கருவேப்பிலையை இப்படி பேக் போட்டால் வளராத தலைமுடி கூட, கால்வரைக்கும் வளருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

hair2
- Advertisement -

தலைமுடியை வளர்ப்பதற்கு மிக மிகப் பழமையான ஒரு குறிப்பை தான் இன்று பார்க்கப் போகின்றோம். இது பழைய குறிப்பாக இருந்தாலும், என்றைக்கு பயன்படுத்தினாலும் அதன் மூலம் நமக்கு புதிய முடி வளரும். அந்த அளவிற்கு ஒரு பவர்ஃபுல்லான குறிப்பு என்று கூட வைத்துக் கொள்ளலாம். செலவில்லாமல் நம் வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்களை வைத்தே இந்த குறிப்பை தயார் செய்து விடலாம். சுலபமாக தலையில் அப்ளை செய்தும் கொள்ளலாம். இந்த ஹேர் பேக்கில் இருக்கும் ஊட்டச்சத்து அனைத்தும் நம் தலை முடியை முழுமையாக சென்றடைய வேண்டும் என்றால் என்ன செய்வது என்பதை பற்றிய ஒரு ஸ்பெஷலான ஐடியாவையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். சரி, அது இது என்று நேரத்தை கடத்தாமல் நேரடியாக குறிப்பை பார்த்து விடலாம் வாங்க.

இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருள் இரண்டு. கருவாப்பிலை 2 கைப்பிடி, லேசாக புளித்த கெட்டி தயிர் 2 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலையை சுத்தமாக தண்ணீரில் போட்டு கழுவி அலசி எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். தயிரை ஊற்றி விழுது போல இதை அரைத்து, அதன்பின்பு தேவையான அளவு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பேக் போல இதை தயார் செய்து கொள்ளுங்கள். (உங்களுக்கு ரொம்பவும் கொஞ்சமாக முடி இருந்தால், 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை, 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்துக் கொண்டால் போதும்.)

- Advertisement -

இந்த இரண்டு பொருட்களுமே முடி வளர்ச்சியை அதிகமாக தூண்டக்கூடிய சக்தி கொண்டது. தலைக்கு குளிப்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பு இந்த பேக்கை நன்றாக ஸ்கேல்பிலும், தலை முடிக்கு மேல் படும் படி போட்டுவிட்டு ஒரு கொண்டைக்கட்டி அப்படியே விட்டுவிடுங்கள். 1/2 மணி நேரம் போனதும் வெறும் தண்ணீரை ஊற்றி தலையை அலசிக்கொண்டால் போதும். ஷாம்பு போட்டு அலசக்கூடாது. ஷாம்பு போட்டு அலசும் போது நம்முடைய தலையில் இந்த ஹேர் பேக், போட்ட பலனை நம்மால் முழுமையாக பெற முடியாது.

பேக்கை போடுவதற்கு முன்பு தலையில் நிறைய எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டாம். சாதாரணமாக எப்போதும் இருக்கக் கூடிய எண்ணெய் இருந்தால் போதும். இந்த பேக்கை அலசும்போது நன்றாக தேய்த்து குளித்து விட்டால், இந்த பேக் மூலமாகவே உங்கள் தலையில் இருக்கும் அழுக்கு அத்தனையும் நீங்கி உங்களுடைய முடி சில்கி மற்றும் சைனியாக மாறும்.

- Advertisement -

வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தலாம். பேக்கை போட்டு ஒரு நாள் கழித்து, அதற்கு மறுநாள் ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களுடைய முடியில் புது பொலிவை காண முடியும். அந்த அளவிற்கு இந்த பேக் ரொம்பவும் எஃபெக்ட்டா வேலை செய்யும். இதோடு மட்டுமல்லாமல் நீங்கள் உங்களுடைய உணவு பழக்க வழக்கங்களில் கொஞ்சம் மாற்றங்களை கொண்டு வாருங்கள்.

நெல்லிக்காய், கொய்யாப்பழம், கீரை, பச்சை காய்கறிகளை உணவோடு சேர்த்துக் கொள்வது, இரும்பு சத்து நிறைந்த பேரிச்சம் பழம், வெல்லம் சேர்த்த வேர்க்கடலை பஃர்பி இவைகளை மாற்றி மாற்றி சாப்பிட்டு வர வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் முடிந்தால் தினமும் நான்கு பாதாமை இரவில் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை தோலை உரித்து விட்டு அந்த பாதாமை சாப்பிட்டு வருவது நம்முடைய அழகிற்கு மிக மிக நல்லது. உங்களுக்கு மேலே சொன்ன குறிப்புகள் பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா நீங்க தேவதை போலவே மாறிடுவீங்க.

- Advertisement -