தன தானியத்திற்கு வீட்டில் பஞ்சம் வராமல் இருக்க பரிகாரம்.

mahalashmi4
- Advertisement -

குடும்ப கஷ்டத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்ற பொறுப்பு ஒவ்வொரு குடும்ப தலைவருக்கும் இருக்கும். குடும்ப கஷ்டத்தை தீர்ப்பதற்கு உண்டான முயற்சிகளையும் அவர் மேற்கொள்வார். கடினமாக உழைத்து எப்படியாவது பணம் சம்பாதித்து வீட்டில் இருப்பவர்களை கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் அவர்களுக்கு கவனம் நிச்சயம் இருக்கும்.

இருந்தாலும் ஏனோ வாழ்க்கையில் சில தருணங்களில் பின்னோக்கி செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும். உங்களுடைய வீட்டிலும் நிலைமை இதே போல இருந்தால், குடும்ப தலைவருக்கு இருக்கும் கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்றால், ஆன்மீக ரீதியாக என்ன பரிகாரம் செய்வது. பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

குடும்ப கஷ்டம் தீர குடும்ப தலைவர் கையால் செய்ய வேண்டிய பரிகாரம்

ஒரு அகலமான கிண்ணத்தில் பச்சரிசியை எடுத்துக்கோங்க. அந்த பச்சரிசியை பூஜையறையில் வைக்க வேண்டும். குடும்பத் தலைவர் ஒரு ரூபாய் நாணயத்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஒரு ரூபாய் நாணயத்தை அந்த அரிசியில் அப்படியே புதைத்து வைக்கவும். அப்போது குடும்பத் தலைவர் தன் பெயரை மூன்று முறை சொல்லி இந்த நாணயத்தை புதைத்து வைக்கவும்.

வீட்டில் இருப்பவர்கள் மற்றவர்கள் எல்லோரும் கூட கையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக் கொண்டு குடும்பத் தலைவர் இந்த பரிகாரத்தை செய்த பின்பு, மற்றவர்கள் கையில் இருக்கும் நாணயத்தை அந்த அரிசியில் புதைக்கவும். அப்போது அவர்கள் குடும்ப தலைவரின் பெயரை தான் மூன்று முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

இப்போது குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை நாணயங்கள் அரிசியில் புதைந்திருக்கும். இப்படி தயார் செய்த அந்த பச்சரிசி கிண்ணத்தை அப்படியே பூஜை அறையில் வைத்து தினமும் வழிபாடு செய்து வர அவர்கள் வீட்டில் தன தானியத்திற்கு பஞ்சம் வராது என்று சொல்லப்பட்டுள்ளது.

தினமும் விளக்கு ஏற்றி ஊதுவத்தியை அந்த பச்சரிசிக்கு காண்பித்து பணவரவு கொடுக்க வேண்டும் என்று குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஆறு மாதத்திற்கு ஒருமுறை அந்த பச்சரிசியை காக்கை குருவிகளுக்கு இணையாக போட்டுவிட்டு மீண்டும் புது பச்சரிசியை வைக்கவும். மீண்டும் அதே ஒரு ரூபாய் நாணயங்களை குடும்பத் தலைவரின் கையாளும் மற்ற உறுப்பினர்களின் கையாலும் அந்த அரிசியில் புதைத்து வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த இடத்தில் பச்சரிசி சந்திரன், ஒரு ரூபாய் நாணயம் குபேரன் இவர்கள் இருவரும் ஒன்றாக சேரும்போது அந்த வீட்டில் தன தானியத்திற்கு என்றுமே பஞ்சம் இருக்காது என்பது தான் ஜோதிடத்தில் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள நம்பிக்கை. இந்த பரிகாரத்தை நீங்கள் பௌர்ணமி தினத்தில் செய்யலாம் அல்லது ஒரு வெள்ளிக்கிழமையில் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: வெறும் 5 ரூபாய் மட்டும் இருந்தால் போதும். ஐந்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கலாம்.

இது ஒரு எளிமையான பரிகாரம்தான் குடும்ப தலைவருக்கு வீட்டில் கஷ்டம் என்னும் போது இதை செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் நிதி நிலைமை உயரும் என்ற நம்பிக்கையோடு இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -