வீட்டில் பெண்களின் நிலை உயர

mahalakshmi manthiram mangalyam
- Advertisement -

வீட்டில் உள்ள பெண்கள் தான் அனைத்திற்கும் மூலாதாரமானவர்கள். வீட்டில் நல்லது கெட்டது என எதுவாக இருப்பினும் அவர்கள் இன்றி எதுவும் நடக்காது. இப்படியான வார்த்தைகளையும் வழக்கங்களையும் நாம் சொல்லிக் கொண்டே இருந்தாலும் நடைமுறையில் பல இடங்களில் அப்படி நடப்பதில்லை. பல வீடுகளில் இன்னமும் பெண்கள் உதாசீனப்படுத்தப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வாக ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் எளிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பெரும்பாலான வீடுகளில் பெண்களுக்கென எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. வீட்டில் கணவன், பிள்ளைகள், உறவுகள் என அனைவரும் ஏதோ ஒரு வகையில் அவர்களை மட்டம் கட்டிக் கொண்டு இருப்பார்கள். அவர்களுடைய பேச்சை காது கொடுத்துக் கூட கேட்க மாட்டார்கள். இப்படியான பெண்கள் தங்களுடைய கருத்தை பிறர் கேட்டு தன் சொல்படி நடக்க இந்த ஒரு பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

பெண்களின் சொல்பேச்சை பிறர் கேட்க

இந்த பரிகாரத்தைப் பற்றி தெரிந்ததும் கேள்விப்பட்டதும் இதற்கெல்லாம் கூடவா பரிகாரம் இருக்கிறது என்று பலருக்கும் கேள்வி எழலாம். இன்றளவும் பல இடங்களில் இது போல பிரச்சினைகள் இருக்கத் தானே செய்கிறது. இது வீட்டில் மட்டுமல்ல வெளியிலும் கூட பெண்கள் பல இடங்களில் இப்படி நடத்தப்படுவது நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இப்படியான பிரச்சனைக்கு எளிய தீர்வாக இந்த பரிகாரத்தை பெண்கள் செய்யலாம்.

இதற்கு வெள்ளிக்கிழமை அன்று காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் குளித்து முடித்து தலையில் பூச்சூடி பொட்டு வைத்து முதலில் தங்களை லட்சுமி கரமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டும் அந்த தீபம் ஒற்றைப்படையில் ஏற்ற வேண்டும். அது எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் ஒரே ஒரு தீபம் ஆவது நெய் தீபமாக ஏற்ற வேண்டும். இது மகாலட்சுமி தாயாரின் கடாட்சத்தை கொடுக்கும். இந்த தீபம் கிழக்கு முகமாக எரிய வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு நீங்கள் கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு உங்களுடைய மாங்கல்யத்தில் குங்குமத்தை இடவேண்டும். இந்த குங்குமம் நல்ல தரமான தாழம்பூ குங்குமமாக பார்த்து வாங்கி வைத்து சொல்லிக் கொள்ளுங்கள். இதையெல்லாம் செய்த பிறகு இந்த ஒரு மந்திரத்தையும் சொல்லுங்கள்.

ஓம் சர்வ மங்கள தாரணியே நமக

என்ற இந்த மந்திரத்தை 11 முறை சொல்ல வேண்டும். இந்த பரிகாரத்தை இதில் குறிப்பிட்டுள்ள படி தான் செய்ய வேண்டும். காலையில் எழுந்து குளித்து பூஜை அறையில் தீபம் ஏற்றி அதுவும் கிழக்கு முகமாக இயற்றிய பிறகு நீங்களும் கிழக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்துடன் மாங்கல்யத்தில் குங்குமத்தை சேர்க்க வேண்டும். இந்த பரிகாரத்தை பெண்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் இதை செய்ய செய்ய அவர்களுக்கான ஆளுமை திறன் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: சூரிய பகவானால் ஏற்படும் உடல் உபாதைகளும் பரிகாரங்களும்

அவர்களின் பேச்சை பிறர் கேட்கக் கூடிய வல்லமையை பெறுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் மாதவிலக்கான நேரத்தில் மட்டும் இதை செய்யாமல் வெள்ளிக்கிழமை தோறும் தொடர்ந்து செய்யலாம். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருக்கும் பெண்கள் நம்பிக்கை உடன் செய்து பலன் அடையலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -