விநாயகரை எப்படி கும்பிட்டால் நினைத்தது உடனே நடக்கும்? இந்த சூட்சம ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

pillaiyar
- Advertisement -

நினைத்த காரியம் தடையில்லாமல் நடப்பதற்கு விநாயகர் வழிபாடு தான் நமக்கு கை கொடுக்கும். காரியத்தடை விலக, முழுமுதற் கடவுளான விநாயகரை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு தான் இது. சில பேர் சில குறிக்கோளை மனதில் நினைத்து வைத்திருப்பார்கள்.

இந்த நாட்களுக்குள், இந்த வேலையை முடித்தே தீர வேண்டும் என்று. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் இந்த விநாயகர் தான். நம்பிக்கையோடு சூட்சமமான இந்த பரிகாரத்தை பின்பற்றினால் விநாயகர் அருளை முழுமையாக பெற முடியும்.

- Advertisement -

நினைத்த காரியம் நடக்க விநாயகர் வழிபாடு

உங்களுக்கு இருக்கும் சங்கடங்கள், காரிய தடை விலக வேண்டும் என்றால் மாதம்தோறும் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக சின்னதாக விநாயகரது சிலையை வீட்டில் வாங்கி வைத்து இந்த பூஜையை செய்தால் பலன் இரண்டு மடங்கு கிடைக்கும்.

கல்லினால் ஆன விநாயகர் சிலை அல்லது வெள்ளியில் விநாயகர் சிலை, அல்லது வேறு எந்த உலோகத்தில் விநாயகர் சிலை வாங்கி வைத்தாலும் நல்லது. சங்கடஹர சதுர்த்தி அன்று காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விட வேண்டும். பூஜை அறைக்கு சென்று ஒரு பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த பிரியாணி இலையில் பச்சை நிற பேனாவில் உங்களுடைய கோரிக்கையை எழுதி விடுங்கள். உதாரணத்திற்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் 15 நாட்களில் எனக்கு இவ்வளவு பணம் தேவை, 15 நாட்களில் இந்த கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும், பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க வேண்டும், அல்லது குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்.

கணவருக்கு வருமானம் பெருக வேண்டும் என்று உங்களுடைய எந்த கோரிக்கையை வேண்டும் என்றாலும் இந்த இலையில் எழுதி இதை கொண்டு போய் அப்படியே விநாயகருக்கு பாதங்களில் வைத்து விட வேண்டும். அந்த பிரியாணி இலையில் ஒரு வேண்டுதல் தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

சிலையாக இருந்தால் சிலைக்கு அடியில் இந்த பிரியாணியிலையை வைத்துவிடுங்ககள். விநாயகரது திருஉருவப் படம் இருந்தால் அந்த திரு உருவ படத்தில் பாதங்களுக்கு அடியில் இந்த இலையை வைக்கலாம். ஒரு விளக்கு ஏற்ற வேண்டும். தேங்காய் எண்ணெய் ஊற்றி மண் அகல் விளக்கு ஏற்றி, விநாயகர் அகவல் படித்து விநாயகரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

விநாயகர் அகவல் கண்டிப்பா படிங்க. மறக்காதீங்க. இந்த பாடலுக்கு அத்தனை சக்தி. படிக்க முடியாதவர்கள் வீட்டில் விநாயகர் அகவல் ஒலிக்க விடுங்கள். இந்த சங்கடஹர சதுர்த்தி அன்று நீங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால், அடுத்த சங்கடஹர சதுர்த்திக்குள் உங்களுடைய வேண்டுதல் நிறைவேற நிறைய வாய்ப்புகள் உள்ளது.

நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்யணும். அந்த இலையில் எழுதிய விஷயம் வெற்றிகரமாக முடிவதற்கு முயற்சிகளை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அதில் வரக்கூடிய தடைகளை போக்கக்கூடிய வேலையை அந்த விநாயகர் பார்த்துக் கொள்வார். இது ஒரு எளிமையையான சூட்சமமான தாந்த்ரீக பரிகாரம் என்று கூட வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் இதற்கு பவர் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி. அதை நீங்கள் வழிபாட்டை மேற்கொள்ளும் போது தான் புரிந்து கொள்ள முடியும். உங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை பிரியாணி இலையை விநாயகரது பாதங்களில் இருந்து எடுக்க வேண்டாம். கோரிக்கை நிறைவேறிய பின்பு அந்த பிரியாணி இலையை எடுத்து இரண்டாக கிழித்து கால் படாத இடத்தில் போடவும்.

இதையும் படிக்கலாமே: பசுமாட்டுக்கு உங்க கையால் இதை கொடுத்தால் பித்ரு தோஷம் உடனே விலகும்.

மீண்டும் இன்னொரு வேண்டுதலுக்காக இதே போல ஒரு பூஜையை, இன்னொரு பிரியாணி இலையை வைத்து சங்கடஹர சதுர்த்தி அன்று செய்யலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன எளிமையான இந்த ஆன்மீகம் வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -