வெறும் 5 ரூபாய் மட்டும் இருந்தால் போதும். ஐந்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கலாம்.

budhan
- Advertisement -

சில பேரால் என்ன தான் கஷ்டப்பட்டாலும் நிரந்தர வருமானத்தை தேடிக் கொள்ள முடியாது. தின கூலியாகவே இருந்தாலும், அது தினசரி கிடைத்தால் தானே நம்மால் வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியும். சில பேருக்கு வார கூலி இருக்கும். அப்படி இருந்தால் ஒரு வாரம் வேலையில் இருப்பார்கள். மறு வாரம் வருமானம் இல்லாமல் இருப்பார்கள்.

சில பேருக்கு தினசரி கூலி சரியாக கிடைக்காது. பத்து நாள் வேலை இருக்கும். பத்து நாள் வேலை இருக்காது. இப்படியும் கஷ்டப்பட்டு வாழ்பவர்கள் இன்றும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பணத்துக்கு கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கான பரிகாரம் இது.

- Advertisement -

உங்களுக்கு நிரந்தர வருமானம் தேவை என்றால் நீங்கள் மாத சம்பளமே வாங்குபவர்களாக இருந்தாலும் அந்த வருமானத்தை உயர்த்திக் கொள்ள இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். தவறு கிடையாது. எல்லோராலும் எளிமையாக செய்யப்படக்கூடிய ஐந்து ரூபாய் பரிகாரம் இது.

வருமானத்தை நிரந்தரமாக்க பரிகாரம்

இந்த பரிகாரத்தை புதன்கிழமை அன்று செய்ய வேண்டும். இதற்கு கட்டாயமாக செம்பினால் செய்யப்பட்ட சொம்பு தேவை. சின்ன சின்ன சைஸில் இரண்டு சொம்பு வாங்கி கொள்ளுங்கள். தினமும் அந்த சொம்பில் ஐந்து ரூபாய் நாணயத்தை சேகரித்து வாருங்கள். வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமை அன்று கோவிலுக்கு செல்ல வேண்டும்.

- Advertisement -

நவக்கிரகங்களில் புதன் பகவானுக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு நிரந்தர வருமானம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வீட்டிற்கு வந்து இந்த சொம்பில் சேகரித்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா. அந்த ஐந்து ரூபாய் நாணயங்கள், அதிலிருந்து ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொண்டுபோய் யாருக்காவது ஒருவருக்கு உங்கள் கையால் தானம் கொடுத்து விடுங்கள்.

யாசகர்களுக்கு தானமாக கொடுக்கலாம். ஒரே ஒரு ஐந்து ரூபாயை கொடுத்தாலே போதும். அதற்கு மேற்பட்ட ஐந்து ரூபாயை தானம் செய்வது உங்களுடைய விருப்பம். அது உங்களுடைய வசதியை பொறுத்தது. கட்டாயம் ஒருவருக்கு மட்டுமாவது புதன்கிழமை அந்த செம்பு சொம்பிலிருந்து எடுத்த ஐந்து ரூபாயை உங்கள் கையால் தானம் கொடுத்தால், உங்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும்.

- Advertisement -

ஒரு வாரம் பரிகாரத்தை செய்துவிட்டு உடனடியாக கோடீஸ்வரராக வேண்டும் என்று நினைக்கக் கூடாது. வாரம் தவறாமல் இந்த தானத்தை நீங்கள் செய்து வர வேண்டும். சரிங்க அந்த இரண்டு சொம்பு நிரம்பி விட்டது. என்ன செய்வது. அதை எடுத்து நீங்கள் வேறு ஏதாவது உங்கள் குடும்ப செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

பால் வாங்கலாம், காய்கறி வாங்கலாம், என்ன வேண்டும் என்றாலும் வாங்கலாம். ஆனால் தினமும் ஐந்து ரூபாயை அந்த சொம்பில் போடும் பழக்கத்தை மட்டும் விடக்கூடாது. வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமை அன்று அந்த சொம்பிலிருந்து எடுத்த ஐந்து ரூபாயை தானம் செய்ய மறக்க கூடாது.

இதையும் படிக்கலாமே: மழை தண்ணீரை வைத்து, பண மழையை பொழிய வைக்கும் குபேரர் பரிகாரம்.

இதை உங்களுடைய வாழ்க்கையின் வழக்கமாக மாற்றிக் கொண்டால் உங்களுக்கு நிரந்தர வருமானம் கிடைப்பது நிச்சயம். படிப்படியாக நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டே செல்ல நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். செய்துதான் பாருங்களேன். ஐந்து ரூபாய் தானத்தை செய்வதால் நாம் ஒண்ணும் மோசம் போகும்போது கிடையாது அல்லவா. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -