மீந்து போன சாதம் 1 கப் இருந்தா 10 நிமிஷத்தில் பஞ்சு போல இடியாப்பம் செய்யலாமே! இது மட்டும் தெரிஞ்சா இனி கொஞ்சம் சாதத்தையும் குப்பையில் கொட்டி வீணாக்க மாட்டீங்க!

idiyappam-rice_tamil
- Advertisement -

காலையில் வடித்த சாதம் இரவு வரை பல சமயங்களில் தாங்குவது கிடையாது. இதனால் புதிதாக தான் இரவில் சமைப்பது உண்டு. இப்படி மீதமான சாதத்தை சாயங்கால வேளையில் நீங்கள் பஞ்சு போல சாப்டான இடியாப்பம் இப்படி கூட தயார் செய்யலாம்! வடித்த சாதம் மீதமானால் இனி குப்பையில் வீணாகவே செய்யாது. அருமையான சுவையில் சுவையான மிருதுவான இடியாப்பம் மீதமான சாதத்தில் எப்படி தயார் செய்யப் போகிறோம்? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

  • மீதமான சாதம் – ஒரு கப்
  • அரிசி மாவு – ஒரு கப்
  • உப்பு – தேவையான அளவு.

செய்முறை

இடியாப்பம் செய்வதற்கு முதலில் மீதமான சாதம் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இடியாப்பம் செய்வதற்கு பச்சரிசியில் வடித்த சாதம் தான் தேவை என்பது இல்லை. புழுங்கல் அரிசியாக இருந்தாலும் செய்யலாம். இதற்கு பயன்படுத்தப்படும் மாவும் அப்படித்தான். ஒரு கப் சாதத்தை மீடியம் சைஸ் மிக்ஸர் ஜாரில் போட்டு ஒருமுறை நன்கு சுற்றி அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்து எடுத்த இந்த மாவு சரியாக அரைப்படவில்லை என்றால் மட்டுமே ஒரு ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். மற்றபடி முடிந்த அளவிற்கு தண்ணீர் கொஞ்சமும் சேர்க்காமல் அரைத்து எடுத்தால் தான் மாவு கெட்டியாக நமக்கு கிடைக்கும். ஒருமுறை அரைத்து எடுத்த பின்பு ஸ்பூன் வைத்து நன்கு எல்லா இடங்களிலும் கலந்து விட்டு மீண்டும் ஒருமுறை அரைக்கவும், அப்பொழுது தான் கட்டிகள் இல்லாமல் நைசாக அரைபடும்.

இப்பொழுது இந்த மாவை ஒரு பவுலுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். வடித்த சாதத்தில் நீங்கள் உப்பு போட்டு இருந்தால் அதற்கு ஏற்ப உப்பை பார்த்து சேர்த்துக் கொள்வது நல்லது. பின் உங்களிடம் இருக்கும் பச்சரிசி மாவு அல்லது புழுங்கல் அரிசி மாவு எதுவாகினும் தேவையான அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

மாவை எவ்வளவு கெட்டியாக கைகளில் ஒட்டாமல் பிசைய முடியுமா அவ்வளவு கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள். கடைசியில் கொஞ்சம் கையில் எண்ணெய் தடவி பிசையுங்கள் ஒட்டாமல் வரும். பின்னர் மாவை இடியாப்ப குழலில் இடுவதற்கு ஏற்ப சிறு சிறு பிரிவுகளாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் மாவை மூடி போட்டு மூடி வைத்துக் கொள்ளுங்கள், காற்றில் காயாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
பாசிப்பருப்பை வெச்சு ஒரு முறை இந்த குழம்பை வச்சு பாருங்க. இதை சாப்பிட்ட பிறகு எல்லாரும் உங்களை புகழ்ந்து தள்ளிடுவாங்க. அந்தளவுக்கு டேஸ்ட் செமையா இருக்கும். டிபன் சாப்பாடு எல்லாத்துக்கும் இது ஒன்னே போதும்

பின்னர் கொஞ்ச மாவை இடியாப்ப குழலில் இட்டு நீங்கள் வழக்கம் போல இடியாப்பம் பிழிவது போல பிழிந்து கொள்ள வேண்டும். பின்னர் இட்லி பானையில் வைத்து பத்து நிமிடம் அவித்து எடுத்தால் பூ போல பஞ்சு மாதிரி மிருதுவான சுவையான இடியாப்பம் தயார்! மீதமான சாதத்தில் பத்தே நிமிடத்தில் இடியாப்பத்தை இதே போல நீங்களும் தயார் செய்து சுடச்சுட குருமாவுடன் பரிமாறி பாருங்கள் அருமையாக இருக்கும்.

- Advertisement -