ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் 1 கைப்பிடி இந்த பொருளை தானமாக கொடுத்து விடுங்கள். வாழ்நாள் முழுவதும் 1 ரூபாய் கூட கடன் வாங்காமல் செல்வந்தர்களாக வாழலாம்.

cash-murugan
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கூட, ஒரு சில நாட்களில் சீக்கிரமாக பணக்காரராக மாறிவிடுகிறார்கள். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் கண்களுக்கு ‘இவர்களும் நம்மை போல தானே இருந்தார்கள். ஆனால் இவ்வளவு சீக்கிரம் எப்படி பணக்காரர்கள் ஆனார்கள்’ என்று ஆச்சரியமாக யோசிப்பார்கள். ஆனால் ரொம்ப ரொம்ப சீக்கிரமா பணக்காரர் ஆனவர்களுக்கு பின்னால் எவ்வளவு கடன் இருக்கிறது என்பது வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது. செல்வந்தர்கள் ஆக வேண்டும் தான். அதே சமயம் கடன் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

கடன் இல்லாத வாழ்க்கை வாழ்வது என்பதே ரொம்பவும் கஷ்டமான விஷயம். கடன் இல்லாமல் செல்வந்தர்களாவது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம். அதீத கடின உழைப்பும், அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். இது எல்லா மனிதர்களுக்கும் வாய்ப்பது கிடையாது. புண்ணியம் செய்த ஒரு சில மனிதர்கள் மட்டுமே கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். நமக்கும் இப்படி சந்தோஷமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றால், ஆன்மீக ரீதியாக என்ன பரிகாரம் செய்வது, என்ன வழிபாடு செய்வது என்பதை பற்றிய குறிப்பைதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாடு செய்வது செல்வ செழிப்பை நமக்கு கொடுக்கும். அதாவது வீட்டில் பொன் பொருள் சேர்க்க வேண்டும். ஆடை ஆபரணங்கள் அணிகலன்கள் அதிகமாக கடன் இல்லாமல் வாங்க வேண்டும் என்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று முருகர் வழிபாட்டை மேற்கொள்ளலாம். செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாட்டை மேற்கொள்ளும் போது செல்வ செழிப்பு நமக்கு அதிகரிப்பதோடு, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படாது.

செவ்வாய்க்கிழமை தோறும் முருகர் கோவிலுக்கு சென்று மண் அகல் விளக்கின் நல்லெண்ணெயோ அல்லது நெய் ஊற்றியோ இரண்டு விளக்குகள் ஏற்றி முருகப்பெருமானை மனதார பிரார்த்தனை செய்து 3 முறை வலம் வர வேண்டும். உங்களால் முடிந்தால் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு நிவேதனம் பிரசாதமாக வைத்தும் வழிபாடு செய்யலாம். அந்த நிவேதனத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்கலாம்.

- Advertisement -

இது தவிர செவ்வாய்க்கிழமை அன்று நீங்கள் துவரம் பருப்பை தானமாக கொடுக்க வேண்டும். 100 கிராமிலிருந்து, கிலோ கணக்கில் உங்களால் எவ்வளவு துவரம் பருப்பு வாங்க முடியுமோ அதை வாங்கி ஒரு பிராமணருக்கு தானமாக கொடுக்கலாம். சில பேருக்கு பிராமிணருக்கு தானம் கொடுப்பதில் உடன்பாடு இருக்காது. அப்படிப்பட்டவர்கள் ஏழை எளியவர்களுக்கு அல்லது ஆசிரமங்களுக்கு கூட இந்த துவரம் பருப்பை வாங்கி செவ்வாய்க்கிழமையில் தானம் கொடுக்கலாம்.

ஆனால் தானத்தில் சிறந்த தானம் பிராமணருக்கு கொடுக்கப்படும் தானம் தான் என்று சொல்கிறது சாஸ்திரம். செவ்வாய்க்கிழமை தோறும் துவரம் பருப்பை தானம் கொடுத்து வருபவர்கள் கடன் இல்லாமல் செல்வந்தர்களாக வாழ முடியும் என்பது நம்பிக்கை. உங்களால் எத்தனை வாரங்கள் இதை தொடர்ந்து செய்ய முடியுமோ, அத்தனை வாரம் தொடர்ந்து செய்யுங்கள். தொடர்ந்து 9, 11 வாரம், 27 வாரம் வரை கூட செய்யலாம். அதற்கு மேலும் செய்யலாம். உங்கள் கையால் எவ்வளவுக்கு எவ்வளவு துவரம் பருப்பு தானமாக கொடுக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்லும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்று கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -