட்டி அதனை நிலை வாசற் படியின் வெளிப்புறம் மேற்பகுதியில் கட்டி தொங்கவிட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு வீட்டின் வாசலில் தொங்க விடப்படும் ஆகாய கருடன் கிழங்கு சிறிது நாட்களில் துளிர் விட்டு நன்றாக வளர ஆரம்பித்தது என்றால் நமது வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் இந்த கிழங்கு வாடி வதங்கினாலோ அல்லது அழுகிவிட்டாலோ நம் வீட்டைச் சுற்றி எதிரிகளின் கண்பார்வை அதிகம் இருப்பதாகவும் அல்லது நமக்கு வரப்போகிற ஆபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றி இருக்கிறது என்ற அர்த்தத்திலும் எடுத்துக் கொள்ளலாம்.

akasa-garudan

ஏனெனில் இந்த ஆகாய கருடன் கிழங்கு நமது வீட்டின் மீது விழும் எதிர்மறை சக்திகளை உள்வாங்கிக் கொள்கிறது. அதனால்தான் இவ்வாறு அழுகிவிடுகிறது. எனவே மற்றவர்களின் பொறாமை பார்வையிலிருந்தும், பில்லி, சூனியம் போன்ற தீயவினைகளிலிருந்தும் நம்மை காப்பாற்றும் இந்த ஆகாய கருடன் கிழங்கினை மாதம் தோறும் புதியதாக வாங்கி வீட்டின் நிலைப்படியில் கட்டிவிட வேண்டும்.

- Advertisement -