முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள், மற்றும் கரும்புள்ளிகள் மறைய இந்த அற்புத க்ரீமை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம்

black
- Advertisement -

இன்றைய காலத்தில் மனிதன் உண்ணும் உணவில் அதிகப்படியான ரசாயன உரங்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் பாதிப்பு உண்டாகிறது. அது மட்டுமல்லாமல் உடலின் மேற்புறமுள்ள தோலிலும் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிலும் இளம் வயதுப் பிள்ளைகளுக்கு தான் தோல் பிரச்சினை அதிகமாக ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் கோழிக்கறி உண்ணும் குழந்தைகளுக்கு அவர்களின் பதினைந்து, பதினாறு வயதில் அளவுக்கதிகமான முகப்பருக்கள் வர ஆரம்பிக்கிறது. சிலர் இதனை கைகளை வைத்து கிள்ளி விடுவதால் முகத்தில் இதன் மூலம் அதிகப்படியான கருப்பு திட்டுகள் உண்டாகின்றன. இந்த கருப்புத் திட்டுகள் விடாப்பிடியாக முகத்தில் பதிந்துவிடுகின்றன. இவற்றை அகற்றுவதற்கு வீட்டிலேயே தயார் செய்யும் ஒரு சிறப்புத் க்ரீமை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

அதற்கு முதலில் 100 கிராம் வெந்தயத்தை எடுத்துக் கொண்டு அதனை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் வெந்தயப் பொடியை எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். அதன் பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் பச்சரிசி அரை ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவேண்டும். இவை இரண்டும் நன்றாக வெந்து சற்று கெட்டியானதும் அடுப்பை அனைத்து விட்டு, இதனை ஆற வைக்கவேண்டும். பின்னர் ஒரு வடிகட்டியை பயன்படுத்தி இதனை நன்றாக வடிகட்டி கொள்ள வேண்டும்.

பிறகு இதனுடன் இரண்டு ஸ்பூன் விட்டமின் இ ஆயில் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு இரண்டு ஸ்பூன் ஆலோவேரா ஜெல் சேர்த்து இவை அனைத்தையும் ஒன்று சேர 5 நிமிடம் தொடர்ந்து கலந்து கொண்டே இருக்க வேண்டும். பிறகு இந்த கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த க்ரீமை சிறிதளவு எடுத்துக் கொண்ட அதனை கண்களின் அடியில் மட்டும் தேய்க்காமல், முகத்தின் அனைத்து பகுதிகளிலும் நன்றாக தேய்த்துவிட வேண்டும். ஒரு பத்து நிமிட கைகளை வைத்து அனைத்து இடத்திலும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இருபது நிமிடம் இதனை முகத்தில் அப்படியே ஊறவிட வேண்டும்.

இவை நன்றாக காய்ந்து இறுகியதும் குளிர்ந்த நீரை வைத்து முகத்தை நன்றாகத் துடைத்து விட வேண்டும். இவ்வாறு தினமும் ஒரு முறை செய்து வர முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் மற்றும் தழும்புகள் மறைந்து முகம் பளிச்சென்று மாறிவிடும்.

இந்த க்ரீமைத் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் இதனை உபயோகித்து கொள்ளலாம். திடீரென்று ஏதாவது நிகழ்ச்சிக்கு வேண்டும் என்ற நேரத்திலும் இந்த கிரீமை முகத்தில் தடவி இவ்வாறு செய்வதன் மூலம் முகம் பளிச்சென்று மாறிவிடும். இந்த க்ரீமை பயன்படுத்திய பிறகு இனிமேல் நீங்கள் பார்லருக்கு சென்று ஃபேசியல் செய்ய வேண்டிய அவசியமே வராது.

- Advertisement -