10 நிமிடத்தில் முகம் பாலிஷ் போட்ட மாதிரி தகதகன்னு ஜொலிக்க காபி பவுடரோடு இந்த ஒரு பொருளை சேர்த்து பேக் போட்டாலே போதும்.

face12
- Advertisement -

முகம் பார்ப்பதற்கு பொலிவாக மின்ன வேண்டும் என்றால் பியூட்டி பார்லருக்கு தான் போக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை சேர்த்து முகத்தில் பேக் போட்டாலே போதும். முகம் இன்ஸ்டன்டாக வெள்ளையாக மாறும். உடனடியாக விசேஷத்திற்கு செல்ல வேண்டும். பார்டிக்கு போக வேண்டும். ஆனால் பார்லருக்கு போக நேரமில்லை. கையில் பணமும் இல்லை என்பவர்கள் இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள். உங்களுடைய முகம் உடனடியாக தகதகன்னு மின்னும்.

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் நம் வீட்டில் இருக்கக்கூடிய இன்ஸ்டன்ட் காப்பித்தூள், சர்க்கரை இந்த இரண்டு பொருள் தாங்க. ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் காபித்தூள் 1 ஸ்பூன், சர்க்கரை 1 ஸ்பூன், போட்டு நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதோடு பழுத்த வாழைப்பழம் பாதி சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். வாழைப்பழத் தோலை தூக்கி கீழே போடாதீங்க. அதற்கும் ஒரு வேலை உள்ளது.

- Advertisement -

இப்போது நீங்கள் தயார் செய்த பேக்கை அப்படியே உங்களுடைய முகம் கழுத்து பகுதிகளில் அப்ளை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய கை கருப்பாக உள்ளது என்றால் அந்த இடத்திலும் இந்த பேக்கை போட்டுக் கொள்ளலாம். அடுத்து இந்த பேக் மேலே லேசாக மசாஜ் செய்து கொடுக்க வேண்டும். வாழைப்பழ தோல் இருக்கிறது அல்லவா, அந்தத் தோலை எடுத்து முகத்தை வட்ட வடிவில் லேசாக மசாஜ் செய்து கொடுங்கள். கழுத்து பகுதியிலும் மசாஜ் செய்ய வேண்டும். கைகளுக்கும் மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு பேக்கை அப்படியே சருமத்தில் விட்டுவிட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து பேக் நன்றாக காய்ந்திருக்கும். குளிர்ந்த தண்ணீரில் பேக் போட்ட இடத்தை எல்லாம் கழுவி விடுங்கள். பிறகு பாருங்கள். உங்களுடைய சருமத்தில் வந்திருக்கும் மாற்றத்தை. வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த குறிப்பை பின்பற்றி வரும்போது, உங்களுடைய சருமம் நிரந்தரமாக பொலிவாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. உங்களுடைய அழகுக்கு அழகு சேர்க்க இந்த ஒரு சின்ன குறிப்பும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல இன்னைக்கு ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

முகச்சுருக்கம் நீங்கவும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையவும் சரும நிறத்தை மேம்படுத்துவோம் இந்த குறிப்பு பயனுள்ளதாக இருக்கும். இதோடு முகத்தில் இருக்கும் டெட் செல் அனைத்தும் இந்த ஸ்க்ரப்பின் மூலம் வெளிவந்துவிடும். உங்களுடைய முகத்தில் நிறைய முகப்பருக்கள் இருந்தால் அந்த இடத்தில் மட்டும் அழுத்தம் கொடுத்து ஸ்க்ரப் செய்து மசாஜ் பண்ண கூடாது. முகப்பருக்கள் வீங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆக முகப்பரு உள்ள இடத்தில் பேக் மட்டும் போடுங்கள். மற்ற இடத்தில் மட்டும் மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

பின்குறிப்பு: சர்க்கரையை அரைக்காமல் அப்படியே முகத்தில் போட்டு ஸ்க்ரப் செய்தால் தான் கீறல் விழுந்து விடும் என்ற பயமிருக்கும். நாம் சர்க்கரையை பொடி செய்துதான் குறிப்புக்கு பயன்படுத்துகின்றோம். ஆக முகத்தில் கீறல் விழும் என்ற பயம் வேண்டாம். இன்ஸ்டன்டாக கிடைக்கும் எந்த பிராண்ட் காபி தூளை வேண்டும் என்றாலும் குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -