சமையலறையில் பணத்தை இந்த ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் பணமானது வீண் செலவாகாமல் வரவர சேர்ந்து கொண்டே செல்லுமாம் உங்களுக்கு தெரியுமா?

cash-red-dry-chilli
- Advertisement -

நம்முடைய கைகளில் இருக்கும் பணமானது சரியான வழியில் தான் செலவாகிறதா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்பது தான் பல பேருடைய பதிலாக இருக்கும். சம்பாதிக்கும் பணம், நாம் நினைத்த ஒரு விஷயத்திற்காக செலவு செய்ய முடியாமல் திடீர் செலவுகள் ஏற்படுவதை வீண்விரயம் என்கிறோம். உதாரணத்திற்கு மருத்துவ செலவு அல்லது ஏதேனும் ஒரு பொருள் சேதமடைந்தால் அதை மாற்றுவது போன்றவற்றுக்கு செலவு செய்ய நேர்ந்தால் அது வீண் விரயம் ஆகிப் போகிறது. கொடுத்த இடத்திலிருந்து பணம் திரும்ப கிடைக்காமல் இருப்பது அல்லது உங்களுடைய பணம் ஏமாற்றப்படுவது போன்ற விஷயங்கள் கூட இதில் அடங்கும். வீண் விரயம் ஆகாமல் நீங்கள் சம்பாதித்த பணம் உங்களுக்கு பயன்பட வேண்டும் என்றால் சமையலறையில் இருக்கும் இந்த ஒரு டப்பாவில் பணத்தை இப்படி சேகரித்து பாருங்கள். அது என்ன? என்பதை பற்றிய விரிவான தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இந்தப் பிரபஞ்சத்தில் பணம் என்பது ஒருவர் ஆசைப்பட ஆசைப்பட மட்டுமே பெருகுவதாக நம்பப்பட்டு வருகிறது. பணத்தின் மீது ஆசை கொள்பவர்களிடம் மட்டுமே பணமானது மென்மேலும் பெருகும். எப்படியாவது பணத்தை ஈட்ட வேண்டும் என்கிற உத்வேகம், உடம்பில் தெம்பு, அறிவாற்றல் நிரம்பி இருந்தால் மட்டுமே அவர் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கிய பயணத்தில் ஈடுபடுகிறார் அல்லது இருப்பதே போதும் என்று அப்படியே உட்கார்ந்து விடுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

பணத்தை ஓரிடத்தில் தேக்கி வைத்திருந்தால் அது கண்டிப்பாக வீண் விரயம் ஆகிவிடும் எனவே பணத்தை ஒரே இடத்தில் தேக்கி வைக்கக் கூடாது என்றாவது ஒருநாள் அது உங்களுக்கு பயன்படாமல் போய்விடும் எனவே எவ்வளவு பணம் வருகிறதோ, அதை தாராளமாக செலவு செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக பணம் சம்பாதித்து வீட்டிற்கு வரும் ஒரு ஆண் அதை உபயோகமான வழியில் குடும்பத்திற்காக செலவு செய்ய வேண்டும் என்று முதலில் நினைப்பான். அதன் பிறகு தான் மற்ற வேலைகளை அவன் செய்ய துவங்குவான்.

இது போல பெண்களும் தாங்கள் சம்பாதித்த பணத்தை முதலில் குடும்பத்திற்காக செலவு செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். நீங்கள் சம்பாதித்த பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட சிறு தொகையை எடுத்து சமையலறையில் இருக்கும் இந்த ஒரு டப்பாவில் வைக்க வேண்டும். பணத்திற்கு தோஷம் உண்டு! நீங்கள் ஒரு மாத இன்கிரிமென்ட் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அதை பார்த்து மற்றவர்கள் பொறாமை பட நேர்ந்தால் அது பணத்திற்கு ஏற்படும் திருஷ்டியாகும்.

- Advertisement -

எனவே இத்தகைய பணத்தை முதலில் வாங்கி வந்தவுடன் சமையல் அறையில் இருக்கும் மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள். அல்லது துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிலும் போடலாம். துவரம் பருப்பு டப்பாவில் வைத்திருந்தால் பணமானது மென்மேலும் பெருகும். அது போல இருக்கின்ற பணத்தை தக்க வைத்துக் கொள்ளவும், பணத்தில் இருக்கும் தோஷங்கள், ஏவல்கள் நீங்கவும், பணம் வீண் விரயமாகாமல் இருக்கவும் மிளகாய் டப்பாவில் பணத்தை போட்டு வைக்கலாம்.

ஏதாவது ஒரு மெல்லிய காட்டன் துணியில் மடித்து மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள். மீண்டும் உங்களுடைய தேவைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மிளக்காய் நெடி பணத்தில் இருக்கும் தோஷங்களை நீக்கும் என்பது தாந்த்ரீக பரிகாரமாகும். இது போல ஒவ்வொரு முறை பணம் உங்களிடம் வரும் பொழுது அந்த டப்பாவில் வைத்து எடுப்பதால் உங்களுக்கு மென்மேலும் பணமானது பெருக துவங்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

- Advertisement -