குக்கரில் வைக்கும் சாதமும், குண்டானில் வடித்த சாதம் போலவே, பூ போல உதிரி உதிரியாக இருக்க உங்களுக்காக சுலபமான 2 டிப்ஸ்.

rice
- Advertisement -

அடுப்பில் உலையை வைத்து, அந்த தண்ணீரை சூடானதும் அரிசியைக் கழுவி, உலையில் போட்டு கிளறி பக்குவம் பார்த்து வடித்த காலமெல்லாம் வேறு. இப்போது பிரஷர் குக்கர் வந்துவிட்டது. அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி 2 விசில் வைத்தோம் என்றால் சுடச்சுட சாதம் உடனடியாக தயாராகி விடும். ஆனால் வடித்த சாதத்திற்கும், குக்கரில் வைத்த சாதத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. வடித்த சாதம் என்றால் பூ போல உதிரி உதிரியாக தொண்டையில் முழுவதற்கும் சாஃப்டாக இருக்கும்.

rice

கஞ்சு வடித்த சாதம் தான் ஒரு வகையில் உடலுக்கு ஆரோக்கியமும் கூட. குக்கரில் வைத்த சாதம் சில பேர் வீட்டில் நரம்பு போல், வேகாத பக்குவத்தில் இருக்கும். சாதம் வெறச்சிடுச்சு அப்படின்னு சொல்வாங்க இல்லையா? குக்கரில் வடித்த சாதத்தை சில பேர் வீட்டில் ஆறிய பின்பு சாப்பிடவே முடியாது. தொண்டையில் அடைக்கும். சரி, குக்கரில் வைத்த சாதமும் பூ போல இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் இருக்கும் சாப்பாட்டு அரிசி அதாவது புழுங்கல் அரிசியை 1 டம்ளர் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அரிசியை தண்ணீர் ஊற்றி முதலிலேயே 3 முறை சுத்தமாக கழுவிவிட வேண்டும். எப்போதுமே அரிசி கழுவும் போது தண்ணீர் ஊற்றி விரல்களால் நிமிட கழுவ வேண்டும் என்று சொல்லுவார்கள். அதாவது அரிசியில் முதல் முறை தண்ணீரை ஊற்றி கழுவி விட்டு, தண்ணீரை வடித்துவிட வேண்டும். இரண்டாவதாக தண்ணீர் ஊற்றுவதற்கு முன்பு, அரிசியை உங்களது கைகளால் நிமிடி விட்டு அதன் பின்பு தண்ணீர் ஊற்றி கழுவி வைக்க வேண்டும். அடுத்ததாக மூன்றாவது முறை ஒரு முறை அரிசியை கழுவி விடுங்கள்.

rice-wash-water1

இப்போது, இந்த 1 டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். எந்த டம்ளரில் அரிசியை அளந்து எடுத்தீர்களா அதே டம்ளரில் தண்ணீர் ஊற்ற வேண்டும். என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அரிசியைக் கழுவி, தண்ணீர் ஊற்றி ஊற வைத்த பின்பு அரிசி 45 நிமிடங்கள் வரை ஊற வேண்டும். ஊறிய பின்பு அந்த அரிசியில் ஒரு ஸ்பூன் அளவு நல்லெண்ணெயை ஊற்றி, கொள்ளுங்கள். அதன்பின்பு பிரஷர் குக்கர் மூடி போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு பிரஷர் வெளியே வர ஆரம்பித்ததும் விசில் போடுங்கள்.

- Advertisement -

அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும். மூன்று விசில் வர வேண்டும். அதன் பின்பு அடுப்பை அணைத்துவிட்டு. அந்த பிரஷர் அடங்கும்வரை அடுப்பின் மேலேயும் இருக்கலாம். கீழே எடுத்து வைத்துக்கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது. பிரஷர் முழுமையாக நீங்கிய பின்பு, குக்கரை திறந்து பாருங்கள். உங்களுடைய சாதம் மென்மையாக இருக்கும்.

rice-cooker

சில பேரது வீட்டில் சாதத்தை முதலில் ஊற வைத்துவிட்டு, அதன் பின்பு கழுவி 1 கப் அரிசிக்கு, 2 கப் அளவு தண்ணீர் ஊற்றுவார்கள். ஆனால் அதில் சாதம் கொஞ்சம் மென்மையாக இருக்காது. ஆறிய பின்பு வரவர என்று மாறிவிடும். (இந்த குறிப்பில் நாம் 1 கப் அரிசிக்கு 3 கப் அளவு தண்ணீரை ஊற்றி இருக்கின்றோம். சாதம் ஊறும்போது அரிசி தண்ணீரை கொஞ்சம் உறிஞ்சி இருக்கும்.) பக்குவம் நிச்சயம் சரியாக வரும்.

- Advertisement -

rice

உங்களுடைய அரிசி பழைய அரிசியாக இருந்தால், 1 கப் அரிசிக்கு 3 கப் அளவு தண்ணீர் சரியாக இருக்கும். ஒருவேளை உங்களுடைய அரிசி புது அரிசி ஆக இருக்கும் பட்சத்தில், அரை டம்ளர் அளவு தண்ணீரை குறைத்துக்கொள்ளலாம். கடைக்காரரிடம் கேட்டாலே சொல்லிவிடுவார்கள். நீங்கள் வாங்கும் அரிசி பழைய அரிசியா? புது அரிசியா என்பது. புதிய அரசு சீக்கிரத்தில் குழைந்து போகும். உபரி குறைவாகும். பழைய அரிசி நன்றாக வேகும். உபரி அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஒருவாட்டி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! உங்களுக்கு பிடிச்சிருந்தா இதையே ஃபாலோ பண்ணுங்க.

இதையும் படிக்கலாமே
காரசாரமான பஞ்சாபி தாபா ஸ்டைல் ‘தம் ஆலு கிரேவி’! இந்த கிரேவியை உங்கள் வாழ்நாளில் நீங்கள் சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -