உங்களின் புதன் கிரக தோஷம் நீங்க இதை செய்யுங்கள் போதும்

budhan
- Advertisement -

ஆண், பெண் இருவருக்கும் அவர்களின் இல்லற வாழ்வு முழுமை அடைவதே ஆரோக்கியமான குழந்தைப்பேறு கிடைத்த பிறகு தான். உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு நபரின் வாழ்வும் எப்படி நவகிரகங்களால் ஆதிக்கம் செலுத்தபடுகிறதோ, அதே போல் ஒருவருக்கு புத்திர பாக்கியம் உண்டாகவும் நவக்கிரக நாயகர்களின் அருளாற்றல் இன்றியமையாததாகிறது. அதிலும் புதன் பகவானின் ஆதிபத்தியம் ஒரு நபருக்கு குழந்தைப்பேறு கிடைப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஜாதகங்களில் சிலருக்கு புதனின் பாதகமான நிலைகளால் குழந்தைப்பேறு ஏற்படுவதில் சிக்கல் உண்டாகிறது. இத்தகைய புத்திர பாக்கிய தடைகளை நீக்கி பிள்ளைப்பேறு கிடைக்க செய்யும் ஒரு எளிய பரிகாரம் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

budhan

ஒரு மனிதனின் உடலில் நரம்புகள் மீது ஆதிக்கம் செலுத்தும் கிரகமாக புதன் பகவான் இருக்கிறார். மேலும் புத பகவான் ஒரு நபரின் தாய்மாமன், மாமனார் போன்ற உறவுகளுக்கு காரகத்துவம் வகிக்கிறார். எனவே சென்ற பிறவியில் தனது தாய் மாமன் மற்றும் மாமனாரை துன்புறுத்தியதாலும், அவர்களின் வாழ்வை சீரழித்ததாலும் அவர்களின் சாபத்தைப் பெற்று, இப்பிறவியில் ஜாதகத்தில் புதன் பகவானால் தோஷம் உண்டாகி பிள்ளை பேறு கிடைக்காத நிலை ஏற்படுகிறது. ஒரு அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் தங்களின் ஜாதகத்தை காட்டி தங்களுக்கு புதன் கிரகம் காரணமாகத்தான் குழந்தை பாக்கியம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொண்டு, கீழ்கண்ட பரிகாரத்தை செய்து விரைவிலேயே அழகான, ஆரோக்கியமான குழந்தை பாக்கியம் பெறலாம்.

- Advertisement -

100 கிராம் தரமான பாசி பருப்புகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பாசி பருப்புகளை ஒன்பது பாகங்களாக பிரித்துக் கொண்டு, ஒரு தூய்மையான வெள்ளைத் நிற காடா துணியை எடுத்து, ஒன்பது துண்டுகளாக பிரித்து இந்த ஒன்பது பாக பாசி பருப்புகளை, அந்த ஒன்பது துண்டுகளாக இருக்கும் துணியில் போட்டு பொட்டலமாக முடிந்து கொள்ள வேண்டும். பிறகு ஒன்பது துணி முடிப்புகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து விட வேண்டும். அதில் ஒரு முடிப்பை இரவில் கணவன் – மனைவி இருவரும் தங்கள் படுக்கையில், இருவருக்கும் சேர்த்து ஒரே தலையணைக்கு அடியில் வைத்து கொண்டு உறங்க வேண்டும்.

pachai_payaru

மறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மனைவி கை, கால், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைத்த அந்த துணி முடிப்பை கையில் வைத்துக் கொண்டு, புதன் பகவானை மனதில் நினைத்து புதன் பகவானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் என ஒன்பது முறை மனதார துதித்து வழிபட வேண்டும்.

- Advertisement -

Baby

இப்படி வழிபட்டு முடிந்ததும் அந்த முடிச்சை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். இதே போல் மீதமுள்ள முடிச்சுகளை வைத்து ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய வேண்டும். பத்தாவது நாள் காலையில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஒன்பது பாசி பருப்புகள் முடிந்த துணி பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு, ஓடும் ஆற்று நீர் அல்லது கண்மாயில் யாரும் பார்க்காத போது போட்டு விட்டு வர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு புதன் கிரகத்தால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்குகிறது. இந்தப் பரிகாரம் செய்த 45 நாட்களுக்கு பிறகு புத்திர தோஷம் நீங்கி மனைவி வயிற்றில் கரு உருவாக புதன் பகவான் அருள் புரிவார்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் வேண்டுதல் நிறைவேற இதை செய்யுங்கள் போதும்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Budhan putra dosha pariharam in Tamil. It is also called as Budhan graha dosha in Tamil or Kulanthai bakkiyam pera in Tamil or Putra dosham neenga in Tamil or Budhan graham in Tamil.

- Advertisement -