நாளை தனுர் சங்கராந்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

suryan
- Advertisement -

இந்த தனுர் சங்கராந்தி என்றால் என்ன? என்பதை நாம் முதலில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா. மாதத்தில் ஒரு முறை சூரிய பகவான், ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர்ந்து கொண்டே இருப்பார். நாளைய தினம் டிசம்பர் 16-12-2023 ஆம் தேதி மாலை 4.01க்கு சூரிய பகவான், விருச்சக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு மாறவிருக்கின்றார்.

அதாவது நாளைய தினம் தான் கார்த்திகை மாதத்தின் கடைசி நாள். இருந்தாலும் சூரிய பகவான் நாளை மாலை 4.01 மணி ஒரு நிமிடம் அளவில் தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆவதால், நாளைய தினம் மாலை 4.01 க்கு நமக்கு மார்கழி மாதம் பிறக்கின்றது. இதுதான் திருக்கணித ஜோதிடத்தின் கணிப்பு.

- Advertisement -

சூரிய பகவான் விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு மாறக்கூடிய இந்த நிகழ்வை தான் தனுர் சங்கராந்தி என்று சொல்லுவார்கள். ‘தனுர்’ என்பது தனுசு ராசியை குறிக்கின்றது. இதே போல தான் தை மாசம், சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்கு இடம் பெயரும் போது அதை மகர சங்கராந்தி என்று சொல்லுவார்கள். இதே போல ஒவ்வொரு மாதத்திற்கும், சூரிய பகவான் ஒவ்வொரு ராசிக்கு இடம் பெயரும் போது ஒவ்வொரு சங்கராந்தி நடைபெறும். சரி இதில் நமக்கு என்ன சிறப்பு.

இப்படி சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர கூடிய குறிப்பிட்ட அந்த 1 மணி நேரம் நாம் ரொம்ப ரொம்ப சிறப்பு வாய்ந்த நேரமாக சொல்லப்பட்டுள்ளது. (அதிலும் வரக்கூடியது மார்கழி மாதம் அல்லவா இந்த சங்கராந்தி ரொம்ப ரொம்ப சிறப்பு.) அந்த குறிப்பிட்ட நேரத்தில் வைக்கக்கூடிய வேண்டுதலானது உடனே பலிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் உடல் சோர்வு, மன சோர்வை நீக்கக்கூடிய சக்தி சூரிய கிரகத்திற்கு உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

நாளைய தினம் 16-12-2023ஆம் தேதி மாலை 4.09 மணியிலிருந்து மாலை 5.56 வரைதான் அந்த அற்புதம் வாய்ந்த நேரம். இந்த 1 மணி நேரத்தில் நீங்கள் பின் சொல்ல கூடிய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை வீட்டில் இருந்தபடியே உச்சரிக்கலாம். வெளியில் இருப்பவர்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தும் உச்சரிக்கலாம்.

இந்த ஒரு மணி நேரத்தில், 10 நிமிடத்தை நீங்கள் பயன்படுத்துங்கள் போதும். ‘ஓம் க்ரிணி சூர்யாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரியங்கள். மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பும் உங்களுடைய கோரிக்கையை இறைவனிடம் வைக்க வேண்டும். மந்திரத்தை உச்சரித்து முடித்த பின்பும் இறைவனிடம் உங்கள் கோரிக்கையை வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த மந்திரத்தை சொல்லி சூரியனை வணங்குபவர்களுக்கு இருக்கக்கூடிய பித்ரு தோஷம் நீங்கும். தந்தை வழி உறவில் பலம் கிடைக்கும். தந்தை வழி சொத்து பிரச்சனைக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். அரசாங்க வேலை கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கார்த்திகை மாதம் கடைசி நாள் வழிபாடு

மணக்குழப்பத்தில் உள்ளவர்களுக்கு தெளிவு பிறக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அற்புதம் வாய்ந்த அரிய இந்த தகவல் உங்களுக்கு பயன்படி இருந்தால் நீங்களும் பின்பற்றுங்கள். உங்களுக்கு தெரிந்த நாலு பேருக்கும் இந்த நல்ல ஆன்மீகம் சார்ந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -