ஷாம்புவை இந்த தண்ணீரில் கலந்து தலைக்கு போட்டு குளித்தால், தலைமுடி வெள்ளையாக மாறவே மாறாது. இருக்கும் வெள்ளை முடியும் சீக்கிரத்தில் கருப்பாக மாறும்.

hair9
- Advertisement -

தலைமுடியை அடர் கருப்பு நிறத்திற்கு மாற்ற, நரைமுடி வருவதை தள்ளிப் போட, இருக்கின்ற நரைமுடியை சீக்கிரத்தில் கருப்பாக மாற்ற, முடியை பளபளப்பாக சைனிங்காக வைத்துக் கொள்ள, பொடுகு தொல்லையிலிருந்து விடுபட, முடியை அடர்த்தியாக வளர செய்ய செலவே இல்லாமல் ஒரு குறிப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து சுலபமாக இந்த குறிப்பை பின்பற்றி வந்தால் தலைமுடி பிரச்சனைகளுக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு கிடைத்து விடும். வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த சிம்பிள் குறிப்பை நாமும் தெரிந்து கொள்வோம்

இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான முதல் பொருள் டீ தூள். பிளாக் டீ பவுடர் என்று கூட கிடைக்கின்றது. அந்த டீத்தூளை வாங்கி பயன்படுத்தினால் குறிப்புக்கு இரண்டு மடங்கு பலனை கொடுக்கும். அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் டீ துள் இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

பிறகு நீங்கள் எந்த ஷாம்பு பயன்படுத்தினாலும் அதையே இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பிராண்ட் ஷாம்பு தான் என்று அவசியம் கிடையாது. எந்த பிராண்ட் ஷாம்பு வேண்டும் என்றாலும் குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எலுமிச்ச பழ ஜூஸ் 1 ஸ்பூன் தேவை.

டீ தூள் – 2 ஸ்பூன், நீங்கள் பயன்படுத்த கூடிய ஷாம்பு – 2 ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு – 1 ஸ்பூன், இந்த 3 பொருட்கள்தான் தேவை. முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, டீ தூள் போட்டு, நன்றாக பத்து நிமிடங்கள் போல தண்ணீரை கொதிக்க வையுங்கள்.

- Advertisement -

1 டம்ளர் தண்ணீர் 3/4 டம்ளர் தண்ணீராக சுண்டி வந்ததும் இதை வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீர் நன்றாக ஆறிய பின்பு, நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு இரண்டு ஸ்பூனை பிளாக் டீ தண்ணீரில் ஊற்றி நன்றாக அடித்து கலக்குங்கள். அப்படியே நுரை பொங்கி வரும். அதன் பின்பு இறுதியாக 1 ஸ்பூன் அளவு எலுமிச்சை பழச்சாறை சேர்த்து மீண்டும் நன்றாக அடித்து கலக்குங்கள். அவ்வளவு தான். தலை முடிக்கு ஊட்டச்சத்தை கருமை நிறத்தை கொடுக்கக் கூடிய கலவை தயார். இதை எப்படி பயன்படுத்துவது.

உங்களுடைய தலையில் முதலில் தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தேங்காய் எண்ணெயை நன்றாக வைத்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். நன்றாக எண்ணெய் தலையில் ஊறிய பின்பு தண்ணீரை ஊற்றி தலையை நன்றாக நனைத்துக் கொண்டு, பிறகு தயார் செய்து வைத்திருக்கும் இந்த ஷாம்பு தண்ணீரை ஸ்கேல்பில் நன்றாக படும்படி போட்டு உங்கள் இரண்டு கையைக் கொண்டு தேய்த்து மசாஜ் கொடுங்கள்.

இந்த தண்ணீரும் தலைமுடியில் நன்றாக இறங்கும். பிறகு தலையில் அழுக்கு போக தேய்த்து முடியின் நுனி வரை தலையை அலசி கொள்ளுங்கள். ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து நன்றாக தலையை கசக்கி நல்ல தண்ணீரை ஊற்றி அலசி விட வேண்டும். அவ்வளவு தான். வாரத்தில் நீங்கள் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் தலைக்கு குளித்தாலும் ஷாம்புவை டீத்தூள் தண்ணீரில் கலந்து இப்படி குளித்து வாருங்கள். உங்களுடைய முடியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரு தீர்வு கிடைக்கும்.

- Advertisement -