சித்திரை மாத இரண்டாவது வெள்ளிக்கிழமை வழிபாடு

mahalashmi9
- Advertisement -

ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வரிசையில் இந்த சித்திரை மாதம் தமிழ் மாதத்தின் முதல் மாதம். சூரிய பகவானின் அனுகிரகம் பரிபூரணமாக இருக்கக்கூடிய மாதம் இந்த சித்திரை மாதம். இந்த மாதத்தில் சூரிய பகவானோடு சுக்கிர பகவானும் இணைந்து இருப்பதால், சித்திரை மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை ரொம்ப ரொம்ப சிறப்பு.

நாளைய தினம் வீட்டில் மகாலட்சுமி பூஜை செய்வதன் மூலம், நமக்கு சுக்கிரனின் பரிபூரண அருள் அசி கிடைக்கும். நம்முடைய பண கஷ்டங்கள் எல்லாம் தீருவதற்கு நாளைய தினம் செய்ய வேண்டிய மிக மிக சுலபமான மகாலட்சுமி பூஜையை பற்றிய தகவலைத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

சித்திரை இரண்டாவது வெள்ளிக்கிழமை பூஜை

வழக்கம்போல நாளை வெள்ளிக்கிழமை பூஜைக்கு, இன்றைக்கே உங்களுடைய வீட்டை சுத்தம் செய்து கொள்ளுங்கள். நாளைய தினம் பெண்கள் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு நிலை வாசலில் கோலம் போட வேண்டும். மாக்கோலத்தோடு சேர்த்து, செம்மண் சேர்த்து நிலை வாசலை முதலில் அலங்கறியுங்கள். நிலைவாசல் படியை துடைத்து நிலை வாசல் படிக்கும் பூக்களை போட்டு மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைத்து விடுங்கள்.

நிலை வாசல் படிக்கு அருகிலேயே மகாலட்சுமியின் பாதங்களை நாளைய தினம் வரைவது ரொம்ப ரொம்ப சிறப்பு. பிறகு பூஜை அறையில் மகாலட்சுமி படத்துக்கு முதலில் வெள்ளை நிற மல்லிகை புஷ்பங்களால் அலங்காரம் செய்து விடுங்கள். நாளைய தினம் பூஜை அறையில் கட்டாயம் சேர்க்க வேண்டிய பூ செண்பகப்பூ. செண்பகப்பூ அம்பாளுக்கும் சிறந்தது.

- Advertisement -

சுக்கிர பகவானுக்கும் ரொம்ப ரொம்ப பிடித்தமான பூவாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. சுக்கிரனின் எண் 6. ஆகவே 6 செண்பக பூக்களை வாங்கி மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் சமர்ப்பணம் செய்து விடுங்கள். இப்படி இந்த செண்பகப் பூக்களை மகாலட்சுமிக்கு வைத்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி உங்களால் முடிந்த நெய்வேத்தியம் வைத்து, மணக்க மணக்க சாம்பிராணி தூபம் போட்டு கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஹோரையில் 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த பூஜை ஆனது உங்களுடைய வீட்டில் செய்து முடிக்கப்பட வேண்டும். மாலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் பூஜை அறையில் மீண்டும் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

அந்த மகாலட்சுமி பாதத்தில் வைத்த செண்பகப் பூக்களை எடுத்து உங்கள் வீட்டு பணம் வைக்கும் பெட்டியில், நகை வைக்கும் இடத்தில் வைக்கலாம் எந்த இடத்தில் எல்லாம் நீங்கள் பணத்தை வைப்பீங்களோ, அந்த இடத்தில் எல்லாம் ஒவ்வொரு பூவை வைக்கலாம். ஒரு வாரம் கழித்து இந்த பூ வாடியதும் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம்.

இந்த பூஜையை செய்வதன் மூலம் உங்களுக்கு மகாலட்சுமி சுக்கிரன் சூரிய பகவான் அனைவரின் ஆசீர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. நாளைய தினம் இந்த பூஜையை செய்த பிறகு இல்லத்தரசிகளுக்கு ஒரு மனதிருப்தி ஏற்படும். வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும். கடன் சுமை குறையும்.

இதையும் படிக்கலாமே: தீய சக்திகள் வராமல் தடுக்க பரிகாரம்

வருமானமும் அதிகரிக்கும் இத்தனை நல்லதும் உங்களை தேடி வர எவ்வளவு எளிமையான பூஜை இது. செண்பகப் பூவுக்கு கொஞ்சம் காசு அதிகமாக இருக்கும். பூக்கடைக்காரரிடம் சொன்னால் இன்று சாயங்காலம் அதை கொண்டு வந்து உங்களுக்கு கொடுத்துருவாங்க. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -