காலகாலத்திற்கும் உங்கள் முடி கருகருவென அடர்த்தியாக இருக்க, இந்த கருப்பு தண்ணீரில் தலை முடியை அலசினால் போதும். ஒரு நரை முடி கூட எட்டிப் பார்க்காது.

hair20
- Advertisement -

காலத்திற்கும் நம்முடைய முடி கருப்பாக இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது. நம்முடைய தலைமுடி நீண்ட நாளைக்கு கருப்பாகவே இருக்க நிறைய நேரத்தை செலவழித்து, பணத்தை செலவழித்து, எவ்வளவோ விஷயங்களை செய்கின்றோம். ஆனால் எல்லா குறிப்புகளும் எல்லோருக்கும் பலனை கொடுப்பது கிடையாது. ஒரு சில குறிப்புகள் ஒரு சிலருக்கு சீக்கிரம் பலனை கொடுக்கும். ஒரு சில குறிப்புகள், ஒரு சிலருக்கு பலன் கொடுப்பதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும். உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற வாறு எந்த குறிப்பு உங்களுக்கு பலனைக் கொடுக்கின்றதோ, அதைத் தேர்ந்தெடுப்பது உங்களுடைய கையில்தான் உள்ளது.

நீங்கள் இதுநாள் வரை ஏதோ ஒரு குறிப்பை பின்பற்றி வந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த குறிப்பு உங்களுக்கு முழுமையான பலன் கொடுக்கின்றது என்றால் அந்த குறிப்பையே நீங்கள் பின்பற்றிக் கொள்ளலாம். நமக்கு செட்டான டிப்ஸை எப்போதுமே உடனடியாக மாற்றி மற்றொரு குறிப்புக்கு போகவே கூடாது. எனக்கு எதுவுமே ஒர்க் அவுட் ஆகல. நான் எல்லா குறிப்பையும் ட்ரை பண்ணி பாத்துட்டேன். அப்படின்னு சொல்லும் போது தான் புதிய புதிய குறிப்புகளை முயற்சி செய்ய வேண்டும். அந்த வரிசையில் இன்றைக்கு நரை முடியை கருப்பாக மாற்ற ஒரு சுலபமான குறிப்பு உங்களுக்காக.

- Advertisement -

முதலில் அடுப்பில் 1 டம்ளர் தண்ணீரை வைத்து நன்றாக கொதிக்க வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு டீ தூளை போட்டு கொதிக்க வைக்கவேண்டும். இதை  வடிகட்டினால் நமக்கு பிளாக் டீ கிடைக்கும். இந்த பிளாக் டீ தண்ணீரில், 2 டேபிள் ஸ்பூன் அளவு ஷாம்பூவை ஊற்றி கலந்து, 2 மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். அதன் பின்பு இந்த தண்ணீரை உங்களுடைய தலையில் போட்டு கசக்கி முடியை அலசி விட வேண்டும்.

அவ்வளவு தாங்க. ஷாம்புவில் இந்த பிளாக் டீ தண்ணீரை ஊற்றி கலந்து தலைக்கு குளிக்கும் போது, உங்களுடைய நரை முடி கருப்பாக மாறுவதோடு, முடி உதிர்வு குறையும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் சீக்கிரமே புதிய முடிகள் வளரத் தொடங்கும். இது ஒரு சுலபமான முறை. முயற்சி செய்து பார்த்தால் உங்களுக்கே உங்களுடைய தலையில் இருக்கக்கூடிய வித்தியாசம் நன்றாக தெரியும்.

- Advertisement -

தேவைப்பட்டால் டீ தூள் போட்டு தண்ணீரை கொதிக்க வைக்கும்போது, அதில் 1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து கொள்ளலாம். உங்களுக்கு தலைவலி தலைபாரம் வராது என்றால். ஏனென்றால் வெந்தயம் குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய பொருள். பெரும்பாலும் முடி உதிர்வு என்பது உடல் சூட்டால் ஏற்படுவது தான். வெந்தயத்தை சேர்க்கும் போது உங்களுடைய உடலில் சூடு தணிந்து முடி உதிர்வு இன்னும் சீக்கிரம் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும்.

வாரத்தில் ஒரு நாள் இந்த குறிப்பை பின்பற்றலாம். 13 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். டீ தண்ணீரில், ஷாம்புவை கலந்து ஊறவைத்து தலையில் போட்டு தலையை கசக்கிக் கொள்ள போகிறீர்கள் அவ்வளவு தான். (உங்கள் வீட்டில் டீ குடிக்க எந்த பிராண்ட் டீத்தூள் பயன்படுத்துவீங்கலோ, அதையே இந்த குறிப்புக்கும் பயன்படுத்தலாம்.) ட்ரை பண்ணி பாருங்க. 3 மாதத்தில் ரிசல்ட்டை கண்கூடாக காணமுடியும்.

- Advertisement -