மின்னல் வேகத்தில் உங்களை வெள்ளையாக மாற்றும் வெள்ளரிக்காய்! செலவே இல்லாமல் சினிமா நடிகை போல அழகாக மாற இதை விட்டா வேற வழி இல்ல.

face5
- Advertisement -

சினிமா நடிகைகள் போல அழகாக மாற வேண்டும் என்ற ஆசை நிச்சயம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அந்த அழகில் நிறைய செயற்கை மறைந்துள்ளது. மேக்கப் போடாமல் சினிமா நடிகைகள் போல் நம்மால் அழகாக மாற முடியாது. சினிமா நடிகைகள் கேமராவுக்கு முன்பு அழகாக தெரிவதற்கும் காரணம் மேக்கப். ஆனால் ஒரு துளி மேக்கப் கூட இல்லாமல் நம்முடைய சருமத்தை இயற்கையான முறையில் அழகாக மின்னச் செய்ய வைக்க முடியும். அதற்கு எளிமையான சில வழிமுறைகள் உள்ளது.

இயற்கையாகவே நமக்கு அழகை அள்ளிக் கொடுக்கக்கூடிய ஏராளமான விஷயங்கள் கொட்டி கிடக்கின்றது. அதிலிருந்து 3 பொருட்களை தேர்ந்தெடுத்து இன்று சுலபமான ஒரு அழகு குறிப்பை இந்த பதிவின் மூலம் உங்களுக்காக பகிர்ந்து உள்ளோம். அழகின் மீது அதிக ஆர்வம் உள்ளவர்கள் இந்த குறிப்பை படித்து பலன் பெறலாம்.

- Advertisement -

முகப்பொலிவை கொடுக்கக்கூடிய அழகு குறிப்பு:
இதற்கு நமக்குத் தேவையான பொருட்கள் 3. வெள்ளரிக்காய், கற்றாழை ஜெல், கொத்தமல்லி தழை. இந்த மூன்றுமே இயற்கையான முறையில் நமக்கு கிடைக்க வேண்டும். ஆர்கானிக்காக பார்த்து வாங்க வேண்டும். கடைகளில் வெள்ளரிக்காய் கிடைக்கின்றது. ஆனால் அது பூச்சி மருந்து தெளிக்கப்பட்டதாக இருந்தால், அதன் மேலே இருக்கும் தோலை சீவி விட்டு குறிபுக்கு பயன்படுத்தவும்.

கற்றாழை ஜெல்லை செடியிலிருந்து வெட்டி எடுத்து அந்த மஞ்சள் நிற பாலை சுத்தமாக கழுவி விட்டு, உள்ளே இருக்கும் ஜல்லை மட்டும் தனியாக எடுத்து குறிப்புக்கு பயன்படுத்துவோம். கொத்தமல்லி தலையை வாங்கி நன்றாக தண்ணீரில் அரசி கழுவி விட்டு குறிப்புக்கு பயன்படுத்தவும். (இயற்கையான கற்றாழை உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது என்ற பட்சத்தில், நிறம் சேர்க்காத எந்த ஒரு வாசனை திரவியமும் சேர்க்காத வெள்ளை நிற கற்றாழை ஜெல் ஆர்கானிகாங கடையில் விக்குது அதை தான் குறிப்புக்கு பயன்படுத்தனும்).

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. நறுக்கிய வெள்ளரிக்காய் 1 கப், அலோவேரா ஜெல் 1/4 கப், கொத்தமல்லி தழை 1 கைப்பிடி அளவு, இந்த 3 பொருட்களையும் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். அப்போது உங்களுக்கு இது ஜூஸ் ஆகத்தான் கிடைக்கும். காரணம் வெள்ளரிக்காயில் நீர் இருக்கு. அலோவேரா ஜெல்லிலும் நீர் இருக்குது. ஆகவே தண்ணீர் ஊற்றாமல் இதை அரைத்து ஒரு காட்டன் துணியில் ஊற்றி பிழிந்து வடிகட்டினால் சூப்பரான ஒரு சாறு கிடைக்கும்.

இது நம்முடைய சருமத்திற்கு அத்தனை குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது‌. வயதான தோற்றத்தை தள்ளி போடக்கூடிய அத்தனை சத்துக்களும் இதில் நிறைந்து இருக்கின்றது. சருமப் பிரச்சனைகளை எல்லாம் சரி செய்யக்கூடிய அத்தனை அழகு சார்ந்த விஷயங்களும் இதில் இருக்கு. இதை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வச்சுக்கோங்க. மூன்றில் இருந்து நான்கு நாட்கள் கெட்டுப் போகாது. இதை முகத்தில் அப்படியே சீரம் போல அப்ளை செய்ய வேண்டும். இதை ஸ்பிரே செய்ய முடிந்தால் முகத்தில் ஸ்பிரே செய்து வட்ட வடிவில் மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடலாம்.

இதையும் படிக்கலாமே: எவ்வளவு கருப்பாக இருப்பவர்களையும், 30 நாட்களில் வெள்ளையாக மாற்ற இந்த 1 பொருள் போதும். நீங்க ஆளே அடையாளம் தெரியாம அப்படியே தலைகீழா மாறிடுவீங்க.

இல்லை என்றால் ஒரு காட்டன் பஞ்சில் இதைத் தொட்டு முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். கழுத்துப் பகுதிகளில் இருக்கும் கருமை நிறத்திலும் இதை அப்ளை செய்யவும். இரவு நேரத்தில் தூங்க செல்வதற்கு முன்பு இதை பயன்படுத்தலாம். பகல் நேரத்தில் நேரம் கிடைக்கும் என்பவர்கள் பகலிலும் இதை முகத்தில் ஸ்பிரே செய்யலாம். முகத்தில் இந்த ஜெல்லை தடவிய பின்பு ஒரு சில நிமிடங்களில் அது சருமத்திற்குள் ஊடுருவி விடும். பிறகு முகம் கழுவாதீங்க அப்படியே விட்டுடுங்க. இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் கழித்து முகத்தை கழுவலாம். பத்து நாள் தொடர்ந்து தினமும் இதை பின்பற்றி வந்தாலே இந்த சீரம் பவர் என்னனு நீங்க நல்லா தெரிஞ்சுக்கோங்க. எல்லா வகையான சருமத்திற்கும் இந்த சீரம் செட் ஆகும். உங்களுக்கு அழகான அழகு தேவை என்றால் இந்த அழகு குறிப்பு 5 நாட்கள் முயற்சி செய்தாலே ரிசல்ட்டை கண்ணாடி முன்பு பார்க்கலாம்.

- Advertisement -