ஆலமர விழுது போல முடி வளர்ச்சிக்கு ஆளி விதை போதும். நீங்களே நினைத்தாலும் உங்கள் முடி வளர்வதை பின்பு தடுத்து நிறுத்தவே முடியாது.

hair10
- Advertisement -

நம்முடைய முடி அடர்த்தியாக கையில் பிடிக்கவே முடியாத அளவிற்கு வளர்ந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். ஆமாங்க ஒவ்வொரு முடியும் திக்காகவும் அதேசமயம் நெருக்கமாகவும் தலை முழுவதும் கருகருவென முடி வளர வேண்டுமென்றால் ஆளி விதை போதும். குறிப்பாக இந்த வெயில் காலத்தில் இந்த குறிப்பு எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும். உங்களுடைய முடியில் வறட்சித் தன்மை அதிகமாக இருந்தால், வறட்சியை ஒரே நாளில் நன்றாக கட்டுப்படுத்தி முடியை சிக்கு இல்லாமல் சில்கியாக மாற்றக்கூடிய சக்தியும் இந்த ஹேர் பேக்குக்கு உண்டு. வாங்க நேரத்தைக் கடத்தாமல் அந்த குறிப்பை பார்த்து விடலாம்.

இந்த பேக் தயார் செய்ய நமக்கு தேவையான பொருட்கள் 3. செம்பருத்திப்பூ, ஆளி விதை, முட்டை. Flax seeds என்று சொல்லப்படும் ஆளிவிதை எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் இப்போது சுலபமாக கிடைக்கின்றது. ஒரு சிறிய பாத்திரத்தில் 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் 10 லிருந்து 15 செம்பருத்திப்பூவை போட்டுக்கொள்ளுங்கள். ஆளி விதை 2 ஸ்பூன் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, இதை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 7 லிருந்து 10 நிமிடத்திற்குள் தண்ணீர் நன்றாக கொதித்து கொழகொழவென நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

அந்த ஜெல்லை அப்படியே சுட சுட இருக்கும்போதே ஒரு ஸ்டீல் வடிகட்டியில் ஊற்றி வடிகட்டி கொள்ள வேண்டும். இதை வடிகட்ட கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். ஏனென்றால் இந்த பேக் ஜெல் போல அப்படியே கொழகொழவென மாறி இருக்கும். ஃபில்டரில் ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக கலந்து ஜெல்லை மட்டும் பிரித்து தனியாக வடிகட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஜெல் அப்படியே நன்றாக ஆறி விடும்.

இந்த ஜெல் நன்றாக ஆறிய பின்பு ஒரு முட்டையின் உள்ளே இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து இதோடு ஊற்றி, நன்றாகக் கலந்து அதன் பின்பு இந்த ஹேர் பேக்கை நம்முடைய தலையில் அப்ளை செய்யவேண்டும். வாரத்தில் 3 நாட்கள் இந்த பேக்கை உங்கள் தலையில் போட்டு வந்தால் தலை முடி உதிர்வு உடனடியாக நிற்கும். அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த பேக்கை தொடர்ந்து மூன்று முறை தலையில் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பேக்கை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்றாக போட்டு விட்டு அதன் பின்பு தலைமுடியின் கீழ் பக்கம் வரை பேக்கை அப்படியே அப்ளை செய்துவிட்டு 20 நிமிடங்கள் தலையில் ஊற வைக்க வேண்டும். அதன் பின் ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடுங்கள்.

தலையை நன்றாக காய வைத்துவிட்டு அதன் பின்பு சிக்கு எடுத்து பாருங்கள். சிக்கு எடுக்கும்போதே முடி உதிர்வு உங்களுக்கு குறைவாக இருக்கும். சிக்கு குறைவாக இருக்கும். முடியில் இருக்கக்கூடிய வறட்சித் தன்மை குறைந்து முடி பார்ப்பதற்கு சில்கியாக இருக்கும். மிஸ் பண்ணாதீங்க. இந்த பேக்கை இந்த வெயில் காலத்துல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -