இன்று திங்கட்கிழமையுடன் சேர்ந்து வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசனம். எந்த சூழ்நிலையிலும் குழப்பமில்லாத தைரியமாக முடிவு எடுக்கும் மனதை பெற, பிறை நிலவை இப்படி தரிசனம் செய்யுங்கள்.

pirai
- Advertisement -

மனிதர்களாகப் பிறந்தவர்களுக்கு கையில் நிறைய பணம் காசு இருந்தாலும், மனதில் நிம்மதி என்பது கட்டாயம் இருக்க வேண்டும். சில பேருக்கு வாழ்க்கையை நடத்திச் செல்லும் அளவிற்கு செல்வவளம் இருக்கும். ஆனால் ஏனோ தெரியாது, நிம்மதியான வாழ்க்கையை அவர்களால் வாழவே முடியாது. எதற்கெடுத்தாலும் ஒரு மன குழப்பம், எதற்கெடுத்தாலும் ஒரு சஞ்சலம், எந்த முடிவை எடுப்பது என்று ஒரு நிலையான மனது இருக்காது. வாழ்வில் தடுமாற்றத்துடன் இருப்பார்கள், குழப்பமான மன நிலையில் இருப்பவர்களை தெளிவுபடுத்தக் கூடிய சக்தி சந்திர பகவானுக்கு உண்டு. மனோகாரகன் சந்திரனை மூன்றாம் பிறை அன்று இப்படி தரிசனம் செய்தால் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் குழப்பங்களுக்கு நிச்சயமாக விடிவுகாலம் பிறக்கும். இன்று மாலை சந்திர தரிசனத்தை எப்படி மேற்கொள்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

திங்கட் கிழமை சந்திர பகவானுக்கு மிக மிக உகந்த நாள். திங்களை தன் தலையில் சூடிக் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கும் இந்த நாள் உகந்த நாளாக சொல்லப்பட்டிருக்கிறது. சோமவாரம், அதுமட்டுமல்லாமல் சித்திரை மாதத்தில் வரக்கூடிய முதல் பிறை தரிசனம். நாளை அட்சய திருதியையும் கூட. இப்படி நிறைய நல்ல விஷயங்கள் நம்மை சூழ்ந்து இருக்கும் போது நாம் இறைவனிடம் என்ன வரம் கேட்டாலும். அது உடனே கிடைக்கும்.

- Advertisement -

இன்று மாலை 6.00 மணிக்கு முன்பாக சுத்தபத்தமாக ஒரு முறை குளித்துவிடுங்கள். அதன்பின்பு 6.00 மணிக்கு பூஜை அறையில் எப்போதும்போல ஒரு தீபம் ஏற்றி வைத்து விட்டு, 6.30 முப்பது மணி போல உங்கள் வீட்டின் வெளியே சந்திரன் தரிசனம் எந்த இடத்தில் கிடைக்குமோ அந்த இடத்தில் கொஞ்சம் தண்ணீரை தெளித்து சுத்தம் செய்து விட்டு, அந்த இடத்தில் பச்சரிசி மாவில் நட்சத்திர கோலம் வரைந்து கொள்ளுங்கள். அதற்கு நடுவே ஒரு மண் அகல் தீபத்தை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். வெள்ளை நிறத்தில் வாசனை நிறைந்த மல்லிகை பூக்கள் கிடைத்தால் இந்த விளக்கை சுற்றி வைத்து விடுங்கள்.

இந்த விளக்குக்கு முன்பு நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய இரண்டு உள்ளங்கைகளையும் ஏந்தி பிறை நிலா தரிசனம் கிடைக்கும்போது, மனதார குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு, உங்களுடைய கஷ்டத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். முடிந்தால் உங்களுடைய உள்ளங்கைகளில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை வைத்துக்கொண்டு பிறை நிலவை தரிசனம் செய்து, ‘ஓம் சந்திரமவுலீஸ்வராய போற்றி’ என்ற மந்திரத்தை உச்சரித்து நாம் செய்யக்கூடிய வழிபாடு, கோடி நன்மைகளை நமக்கு கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். (கையிலிருக்கும் பச்சரிசியை சாப்பாட்டில் போட்டு சமைத்து நீங்கள் சாப்பிடலாம்.)

- Advertisement -

குறிப்பாக பிறை நிலவு என்றாலே மாலை 6.30 மணியிலிருந்து 6.45 க்குள் லேசான வெள்ளிக் கம்பி போல தெரியத் தொடங்கும். அதன் பின்பு மறைந்து விடும். சில பேருக்கு இந்த பிறை நிலவின் தரிசனம் கிடைக்கும். சில பேருக்கு பிறைநிலா தெரியாது. இருப்பினும் கவலை வேண்டாம். குறிப்பிட்டுச் சொல்லப்படும் இந்த நேரத்தில் வெட்ட வெளியில் இருந்து பிரார்த்தனை செய்வது மிகவும் நல்லது.

மனக் குழப்பங்கள் தீரும். மனம் தெளிவு பெறும். நம்முடைய சிந்தனை சிறப்பாகும். வாழ்க்கையில் என்ன முடிவு எப்போது எடுப்பது என்ற தடுமாற்றத்தில் இருந்து நாம் வெளி வருவோம். உங்களுடைய முகம் பிரகாசமாகும். தெளிவான மனதோடு நாம் தொடங்கக் கூடிய எந்த காரியமும் வெற்றி தானே. நம்பிக்கை உள்ளவர்கள் இன்று மாலை பிறைச் சந்திரனை தரிசனம் செய்து கோடான கோடி வரங்களைப் பெற அந்த இறைவனை பிரார்த்தனை செய்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -