புதன் ஹோரையில் செய்ய வேண்டியவை.

buthanhorai
- Advertisement -

நேரம் பார்த்து செய்யக்கூடிய அனைத்து செயல்களும் வெற்றி அடையும் என்பது ஜோதிட ரீதியாக கூட கூறப்படும் ஒரு உண்மையாகும். அந்த வகையில் புதன் ஹோரையில் செய்யக்கூடிய காரியங்களை பற்றியும் அதில் வெற்றியடைய செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளை பற்றியும் தான் இந்த ஜோதிடம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒரு நாளில் ஒவ்வொரு கிரகத்திற்கும் சாதகமான நேரம் என்பது இருக்கும். அந்த நேரத்தை பார்த்து அந்த கிரகத்திற்குரிய வேலையை நாம் செய்தால் கண்டிப்பான முறையில் அந்த வேலை வெற்றியடையும் என்று கூறப்படுகிறது. அந்த வரிசையில் இன்று நாம் புதன் ஹோரையை பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

புதன் பகவானின் ஆதிக்கம் நிறைந்த நேரத்தை தான் புதன் ஹோரை என்று கூறுகிறோம். புதன் பகவான் பொதுவாக தாய்மாமன் ரீதியாக நடக்கக்கூடிய செயல்கள் அனைத்திற்கும் காரணமாக திகழ்கிறார். அது மட்டுமல்லாமல் உடலில் இருக்கக்கூடிய நரம்பு, படிப்பு, ஞானம், அறிவு, சிந்தனை, ஞாபக சக்தி, யோசனை, பேச்சுத்திறமை போன்ற அனைத்திற்கும் அதிபதியாக திகழக்கூடியவர்தான் புதன் பகவான்.

ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் சாதகமான சூழ்நிலையில் இருந்தால் மேற்ச்சொன்ன அனைத்தும் சாதகமான சூழ்நிலையில் அமையும். இதே பாதகமாக அமைந்தால் இவை அனைத்தும் சரியாக அவர்களுக்கு அமையாது. இந்த விஷயங்கள் தொடர்பான செயல்களில் நாம் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பொழுது அந்த நாளுக்குரிய புதன் ஹோரையை தேர்வு செய்து செயல்பட்டால் கண்டிப்பான முறையில் அனைத்தும் வெற்றியடையும்.

- Advertisement -

உதாரணமாக படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை செய்யும் பொழுது புதன் ஹோரையை தேர்வு செய்து செய்ய வேண்டும். மேலும் ஒரு வேலைக்காக நேர்காணலுக்கு செல்லும் பொழுது புதன் ஹோரையை கருத்தில் கொண்டு சென்றால் அந்த நேர்காணலில் வெற்றி அடைய முடியும். இது மட்டுமல்லாமல் புதன்கிழமை அன்று புதன் ஹோரையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்து வர புதன் பகவானால் நமக்கு நன்மைகள் உண்டாகும்.

மேலும் ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்ற நட்சத்திரங்களில் புதன் பகவானுக்குரிய பூஜையை செய்யும் பொழுதும் நாம் அதில் வெற்றி பெறுவோம். தசமி, சப்தமி போன்ற திதிகளும் புதன் பகவானுக்குரிய திதிகளாக கருதப்படுகிறது. மேலும் மரகத பச்சை கல்லை அணிவதன் மூலம் புதன் பகவானின் அருளை நம்மால் பெற முடியும்.

- Advertisement -

புதன் பகவான் பாதகமான சூழ்நிலையில் இருக்கும் ஜாதகக்காரர்கள் அதிகப்படியாக பச்சை நிற ஆடைகளை அணிவதன் மூலம் அவரின் அருளை பெற முடியும். படிப்பு சார்ந்த பிரச்சினைகள் இருக்கும் குழந்தைகளுக்கு வித்யா சரஸ்வதி எந்திரத்தை வாங்கிக் கொடுப்பதன் மூலம் புதன் பகவானின் அருளை அவர்கள் பரிபூரணமாக பெற்று சிறப்பாக படிப்பார்கள்.

இதையும் படிக்கலாமே: தொழிலில் வெற்றி அடைய பரிகாரம்.

நம் முன்னோர்கள் வகுத்து வைத்த இந்த ஹோரையை பயன்படுத்தி செயலாற்றுவதன் மூலம் வாழ்க்கையில் பல வெற்றிகளை நம்மால் அடைய முடியும்.

- Advertisement -