முகத்தில் தெரியும் கருந்திட்டுகள் 2 நாளில் காணாமல் போக, சருமம் கண்ணாடி மாதிரி பளபளக்க 1 ஸ்பூன் காபி பவுடர் இருந்தால் போதுமே!

coffee-powder-fack-pack
- Advertisement -

முகத்தில் இருக்கும் கருந்திட்டுக்கள் முக அழகை சிலருக்கு கெடுத்து விடும். முகத்தில் இருக்கும் பிளட் சர்குலேஷன் சீராக இல்லாவிட்டால் இது போல திட்டுக்கள் உருவாகுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. இப்படிப்பட்ட கருந்திட்டுகளை ரெண்டே நாளில் மாயமாய் மறைய செய்ய நம் வீட்டில் இருக்கும் ஒரு ஸ்பூன் காபி பவுடர் போதும்! இதை வைத்து ரெண்டே நாளில் கருந்திருட்டுக்களை மாயமாய் மறைய செய்ய என்ன செய்யலாம்? என்பதை தான் அழகு குறிப்பு பதிவாக இதில் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

ஓடி ஆடி உழைப்பவர்களுக்கு தான் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் அல்லது அழுங்காமல் குழுங்காமல் நோகாமல் ஒவ்வொரு நாளையும் கடப்பவர்களும் ரத்த ஓட்டத்தில் தளர்வை சந்திப்பீர்கள். இவர்களுக்கு உடல் மட்டும் அல்லாமல் சரும பிரச்சனைகளும் உருவாகும்.

- Advertisement -

நம்முடைய உடம்பில் முக சருமம் மிகவும் சென்சிடிவ் ஆனது என்பதால் எளிதாக லூசு, மாசுகளால் பாதிக்கப்படுகிறது. சருமத்திற்கு லேசாக நீங்கள் குளிக்க போகும் முன்பு இரண்டு நிமிஷம் தினமும் ஃபேஸ் மசாஜ் செய்யுங்கள். கன்னம், கண்களுக்கு கீழே இருக்கும் பகுதி, நெற்றி, மூக்கு ஆகிய இடங்களில் லேசாக அழுத்தி சர்குலர் மோஷனில் மசாஜ் செய்யுங்கள். கிளாக் மற்றும் ஆன்டி கிளாக் வைஸ் எல்லா இடங்களிலும் மிருதுவாக ஒரு விரலை வைத்து மசாஜ் செய்யும் பொழுது அல்லது முன்னிருந்து பின்னாக நீவி விடும் பொழுது சருமமானது இலகுவாகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் சருமம் முதிர்வை சந்திப்பதை காலதாமதம் செய்கிறது. இதனால் இளமையான தோற்றம் எப்பொழுதும் நமக்கு கிடைக்கும்.

ஒரு ஸ்பூன் காபி பவுடர் எடுத்து ஒரு பவுலில் போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் அளவிற்கு சேருங்கள். இதனுடன் பாதாம் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்கு நைசாக பேஸ்ட் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதை கண்கள், உதடுகளை தவிர மற்ற எல்லா இடங்களிலும் நன்கு தடவி 20 நிமிடம் உலர விட்டு விடுங்கள்.

- Advertisement -

உலர்ந்து நன்கு காய்ந்ததும் முகத்தை ஈரத் துணியால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதே போல நீங்கள் வாரம் இரண்டு முறை செய்து வந்தால் கருந்திட்டுக்கள் முற்றிலுமாக மறைய துவங்கும். ரெண்டே நாட்களில் இதனுடைய ரிசல்ட் நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். அந்த அளவிற்கு ரொம்பவும் எஃபக்ட்டிவாக இருக்கக்கூடிய இந்த காபி பவுடர் ஃபேஸ் பேக் கருந்திட்டுக்கள் மட்டும் அல்லாமல் முகத்தில் முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது.

முகத்தில் இருக்கும் சிறு சிறு முடிகளையும் அகற்றுகிறது. மேலும் வேரிலிருந்து கரும்புள்ளிகளையும், வெண்புள்ளிகளையும் அகற்றுகிறது. மூக்கிற்கு இடையில் இருக்கும் பகுதிகளில் இதை நன்கு தடவி மசாஜ் செய்யுங்கள். அது போல உதட்டிற்கு கீழ் இருக்கும் பகுதியிலும் லேசான முறையில் மசாஜ் செய்து வாருங்கள். இது போல கருந்திட்டுகளும், நீங்காத வடுக்களும் இருக்கும் இடங்களில் இதை மசாஜ் செய்வதன் மூலம் எளிதாக அவற்றிலிருந்து நிவாரணம் காணலாம்.

- Advertisement -