பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடியாதவர்கள், இதை செய்யுங்கள். இந்த விஷயத்தை செய்தாலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றிய பலனை நம்மால் பெற முடியும்.

brahma-muhurtham
- Advertisement -

அதிகாலை விடியும் பொழுதில் சுத்தமான காற்று வீசிக் கொண்டிருக்கும் சமயத்தில், இந்த பிரபஞ்சம் நேர்மறை ஆற்றலை பூமிக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீங்கள் மனதார நினைக்கும் எந்த ஒரு காரியமும் நிச்சயமாக நடந்தே தீரும். இறை ஆற்றல் நிரம்பி வழியும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வது நன்மை தரும் என்பது சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விஷயம்.

deepam

ஆனால் நிறைய பேருக்கு இன்றைய சூழ்நிலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து பூஜையறையில் தீபம் ஏற்றுவது என்பது இயலாத காரியமாக இருக்கிறது. சில பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் சுத்தமாக இருக்கும் சமயத்தில் முகம் கை கால்களை அலம்பி விட்டு பூஜையறையில் தீபம் ஏற்றலாம் என்று.

- Advertisement -

ஆனால் சில பேருக்கு குளிக்காமல் பூஜை அறைக்குள் செல்வது பிடிக்காது. குளிக்காமல் தீபம் ஏற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு வேறு ஏதாவது ஒரு வழி உள்ளதா. பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும், பிரம்ம முகூர்த்தத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்த பலனைப் பெற வேறு ஒரு வழி உள்ளது.

sugar

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு இனிப்புப் பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை, நாட்டு சர்க்கரை, வெல்லம், இதில் உங்கள் வீட்டில் எது இருந்தாலும் சரி. அதில் சிறிதளவை எடுத்துக் கொண்டு போய் வீட்டு வாசலுக்கு வெளியே, நீங்கள் கோலம் போடும் இடத்தில் ஒரு ஓரமாக போட்டு விடுங்கள்.

- Advertisement -

பிரம்ம முகூர்த்தத்தில் அன்னதானம் செய்த புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும். அதாவது அந்த நேரத்தில், ஓரறிவு கொண்ட புழு பூச்சிகள், எறும்புகள், வண்டுகள் தூங்காமல் தனக்கான இரை தேடிக் கொண்டுதான் இருக்கும். அந்த சிறுசிறு பூச்சிகளுக்கு நீங்கள் போடும் இந்த இனிப்பு பொருள் உணவாக அமையும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் பசியோடு இரை தேடிக் கொண்டிருக்கும் அந்த ஜீவன்கள், நீங்கள் போட்ட உணவை பிரம்ம முகூர்த்தத்தில் சாப்பிட்டு, உங்களை வாழ்த்த, அந்த வாழ்த்து முழுமையாக உங்களை வந்து சேரும். இதனால் உங்களுடைய வாழ்க்கையில் கோடான கோடி புண்ணியத்தை நீங்கள் அடையலாம்.

meditation

எறும்புகளுக்கு இறை போட்டு விட்டு, வீட்டிற்குள் வந்து பத்து நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும். மனதார உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு என்ன தேவையோ அதை நேர்மறையாக நினைத்து தியானம் செய்ய வேண்டும். அதன் பின்பு நீங்கள் மீண்டும் உறங்கச் செல்லலாம்.

பிரம்ம முகூர்த்தம் நேரம் / டைம்

குறிப்பாக இந்த வேலைகளை அதிகாலை 3.00 மணியிலிருந்து 5.00 மணிக்குள் செய்து முடித்திருக்க வேண்டும். இந்த இரண்டு மணி நேரத்தில் நீங்கள் செலவழிக்கப் போகும் 15 நிமிடம் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்களை உண்டு பண்ணும்.
vishnu-bramma

இதை செய்வதற்கு 15 நிமிடத்திற்கு மேல் எடுக்காது. வெறும் 48 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மாற்றத்தை நீங்களே உணரலாம். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து நல்ல பலனை பெறவேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -