வாழ்க்கையில் முன்னேற மீன ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

Guru sappadu
- Advertisement -

நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குறியீடுகள் இருக்கும். பெரும்பாலும் அந்த ராசிக்காரர்களின் தன்மையும் இந்த குறியீடுக்கான தன்மைகளும் ஒத்துப் போகக் கூடியதாக இருக்கும். அதே போல் எந்த ஒரு ராசிக்கும் கணிக்கும் பொழுது இந்த குறியீடுகளையும் கருத்தில் கொண்டு அவர்களுடைய முன்னேற்றங்கள் கணிக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் ராசிகளில் கடைசி ராசியான மீன ராசிக்காரர்கள் எந்த உணவை உண்ணக் கூடாது. அவர்கள் எந்த மாதிரியான பரிகாரத்தை பின்பற்றினால் அவர்களுடைய வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும் என்பதை பற்றி ஜோதிடம் கூறும் தகவலை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மீன ராசியினர் வாழ்க்கையில் முன்னேற பின்பற்ற வேண்டிய பரிகார முறைகள்

பொதுவாகவே மீன ராசிக்காரர்கள் தயாள குணம் கொண்டவர்களாகவும் அமைதியானவர்களாகவும் பிறருக்கு உதவுவதில் கொடைவல்லாகவும் இருப்பார்கள். அப்படியான இந்த மீன ராசிக்காரர்களின் அதிபதியான தெய்வம் குரு பகவான்.

குரு ஒருவரை பார்த்தாலே அவர்களுக்கு கோடி பலன் கிடைக்கும் போது அந்த குரு பகவானே தங்களுடைய ராசியின் அதிபதியாக வைத்திருக்கக் கூடிய மீன ராசியினர் எப்படி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ஆனாலும் சில இடங்களில் மீன ராசிக்காரர்கள் எப்போதும் துன்பப்பட்டுக் கொண்டும் ஏமாந்து கொண்டும் இருப்பார்கள். அதற்கு ஆன்மீகம் கூறும் காரணம் இதோ.

- Advertisement -

இந்த ராசிக்காரர்களின் குறியீடு என்று பார்த்தால் அது மீன். ஆகையால் மீன ராசிக்காரர்களில் அசைவம் உண்பவர்களாக இருந்தால் மீன் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஒரு விஷயத்தை அவர்கள் வாழ்க்கையில் கடைபிடித்தால் அவர்கள் பலவிதமான மாற்றங்களை பெற முடியும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதை செய்வதுடன் அவர்கள் வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற உடையை அணிவது கட்டாயமாக பின்பற்ற வேண்டும். ஏனெனில் மஞ்சள் குரு பகவானுக்கு உகந்த நிறம். அந்த மஞ்சள் நிறத்தை வியாழன் கிழமையில் உடுத்தும் போது அவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி மஞ்சள் நிறத்திலான ஏதேனும் ஒன்றை தினமும் அவர்கள் கையில் வைத்திருப்பது போல பார்த்துக் கொள்ளலாம். இதுவும் அவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.

- Advertisement -

இத்துடன் வியாழக்கிழமையில் மூன்று செவ்வாழை எடுத்து அதன் நடுப்பகுதியில் இருக்கும் பழத்தை எடுத்து விட்டு நெய் ஊற்றி திரி போட்டு கொஞ்சம் பச்சை கற்பூரமும் நெய்யில் சேர்த்து குரு பகவானுக்கு தொடர்ந்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீப பரிகாரத்தை அவர்கள் செய்ய செய்ய அவர்கள் வாழ்க்கையில் பணம் பொன் பொருள் அனைத்தும் சேர்ந்து சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் வாழ்வார்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

இதையும் படிக்காலமே: பிரதோஷ நாளில் ஏற்ற வேண்டிய தீபம்

இந்த பதிவில் உள்ள தகவல்கள் மீன ராசி காரர்கள் நம்பிக்கையுடன் பின்பற்றினால் அவர்கள் வாழ்க்கை நல்ல முறையில் பிரகாசமாக மாறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கை இருப்பின் செய்து பலன் பெறலாம்.

- Advertisement -