சாஸ்திரம் சொல்லும் உண்மை! உங்கள் வருமானத்திலிருந்து 5% சதவீதத்தை இதற்காக மட்டும் செலவழித்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி தெரியுமா?

gajalakshmi-cash
- Advertisement -

நாம் ஈட்டும் வருமானத்தில் இருந்து ஒரு சிறு தொகையை இதற்காக செலவழிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இப்படி செலவு செய்பவர்களுக்கு அந்த செலவு செய்த தொகை ஐந்து மடங்காக திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம்! அந்த வகையில் நம்முடைய வருமானத்திலிருந்து, எந்த விஷயத்திற்காக 5 சதவீதத்தை செலவு செய்ய கோரப்படுகிறது? இதற்காக செலவு செய்தால் நாம் கோடீஸ்வரர் ஆக முடியுமா? இதைப்பற்றிய விரிவான ஆன்மீக தகவல்களை இனி இந்த பதிவின் மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

ஒருவர் சம்பாதித்த பணம் முழுவதுமாக அவருக்கு என்று செலவு செய்தால் சம்பாதித்த பணத்தை தவிர ஒரு ரூபாய் கூட அவர்களுக்கு அதிகமாய் வந்து சேராது. நாளுக்கு நாள் அவருடைய வருமானம் குறையுமே தவிர, வளர்ச்சி அடையாது. சம்பாதித்த பணத்தை குடும்பத்திற்கு முக்கால் பங்காக இருந்தாலும், கால் பங்கு பணம் பல வகைகளாக பிரிக்கப்பட்டு செலவு செய்யப்பட வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது உதாரணத்திற்கு நீங்கள் ஒரு இருபதாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 18000 ரூபாயை குடும்பத்திற்கு என்று நீங்கள் வைத்துக் கொண்டாலும் 2000 ரூபாயை வேறு சில வழிகளில் மற்றவர்களுக்காக உபயோகம் உள்ள செலவுகளை செய்ய வேண்டும். சுயநலத்தோடு செலவு செய்யும் எந்த ஒரு பணமும் நிலைப்பதில்லை! பொதுநலத்தோடு செய்யப்படும் எந்த ஒரு செலவும் நம்மை விட்டு செல்வதும் இல்லை என்பது தான் இதில் இருக்கும் சூட்சமம் ஆகும்.

இந்த பிரபஞ்சம் ஒரு மனிதன், இன்னொரு மனிதனை சார்ந்து இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்களுக்காக மட்டுமே வாழாமல், மற்றவர்களுக்காகவும் சேர்த்து தான் வாழ வேண்டி இருக்கிறது. மனிதநேயம் என்பதும் இது தான், ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் உதவியாக இருப்பது ஆகும். எனவே நீங்கள் ஈட்டிய வருமானத்தில் இருந்து ஐந்து சதவீதம் மட்டும் தானம் செய்ய செலவு செய்ய வேண்டும். மாதம் ஒரு நாள் அந்த தொகையில் இருந்து இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும், முடியாதவர்களுக்கும் நீங்கள் உங்களுடைய கைகளால் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

- Advertisement -

நீங்கள் செய்யும் இந்த சிறு உதவி உங்களுக்கு வீண் விரயம் அல்ல! இது பன்மடங்கு உங்களுடைய வருமானத்தை, செல்வத்தை, அதிகார பதவியை உயர்த்தி காட்டக்கூடிய அற்புதமான எளிய பரிகாரமாகும். எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஒரு மனிதன் நான் சம்பாதித்த பணத்தில் இருந்து ஒரு சிறு தொகையை இன்னொரு மனிதனுக்கு உதவ முன் வந்தால் அது தான் தெய்வீகமாகும். இந்த தெய்வீக தன்மை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் பொழுது பூமியும் வளம் பெறுகிறது. நம் வருமானத்தில் இரண்டு சதவீதத்தை வாயில்லா ஜீவன்களுக்கு செலவு செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

அது போல ஐந்து சதவீதம் மற்றவர்களுக்காக, நம்மை போலவே இருக்கும் மனிதர்களுக்காக கஷ்டத்தின் போது உதவியாக செலவு செய்ய வேண்டும். இப்படி செய்து வருபவர்களுக்கு நீங்கள் செய்த உதவி ஐந்து மடங்காக பெருகி உங்களிடமே திரும்ப வந்து சேரும் என்பது புரியாத ஆன்மீக சூட்சமமாகும். இது கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் நடக்கும் அற்புதமாக இருந்து வருகிறது. இதுவரை நீங்கள் இது போல தான தர்மங்களுக்காக செலவு செய்யாவிட்டால், இனி செலவு செய்ய தயங்க வேண்டாம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பார்கள் எனவே இதை மட்டும் செஞ்சு பாருங்க நீங்களும் விரைவிலேயே கோடீஸ்வரன் ஆகலாம்.

- Advertisement -