மார்ச்சில் பெயர்ச்சியாகும் செவ்வாய் கிரகம்! ராஜயோகம் பெறவிருக்கும் 3 ராசிகள் என்னென்ன?

sevvai-cash
- Advertisement -

ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியிலும் ஒவ்வொரு விதமான பலன்கள் ஜோதிட அடிப்படையில் கணித்து கூறப்படுகிறது. அந்த வகையில் மார்ச் மாதம் பெயர்ச்சியாக இருக்கும் செவ்வாய் கிரகத்தால் ராஜயோகம் பெற இருக்கும் மூன்று அதிர்ஷ்ட ராசிகள் யாரெல்லாம்? அவர்களுக்கு கிடைக்க இருக்கும் நற்பலன்கள் என்னென்ன? என்பது போன்ற ஜோதிட குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ரிஷப ராசியில் செவ்வாய் பகவானும், சந்திரனும் இணையக்கூடிய அமைப்பாக இருக்கிறது. இதனால் மூன்று ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்க போகிறது என்று ஜோதிடங்கள் குறிப்பிடுகிறது. அந்த வகையில் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் மாறப் போகிறது. அவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும், வாழ்க்கையில் முன்னேற்றமும், அதிர்ஷ்டமும் பெறக்கூடிய பலன்கள் மேலும் தெரிந்து கொள்வோம். செவ்வாய் சந்திர சேர்கையால் நீங்கள் இதுவரை மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்த ஒரு விஷயத்திற்கு தீர்வை கண்டுபிடிப்பீர்கள். மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம், நீங்களே எடுத்து செய்வது நல்லது.

- Advertisement -

மேஷம்:
உங்கள் ராசியில் இருந்து இரண்டாவது இடத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கும் செவ்வாய் பகவானால் அதிர்ஷ்ட யோகங்கள் கூடி வரப்போகிறது. இதுவரை உங்களுக்கு வலுவிழந்த சில விஷயங்கள் இனி பலமாக அமையப் போகிறது. உங்களுடன் இருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் பக்க பலமாக இருந்து உதவி செய்வார்கள்.

பணம் பல இடங்களில் மாட்டிக் கொண்டு வராமல் இருந்திருக்கும், ஆனால் இந்த பெயர்ச்சிக்கு பிறகு உங்களுக்கு வந்து சேர வேண்டிய பணம் அனைத்தும் கிடைக்கும். செவ்வாய் சந்திர சேர்க்கையால் சுப பலன்கள் அதிகரிக்க போகிறது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். சந்திர செவ்வாய் சேர்க்கையால் தடைப்பட்டு கொண்டிருந்த சுப காரிய முயற்சிகள் கைக்கூடி வரும் யோகம் உண்டாகப் போகிறது. பண விஷயத்தில் மூன்றாம் நபர்களை நம்ப வேண்டாம்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷபத்தில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி யோகம் கைகூடி வரப்போகிறது. பண ரீதியான பிரச்சனைகள் இனி தடைகளை தாண்டும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் தீரும். பெரிய தொகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும், உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகிறது. எதிர்பாராத பல அதிர்ஷ்டங்கள் உங்களை திக்கு முக்காட செய்யும். பணம் பல வழிகளில் இருந்து வந்தாலும் அதனை ஆடம்பரமாக செலவு செய்யாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டங்கள் வந்து நிறைய போகிறது. இதுவரை உங்களுக்கு இருந்து வந்த துன்பங்கள் மாறப்போகிறது. வாழ்க்கை இப்படியே போகுமா? மாறவே மாறாதா? என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு திடீர் திருப்பங்கள் நடக்கும். எதிர்பார்த்த முன்னேற்றங்கள் உங்களை தேடி தானாகவே வந்து சேரும். வருமானம் உயர தொடங்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. மேலும் குடும்ப விஷயங்களில் கூட மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். செவ்வாய் சந்திர சேர்க்கையால் இழந்த உறவுகள் மீண்டும் உங்களை தேடி வரக்கூடிய யோகமும் உண்டாகும்.

- Advertisement -