முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் மறைந்து உங்கள் முகம் வெள்ளையாக மாற இந்த ஒரு க்ரீம் மட்டும் போதும்

face
- Advertisement -

பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே வெளியில் சென்று வேலை பார்த்து வீட்டிற்கு வருகின்றனர். இப்பொழுது இருக்கும் அனைத்து இளைய தலைமுறையினரும் கணினி சம்பந்தமான வேலைகளில் தான் அதிகமாக ஈடுபட்டு வருகிறார்கள். இப்போது சிறிய பெட்டிக்கடையில் இருந்து பெரிய ஐடி கம்பெனி வரை அனைவருமே கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு ஒரு நாள் முழுவதும் கணினி முன் அமர்ந்து வேலை பார்க்கும் பொழுது அவர்கள் கண்ணுக்கு கீழே கருவளையம் உண்டாகிறது. அது மட்டுமல்லாமல் சுற்றுச் சூழல் காரணமாக வெளியில் சென்று வரும் பொழுது முகத்தில் தேவையற்ற கருப்பு திட்டுகள் உருவாகிறது. அதேபோல் முகப்பருக்களால் உண்டாகும் கருப்பு தழும்புகளும் முகத்தில் ஆங்காங்கே அப்படியே நின்று விடுகிறது. இவற்றால் உங்கள் முகத்தின் அழகு பாதிக்கப்படுகிறது. எனவே இவை அனைத்தையும் சரிசெய்ய இந்த ஒரு க்ரீமை மட்டும் தயார் செய்து பயன்படுத்திப்பாருங்கள். வாங்க இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஒவ்வொரு வீட்டிலும் தினமும் சாப்பிட்டு முடித்த பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஏனென்றால் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஜீரண சக்தி அதிகரித்து உங்கள் வயிற்றில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் காலையில் முழுவதுமாக வெளியில் வந்து விடும். இதனால் உடலின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். அது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் வாழைப்பழம் கொடுக்க அவர்களின் வளர்ச்சி அதிக அளவில் இருக்கும்.

- Advertisement -

இவ்வாறு அனைவரது வீட்டிலும் வாழைப்பழம் சுலபமாக கிடைத்து விடும். எனவே இந்த கிரீம் செய்வதற்கு நமக்கு தேவையான ஒரு முக்கியமான பொருள் என்னவென்றால் அது வாழைப்பழத்தின் தோல் மட்டும் தான். முதலில் பிரிய வாழைப்பழமாக இருந்தால் இரண்டு வாழைப் பழத்தின் தோலை எடுத்து கொள்ள வேண்டும். அல்லது சிறிய பழமாக இருந்தால் 4, 5 வாழைப்பழத்தின் தோலை எடுத்து கொள்ளலாம்.

பிறகு வாழைப்பழத்தின் தோலை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் இதனை ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் சாதம் வடிக்கும் அரிசி அல்லது பச்சை அரிசியை மூன்று ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது இந்த பாத்திரத்தை வைக்க வேண்டும்.

- Advertisement -

இவை 15 நிமிடம் நன்றாக கொதித்த பிறகு அரிசியும் வாழைப் பழத்தோடு நன்றாக வெந்துவிடும். அரிசி சாதம் போன்று முழுவதுமாக வேகக்கூடாது. அரிசி பாதி அளவு தான் வெந்திருக்க வேண்டும். பின்னர் மீதம் இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு வாழைப் பழத் தொலையும், அரிசியையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.

இவை சிறிது நேரம் ஆறிய பிறகு இவற்றை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பேஸ்ட்டை ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு காற்று புகாதவாறு மூடிக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த கிரீமில் இருந்து ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் க்ரீம் எடுத்து முகத்தில் தடவி, 10 லிருந்து 15 நிமிடம் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு சிறிது நேரம் அப்படியே விட்டு விட இவை ஒரு ஃபேஸ் பேக் போன்று நன்றாக இறுகிவிடும். பின்னர் இதனை லேசாக தண்ணீர் வைத்து கழுவி விடவேண்டும். இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் இருக்கும் கருப்பு தழும்புகள் அனைத்தும் மறைந்து முகம் வெள்ளையாக மாறிவிடும்.

- Advertisement -