புதன் பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.

buthan peyarchi
- Advertisement -

நவகிரகங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசியிலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சியாகி செல்வார்கள். இது போல் 12 ராசிகளுக்கும் மாறி மாறி சென்று கொண்டே இருப்பார்கள். அவ்வாறு செல்லும் பொழுது அதனால் சில ராசிகளுக்கு நல்ல பலன்களும் சில ராசிகளுக்கு தீய பலன்களும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. அந்த வகையில் புதன் பகவானின் பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகளை பற்றி தான் இந்த ஜோதிடம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

புத்திசாலித்தனம், அறிவு, கல்வி, ஞானம், பேச்சு திறமை, நரம்பு தொடர்பான நோய்கள் போன்ற அனைத்திற்கும் காரணமாக விளங்க கூடியவர்தான் புதன் பகவான். பொதுவாக ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சியாகி செல்வார்கள். அதற்கு மாறாக புதன் பகவான் முன்னோக்கி செல்வதற்கு பதிலாக தான் இருந்த தனுசு ராசியில் இருந்து பின்னோக்கி விருச்சிக ராசிக்கு சென்றிருக்கிறார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் ஆறாம் வீட்டில் இருந்து பின்னோக்கி பயணம் செய்ய தொடங்கியுள்ளார். அதனால் நல்ல பலன்கள் கிடைப்பது என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. மேலும் அவர்களுடைய வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அந்த சிக்கல்களை சரி செய்வதற்குரிய தன்னம்பிக்கையும் குறைய ஆரம்பிக்கும். குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில், வேலை தொடர்பான அனைத்து செயல்களிலும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

வீண் விரையம் ஏற்படுவது, மனம் சஞ்சலப்படுவது, உடல் உபாதைகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. எந்த செயலை செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நன்மையை தரும். மேலும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதை உடனே கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். செலவுகள் செய்யும் பொழுது மிகவும் கவனமாக செய்வது நன்மையை தரும்.

- Advertisement -

ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் எட்டாம் வீட்டில் இருந்து பின்னோக்கி செல்ல தொடங்கி உள்ளார். இதனால் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும் என்பதால் முடிந்த அளவிற்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நன்மை தரும். மேலும் செய்யும் செலவுகளை சுப செலவுகளாக மாற்றுவது புத்திசாலித்தனம்.

கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நன்மையைத் தரும். வீட்டிலும், வெளிவட்டாரத்திலும் பேசும் பொழுது மிகவும் கவனமாக பேச வேண்டும். தேவையற்ற வாக்குறுதிகள் தருவதை முற்றிலும் தவிர்ப்பது நன்மையை தரும். தங்களின் உடல் நலத்தை கவனித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தன் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் உடல் நலத்திலும் கவனம் செலுத்துவதன் மூலம் மருத்துவ செலவை குறைத்துக் கொள்ள முடியும்.

- Advertisement -

மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் ஒன்பதாம் வீட்டில் இருந்து பின்னோக்கி பயணம் செய்ய ஆரம்பித்து உள்ளார். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் முடிந்த அளவிற்கு பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும். பேசும் வார்த்தையில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களை மேற்கொள்ளும் பொழுது உரிய பாதுகாப்புடன் மேற்கொள்ள வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் யாரிடமும் பணத்தை கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். குடும்ப உறுப்பினருடன் விட்டுக் கொடுத்து பொறுமையாக செல்ல வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் முன்னேற மீன ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

புதன் பகவானுக்குரிய அதி தேவதையாக திகழக்கூடிய பெருமாளை புதன்கிழமை தோறும் புதன் ஹோரையில் வழிபடுவதன் மூலமும், பச்சை பயிரை தானமாக தருவதன் மூலமும் புதனின் கெடுபலன்களில் இருந்து ஓரளவுக்கு விடு பெற முடியும்

- Advertisement -