தொழிலில் வெற்றி அடைய பரிகாரம்.

thozhil pariharam
- Advertisement -

தொழிலில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக பல பரிகாரங்களை செய்கிறோம். அவ்வாறு செய்வதற்கு முன்பு நம்முடைய ராசிக்கேற்ற பரிகாரம் என்ன என்பதை அறிந்து செய்தால் முழுமையான பலனை நம்மால் பெற முடியும். இந்த ஜோதிடம் குறித்த பதிவில் 12 ராசிகளுக்கும் தொழில் சிறப்பிற்குரிய பரிகாரத்தைப் பற்றி பார்க்க போகிறோம்.

மேஷ ராசிக்காரர்கள் சுத்தமான மஞ்சள் தூளை சிவப்பு நிற காகிதத்தில் மடித்து தொழில் நடக்கும் இடத்திலும், கல்லாப்பெட்டியிலும் வைப்பதன் மூலம் லாபம் அதிகரிக்கும். மேலும் செவ்வாய்க்கிழமை தோறும் இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொள்வதன் மூலம் தடைகளை தவிர்க்க முடியும். ரிஷப ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி நாராயணர் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் மகாலட்சுமிக்கு ஒரு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும் தங்களால் இயன்ற அளவு வாயில்லா ஜீவன்களுக்கு உணவு தானம் செய்வதன் மூலம் லாபம் பெருகும்.

- Advertisement -

மிதுன ராசிக்காரர்கள் தினமும் காலையில் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு தியானம் செய்த பிறகே தொழில் நடத்தும் இடத்திற்கு செல்ல வேண்டும். மேலும் அவ்வாறு செல்லும் பொழுது வாசனை திரவியங்களை போட்டுக் கொண்டு செல்வதன் மூலம் அவர்களிடம் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகும். கடக ராசிக்காரர்கள் ஒரு தட்டில் கற்பூரத்தையும் செந்தூரத்தையும் சேர்த்து வைத்து கற்பூரத்தை ஏற்றி அது இரண்டும் நன்றாக எரிந்து முடித்த பிறகு அந்த சாம்பலை வெள்ளை நிற காகிதத்தில் மடித்து தொழில் செய்யும் இடத்திலும் கல்லாப்பெட்டியிலும் வைக்க வேண்டும். மேலும் திங்கட்கிழமை தோறும் வெள்ளை நிற ஆடை அணிவதன் மூலம் லாபம் இரட்டிப்பாகும்.

சிம்ம ராசிக்காரர்கள் காலையில் தொழில் செய்யும் இடத்திற்குள் நுழைவதற்கு முன்பும் மாலை தொழில் செய்யும் இடத்தில் இருந்து கிளம்புவதற்கு முன்பும் வாசல் படியை தொட்டு வணங்கி பிறகு செல்ல வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தொழிலில் இருக்கும் தடங்கல்கள் நீங்கும். கன்னி ராசிக்காரர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் புதன்கிழமை தோறும் புதன் பகவானுக்கு பச்சை பயிரை நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும். தொழில் செய்யும் இடத்தில் செருப்பு, துடப்பம் போன்றவற்றை கண்ணில் படாத அளவுக்கு மறைத்து வைப்பதன் மூலம் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

துலாம் ராசிக்காரர்கள் தங்களுடைய பெற்றோரையும், வாழ்க்கைத் துணையையும் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களின் தொழிலில் வெற்றி அடைவார்கள். மேலும் வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு இனிப்பை தானமாக வழங்க வேண்டும். விருச்சக ராசிக்காரர்கள் தினமும் இஷ்ட தெய்வத்தை நினைத்து தியானம் செய்ய வேண்டும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோவிலுக்கு சென்று சிவப்பு நிற இனிப்பு பொருட்களை பக்தர்களுக்கு பிரசாதமாக தருவதன் மூலம் தொழிலில் வெற்றி அடைய முடியும்.

தனுசு ராசிக்காரர்கள் காலையில் காக்கை, பசு, நாய் போன்றவற்றிற்கு உணவளித்த பிறகே தங்கள் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் இருக்கும் துளசி செடிக்கு பால் அபிஷேகம் செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். மகர ராசிக்காரர்கள் தாங்கள் தொழில் செய்யும் இடத்தில் காமாட்சி விளக்கு தீபம் ஏற்றி ஊதுபத்தி பொருத்தி வைக்க வேண்டும். மேலும் தொழில் செய்யும் இடத்தில் கோபப்பட்டு கத்துவது அல்லது நகத்தை வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதன் மூலம் லாபத்தை பெற முடியும்.

- Advertisement -

கும்ப ராசிக்காரர்கள் தினமும் வீட்டில் இருந்து தொழில் செய்யும் இடத்திற்கு கிளம்பும் பொழுது சிறிது சர்க்கரை அல்லது வெல்லத்தை எறும்புகளுக்கு தானமாக தர வேண்டும். மேலும் காக்கைக்கு தினமும் உணவு வழங்குவதன் மூலம் தொழிலில் இருக்கும் தடைகள் நீங்கும். மீன ராசிக்காரர்கள் தங்களுடைய ஆசிரியர்களுக்கு வஸ்திரம், தனம் போன்றவற்றை தானம் செய்து அவர்களிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும். மேலும் வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு கொண்டை கடலை மாலை சாற்றி வழிபடுவதன் மூலம் தங்கள் தொழிலில் வெற்றி அடைய முடியும்.

இதையும் படிக்கலாமே: கார்த்திகையில் வெற்றி வாய்ப்பை பெறப் போகும் ராசிகள்

தங்களுடைய ராசிக்கு ஏற்றவாறு பரிகாரங்களை தொடர்ந்து செய்து தாங்கள் செய்யும் தொழிலில் லாபங்களையும், வெற்றிகளையும் குவிக்கலாம்.

- Advertisement -