தீபாவளி நோன்பு முறை மற்றும் வழிபடும் நேரம்

Diwali viratham
- Advertisement -

நாம் தீபாவளியை வரவேற்று கொண்டாட காத்திருக்கின்றோம். இந்த தருணத்தில் தீபாவளி பண்டிகையை பற்றியும், நோன்பு முறைகளைப் பற்றியும், நாம் இந்தப் பதிவில் காணப்போகிறோம்.

Diwali

தீபாவளி. தீப ஒளி என்பது தான் இதற்கு அர்த்தம். தீபங்களை ஏற்றி அதில் வரும் ஒளியின் மூலமாக இருள் விலகும். அதுபோல நம் மனதிலுள்ள தீமை என்னும் இருள் நீங்கி நன்மை என்னும் பிரகாச ஒளிபெற தீபாவளியை கொண்டாடுகிறோம்.

- Advertisement -

தீபாவளி அன்று கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது பெண்களுக்கான விரதம். இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது? இதை பெண்கள் கடைப்பிடிப்பதாக காரணம் என்ன? இந்த விரதத்தின் வரலாறு என்ன? இப்படிப்பட்ட பல கேள்விகள் நம்மில் உண்டு. அதற்கான பதிலை நாம் இப்பொழுது சுருக்கமாக காணப்போகிறோம்.

பொதுவாக கேதார கௌரி நோன்பு என்பது 21 நாட்கள் கடைபிடிக்கப் படுகிறது. ஆனால், அது எல்லா பெண்களாலும் செய்ய இயலாது. ஏனென்றால் 21 நாட்கள் உண்ணாமல் நோன்பு மேற்கொள்ளும் அளவிற்கு அவர்களின் உடல்நிலை ஒத்துழைக்காது. அது போன்றவர்கள் 21வது நாளின் முடிவில், அதாவது தீபாவளி அமாவாசை அன்று நோன்பு இருந்து விரதத்தை கடைபிடிக்கலாம். நாம் செய்யும் பலகாரத்துடன், நோன்பு கயிறு, சீப்பு, கண்ணாடி, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றையும் அம்பாளுக்கு படைத்து பூஜையை அனுஷ்டிக்கலாம்.

- Advertisement -

Diwali viratham

சரி பெண்கள் ஏன் இந்த நோன்பை கடைப்பிடிக்கிறார்கள். இதை அறிந்து கொள்ள ஒரு சிறிய கதையும் உண்டு. கயிலை மலையில் ஒருநாள் எல்லா சித்தர்களும், ஞானிகளும், முனிவர்களும் சேர்ந்து சிவபெருமானையும், பார்வதியையும் வணங்குகின்றனர். அதாவது, சிவன், பார்வதி இருவரையும் சேர்த்து வைத்து பிரதக்ஷணம் செய்து வழிபடுகிறார்கள். அதில் பிருங்கி முனிவர் என்பவர் மட்டும் வண்டு உருவில் மாரி பார்வதி தேவியை விட்டுவிட்டு சிவனை மட்டும் சுற்றி வந்து வழிபட்டார். இதனைக் கண்டு கோபமடைந்த பார்வதி தேவி, சிவபெருமானிடம் கூறுகிறார் ,பிருங்கி முனிவர் செய்ததை என்னால் ஏற்க முடியாது. உங்கலோடு நான் இனைந்து இல்லாததால் தானே இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் நடைபெறுகிறது. இனி உங்களில் சரிபாதியாக நான் இருபேர்ண் என்று கூறி பூலோகம் வந்து அடைந்து, கடும் தவம் மேற்கொண்டு, நோன்பு இருந்து, சிவனின் உடலிலேயே பாதியாக கலந்து அர்த்தநாரீஸ்வரராக மாறிய நாளைத்தான் நாம் கேதாரகௌரி நோன்பாக கொண்டாடுகிறோம்.

Diwali viratham

அம்பாளே தன் கணவனுடன் சேர்வதற்கு இந்த நோன்பை மேற்கொண்டிருக்கிறார். ஆகவே, பெண்கள் இந்த நோன்பை கடைபிடித்தால் தங்கள் கணவருடன் சேர்ந்து வாழவும், கணவரின் ஆயுள் நீடிக்கவும், குடும்பத்தில் அமைதி, செல்வம், பெருகவும் இந்த நோன்பு மேற்கொள்ளப்படுகிறது. இதுதான் கேதாரகௌரி நோன்பின் வரலாறு.

- Advertisement -

அடுத்து தீபாவளி அன்று எப்படி கங்காஸ்நானம் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

தீபாவளி அன்று அதிகாலை 3 மணிக்கு மேல் 6 மணிக்குள் அதாவது இந்த நேரத்தை பிரம்ம முகூர்த்த நேரம் என்று கூறுவார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் சுடுதண்ணீரில் நீராடுவதன் மூலம் நமக்கு கங்கையில் ஸ்நானம் செய்வதற்கு இணையான பலனை நம்மால் பெற முடியுமாம்.. ஏனெனில், அந்த சுடுதண்ணீரில் கங்கா வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். இந்த கங்கா ஸ்நானத்தின் போது சீயக்காயும், நல்லெண்ணெயையும் தலைக்கு வைத்து குளிப்பது குறிப்பிடத்தக்கது.

ennai-kuliyal

எல்லோராலும் கங்கைக்கு சென்று ஸ்நானம் செய்ய முடியாது அல்லவா! அதனால் தான் தீபாவளி அன்று கங்காதேவி நம் வீட்டு சுடுதண்ணீரில் வாசம் செய்கிறாள் என்பது நம்பிக்கை. கங்கா ஸ்நானம் மட்டும் அல்லாமல் நோன்பு மேற்கொள்ளுவோர்கள் அனைவரும் காலை ஆறுமணிக்குள்ளேயே நோன்பிற்குரிய பூஜையை செய்து முடிப்பது நல்லது. பூஜை செய்யும் சமயத்தில் உங்கள் வீட்டில் உள்ள அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி இறைவன் முன் வைத்து வழிபடுங்கள். அதில் நிச்சயமாக ஒரு தீபமாவது நெய் தீபமாக இருப்பது நல்லது. அதே போல இறைவனை வழிபடும் சமயத்தில் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அனைத்து, தீப ஒளியில் இருந்து வரும் வெளிச்சத்தில் இறைவனை வணங்குவது மேலும் சிறப்பு சேர்க்கும்.

இந்த தீபாவளியை எல்லோரும் சிறப்பாக கொண்டாட வேண்டும். சந்தோஷம் என்பது பகிர்ந்து கொள்வதில் தான் இரட்டிப்பாகிறது. ஆகையால் வசதி படைத்தவர்கள், இல்லாதவர்களுக்கும் கொஞ்சம் கொடுத்து தான் பாருங்களேன்! உங்கள் தீபாவளி மகிழ்ச்சி, எப்படி பல மடங்கு ஆகப்போகிறது, என்று பாருங்கள். தித்திக்கும் தீபாவளியை திகட்டாத மகிழ்ச்சியுடன் சேர்ந்து அனைவரும் கொண்டாட வாழ்த்துகிறோம்.

- Advertisement -