தொழில் விருத்தி ஆக சொல்ல வேண்டிய மந்திரம்

durgai busness man
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் வேலை தேடுவதும் வேலை கிடைப்பதும் அறிய செயலாக தான் உள்ளது. அது மட்டும் இன்றி வேலை கிடைத்தும் அதில் நிரந்தரமாக பணியாற்ற முடியாத சூழ்நிலை பலருக்கும் உள்ளது. இப்படியான நேரத்தில் பெரும்பாலானோர் சொந்தமாக ஏதாவது தொழில் செய்து கொள்ளலாம் என்று தான் யோசிக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையால் இன்று பலரும் சொந்த தொழில் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

இது உண்மையிலே நல்ல விஷயம் தான். ஆனால் ஒரு தொழிலை துவங்குவதற்கு முன்பு நாம் அதற்கான முன்னேற்பாடுகளை சரியான முறையில் செய்து விட வேண்டும். அது தொழில் பற்றிய அனுபவமாக இருக்கட்டும் அல்லது அதை சார்ந்த அனுபவமாக இருந்தாலும் முறையாக தெரிந்த பின் தான் துவங்க வேண்டும். இத்துடன் எந்த தொழிலும் நம்முடைய மேற்பார்வையில் பார்ப்பது தான் மிகவும் சிறந்தது.

- Advertisement -

இப்படி நீங்கள் துவங்கும் தொழில் சிறியதாக இருந்தாலும் சரி அல்லது பெரிய அளவில் இருந்தாலும் சரி நீங்கள் எடுக்கும் முயற்சியுடன் சேர்த்து இந்த ஒரு எளிய பரிகாரத்தையும் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் தொழில் பல மடங்கு விருத்தி அடைவதற்கான யோகம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

வியாபாரம் விருத்தி அடைய சொல்ல வேண்டிய மந்திரம்

இந்த மந்திரத்தை நீங்கள் பிரம்ம முகூர்த்த வேளையில் தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி இந்த மந்திரத்தை சொல்ல துவங்கும் நாள் வளர்பிறை நாளாக இருக்க வேண்டும். தேய்பிறை நாளில் இதை சொல்லத் தொடங்க வேண்டாம். ஏனெனில் நம்முடைய வியாபாரமானது பெருக வேண்டும் அல்லவா.

- Advertisement -

பிரம்ம முகூர்த்த வேளையில் குளித்த பிறகு ஒரு புது செப்பு சொம்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றி சிறிதளவு பச்சைக் கற்பூரம், சிறிதளவு மஞ்சள் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு பூஜை அறையில் அமர்ந்து கீழ்வரும் மந்திரத்தை சொல்ல துவங்குங்கள்.

மந்திரம்
ஓம் ஹ்ரீம் தும் துர்காயை
சர்வ தர்ஷா
ஹ்ரீம் தும் பட்

- Advertisement -

இந்த மந்திரத்தை சொம்பு தண்ணீரை கையில் வைத்துக் கொண்டு 108 முறை சொல்லுங்கள். அதன் பிறகு நீங்கள் தொழில் செய்யும் நிறுவனம் அல்லது கடை எதுவாக இருந்தாலும் அங்கு இந்த தண்ணீரை தெளித்து விடுங்கள். இந்த தண்ணீரை அனைத்து இடத்திலும் தெளிக்க வேண்டும். அது மிகவும் முக்கியம்.

இதை அனைத்து இடத்திலும் தெளிந்த பிறகு மீதம் தண்ணீர் இருந்தால் நீங்கள் வியாபாரம் செய்யும் இடம் அல்லது பணம் வைக்கும் இடம் இருக்கும் அல்லவா, அந்த இடத்தின் ஈசானி மூலையில் ஒரு மரப்பலகையின் மீது இந்த சொம்பை வையுங்கள். இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று தண்ணீரை கையில் வைத்து மந்திர சொல்லி வழிபாடு செய்த பிறகு சொம்பை தரையில் வைக்க கூடாது.

இதையும் படிக்கலாமே: வற்றாத செல்வத்தை பெற லட்சுமி நரசிம்ம வழிபாடு

இந்த பரிகாரத்தை புதிதாக தொழில் துவங்குவர்களும் செய்யலாம். ஏற்கனவே தொழில் துவங்கி நடத்திக் கொண்டிருப்பவர்களும் செய்யலாம். எந்த ஒரு செயலையும் துவங்குவதற்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்தால் அதற்கான பலன் சற்று கூடுதலாக கிடைக்கும் அவ்வளவு தான். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருக்குமெனில் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -