பண வரவு அதிகரிக்க குபேர பூஜை

kuberar cash in hand
- Advertisement -

நம் வீட்டில் செய்யப்படும் ஒவ்வொரு பூஜையும் வழிபாடும் நம் குடும்பம் நல்ல முறையில் வாழவும், நம்முடைய செல்வ நிலை பல மடங்கு உயரவும் தான். அந்த வகையில் பணத்திற்கு அதிபதிகளான மகாலட்சுமி தாயார், சுக்கிரன், குபேரர் போன்றவர்களை வணங்குவதும் நம்முடைய பொருளாதார நிலையை மேலும் மேலும் உயர்த்தி நல்ல முறையில் வாழத் தான்.

அந்த வகையில் இப்போது குபேர பூஜை வெகு விமர்சையாக அனைத்து இடங்களிலும் செய்யப்படுகிறது. அதிலும் தீபாவளி அன்று செய்யப்படும் குபேர பூஜை மிகவும் விசேஷமானது. இந்த பதிவில் தீபாவளிக்கு முன்பே செய்ய கூடிய தந்தேராஸ் எனப்படும் பூஜை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த பூஜையை வடமாநிலத்தவர்கள் குபேரருக்கு நன்றி சொல்லும் விதமாக செய்கிறார்கள். நாமும் இந்த தீபாவளியில் இது போல பூஜை செய்து நம்முடைய செல்வ வளத்தையும் பெருக்கிக் கொள்ள வழி தேடிக்கொள்வோம்.

- Advertisement -

குபேரர் அருளுடன் பணவரவு அதிகரிக்க
இந்த பூஜையை வெள்ளிக்கிழமை மாலை ஆறிலிருந்து எட்டு மணிக்குள்ளான நேரத்தில் செய்ய வேண்டும். இந்த பூஜை செய்வதற்கு குபேரர் படம் அல்லது சிலை உங்களிடம் எது இருந்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் கோலம் போட்டு மனை வைத்து அதன் மேல் பச்சை நிற துணியை போட்டு பிறகு குபேரர் படம், சிலை இரண்டில் எது இருக்கிறதோ அதை வைத்து விடுங்கள்.

அதன் பிறகு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். குபேரருக்கு முன்பாக பச்சரிசி மாவினால் குபேரச் சக்கரம் வரைய வேண்டும். குபேரர் படம் என்று இதை கூகுளில் போட்டால் வரும் அதை பார்த்து வரைந்து கொள்ளுங்கள். இதில் வரும் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு ரூபாய் நாணயத்தை வைத்து விடுங்கள். அதன் பிறகு வெற்றிலை, பாக்கு, பூ, பழம், ஊதுபத்தி போன்றவற்றை யெல்லாம் வைத்து பூஜைக்கு தயார் செய்து விடுங்கள்.

- Advertisement -

அதே போல் குபேரருக்கு உலர் திராட்சைகள், முந்திரி, பாதாம் போன்றவற்றை வைக்க வேண்டும். இவருக்கு அவல் மிகவும் பிடித்த உணவு. ஆகையால் அவலில் செய்த பாயாசத்தை நெய்வேத்தியமாக செய்து வைத்து விடுங்கள். இப்பொழுது ஒரு சிறிய கிண்ணத்தில் நிறைய சில்லரை காசுகளை நிரப்பி அதையும் குபேரர் முன்பு வைத்து விடுங்கள்.

இதையெல்லாம் செய்த பிறகு குபேரர் காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும். அதை சொல்ல தெரியாதவர்கள் யூடியூபில் கூட போட்டு பூஜை நேரத்தில் ஒளிக்க விடலாம். இதை கேட்ட படியே குபேரர் முன்பாக அமர்ந்து உங்களுடைய பண தேவைகள் நிவர்த்தியாக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பூஜை முடிந்த பிறகு உங்கள் முன்னே இருக்கும் சில்லறை காசுகளை கையில் எடுத்து மறுபடியும் கிண்ணத்தில் கொட்டுங்கள். அதாவது சில்லறையின் ஒலி நன்றாக வீட்டில் கேட்கும் படி மூன்று முறை போட்ட பிறகு பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் பெண்களின் நிலை உயர

அதன் பிறகு அன்றைய தினமே இரவு 8 லிருந்து 9 சுக்கிர ஹோரை வரும். இந்த நேரத்தில் முடிந்தால் ஏதேனும் சிறிய வெள்ளி பொருளை வாங்கி வையுங்கள். இது உங்கள் வீட்டில் பண வரவை பல மடங்கு அதிகரிப்பதோடு, பொன் பொருள் சேர்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த நேரத்தில் வாங்க முடியாதவர்கள் அன்றைய நாளில் சுக்கிர ஹோரையில் வாங்கலாம். இந்த நாளில் செய்யப்படும் அனைத்து பூஜைகளும் நல்ல விசேஷமான பலன்களை தரக்கூடியது வாய்ப்புள்ளவர்கள் இதை செய்து பலனடையலாம்.

- Advertisement -