இது ஒண்ணு மட்டும் உங்க கையில இருந்தா உங்களுக்கு வயசே ஆகாது, அப்புறம் உங்கள பார்க்கிறவங்க, எப்படி இன்னும் இவ்வளவு இளமையா இருக்கீங்கன்னு ஆச்சர்யமா கேட்பாங்க.

- Advertisement -

இந்த முதுமை தோற்றம் என்பது முன்பெல்லாம் 50 வயதை கடந்தவர்கள் மட்டும் தான் தெரியும். இப்பொழுதெல்லாம் அப்படி அல்ல 30 வயதை கடக்கும் முன்னே முகத்தில் சுருக்கங்கள் தோன்றி விடுகிறது. இதனால் விரைவில் முதுமை தோற்றமும் வந்து விடுகிறது. இந்த பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வு தான் இந்த ஆயில். இதை எப்படி தயாரிப்பது, எதைக் கொண்டு தயாரிப்பது என்பது எல்லாம் இந்த அழகுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம் உடலுக்கு எப்படி ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். அதே போலத் தான் சருமத்திற்கு பயன்படுத்தும் பொருட்களில் அதற்கான ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டும். அப்போது தான் முகம் நல்ல பொலிவுடன் இருக்கும். முன்பெல்லாம் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்ககளுக்கு 60, 70 வயது என்று சொன்னால் கூட நம்ப முடியாத அளவிற்கு தான் அவர்களின் உருவமும், தோற்றமும் இருந்தது. அவர்கள் அழகிற்கென தனியாக எதையும் பயன்படுத்தவில்லை என்றாலும், உண்ணும் உணவில் இருந்து வாழும் வாழ்வியல் முறை வரை அனைத்திலும் இயற்கை முறைகளையே கடைப் பிடித்தார்கள்.

- Advertisement -

இன்றைய சூழ்நிலை அதை அப்படியே மாற்றி விட்டது சரியான உறக்கமின்மை, மன அழுத்தம், நேரத்திற்கு சாப்பிடாதது என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். இத்தனையும் செய்து நம்முடைய நலத்தை நாமே கெடுத்துக் கொண்டு, பிறகு வருத்தப்படுவதில் எந்த புரோஜனமும் இல்லை. முக சுருக்கம், வயதான தோற்றம் இவற்றை தடுக்க அதற்கான ஊட்டச்சத்தான உணவுகளையும் சரியான வாழ்வியல் முறையும் முதலில் நாம் கடைபிடிக்க வேண்டும்.

முதுமை தோற்றத்தை தடுக்கும் எண்ணெய் தயாரிக்கும் முறை:
இந்த எண்ணெய் தயாரிக்க 200 கிராம் சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ளுங்கள். வேறு எந்த தேங்காய் எண்ணெயும் இதற்கு பயன்படுத்தக் கூடாது. அத்துடன் இரண்டு நல்ல பிரஷ்ஷான கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி விடுங்கள். அத்துடன் துருவிய கேரட்டையும் சேர்த்து அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து ஐந்து நிமிடம் வரை லேசாக சூடு படுத்த வேண்டும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு, இரண்டு மணி நேரம் இதை அப்படியே விட்டு விடுங்கள். கேரட்டில் இருக்கும் இந்த சாறு மொத்தமும் தேங்காய் எண்ணெயில் இறங்கி இருக்கும். இதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் 5 நிமிடம் உங்கள் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல் முகத்தை கழுவி விடலாம்.

கேரட்டில் இருக்கும் விட்டமின் ஈ, ஏ போன்ற ஊட்டச்சத்துக்களுடன் பீட்டா கரோட்டின்,போன்ற ஊட்ட சத்துகள் உள்ளது. இது முதுமை தோற்றம் விரைவில் வராமல் தடுக்கும்.

இதையும் படிக்கலாமே: சொரசொரன்னு இருக்கிற மூக்கும், கன்னமும் 10 நிமிடத்தில் செலவே இல்லாமல் பளிச்சுன்னு பளிங்கு போல ஜொலிக்க வீட்டில் இருக்கும் இந்த 2 பொருள் போதுமே!

இந்த எண்ணெய் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து தினமும் பயன்படுத்தும் போது டபுள் பாய்லிங் முறையில் சூடு படுத்தி முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். பத்து நாட்களுக்கு ஒரு முறை இந்த எண்ணையை மாற்றி விடுங்கள். அதிக நாளும் வைத்தும் பயன்படுத்தக் கூடாது. மிக மிக எளிமையான இந்த ஆயிலை தயார் செய்து கொண்டு உங்கள் வயதான தோற்றத்தை தள்ளிப் போடுங்கள்.

- Advertisement -