குடும்பத்தில் நிறைந்து இருக்கும் தரிதிரம் விலகி பணக்கார யோகம் கிடைக்க இந்த எளிய பரிகாரத்தை செய்தாலே போதும்

cow
- Advertisement -

சிறிய குழந்தையாக இருக்கும் பொழுதே ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையை பற்றிய கனவு என்பது இருந்து கொண்டிருக்கும். அதாவது ஏழ்மையான நிலையில் இருக்கும் ஒரு குழந்தை எப்படியாவது நாம் வளர்ந்து பணக்காரராக வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும். அவ்வாறு ஒவ்வொருவருக்கும் தங்கள் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி பல கனவுகளுடன் பள்ளிப் படிப்பை முடித்து, தனது பட்டப்படிப்பையும் முடித்துவிட்டு, வேலைக்கு செல்லும் பொழுது, வேலை கிடைக்காமல் துன்பப்படும் பொழுது தான் அந்த குழந்தைகளின் கனவுகள் சற்று தளர ஆரம்பிக்கும். வேலை கிடைப்பதே இவ்வளவு பிரச்சனையாக இருந்தது என்றால் நமது கனவை அடைய முடியுமா? என்ற யோசனை உண்டாகும். இப்படி அனைத்து பிரச்சனைகளையும் தகர்த்து நமது வாழ்க்கையில் வெற்றி பெற முதலில் நம்மை சூழ்ந்திருக்கும் தரித்திரம் விலக வேண்டும். இவ்வாறு தரிதிரம் விலகுவதற்கான சிறப்பு வாய்ந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் தரிதிரம் என்பது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவங்களும் அல்லது இப்பொழுது செய்கின்ற பாவங்களும் தான் நம்மைச் சுற்றி தரிதிரமாக உலவிக் கொண்டிருக்கும். ஒவ்வொருவருக்கும் தங்கள் பாவ புண்ணிய கணக்குகளை பொறுத்து தான் நன்மை, தீமை அனைத்தும் நடக்கிறது.

- Advertisement -

உதாரணமாக நாம் வேலை செய்யும் இடத்தில் நம்மை போன்றே ஒருவர் வேலை செய்துகொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு மட்டும் பதவி உயர்வு கிடைக்கிறது. மற்றவர்களிடம் பாராட்டு கிடைக்கிறது. ஆனால் அதே வேலையை அவரை விட நல்ல விதமாக நாம் செய்தாலும் அவருக்குக் கிடைத்த புகழ், பதவி உயர்வு நமக்கு ஏன் கிடைப்பதில்லை, என்று பலரின் மனதிலும் இவ்வாறான கேள்விகள் இருந்து கொண்டிருக்கும்.

இப்படி நம்மை மற்றவரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் படி கூறவில்லை, ஆனால் சில சூழ்நிலைகள் இவ்வாறு அமைந்திருக்கும். அதனை நாம் ஏன் என்று யோசிப்பது கிடையாது. இதற்கு காரணம் என்னவென்றால் நாம் செய்த பாவம் அல்லது நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று கூறுகிறோம். இவ்வாறு நம்மைச் சுற்றி இருக்கும் இந்த தரித்திரம் விலகி அதிர்ஷ்டம் உண்டாக நாம் செய்ய வேண்டிய பரிகாரம் இதுதான்.

- Advertisement -

முதலில் அரை கிலோ உளுத்தம் பருப்பை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை 2 லிட்டர் அல்லது மூன்று லிட்டர் தண்ணீரில் சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் ஒரு கட்டு அல்லது இரண்டு கட்டு அருகம்புல்லை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

ஒரு நாள் இரவு முழுவதும் இந்தக் கலவையை அப்படியே ஊறவிட வேண்டும். மறுநாள் இந்த கலவையை பசுமாட்டிற்கு உணவாக வழங்க வேண்டும். பசுமாடு இதனை முழுவதுமாக அருந்திவிட்டு மிச்சம் வைக்கும் தண்ணீரை கையிலெடுத்து, உங்கள் தலையிலும், உங்கள் குடும்பத்தினர் தலையிலும் தளித்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள், தோஷங்கள் நம்மை சுற்றி இருக்கும் தரிதிரங்கள் அனைத்தும் விலகி, நீங்கள் கோடீஸ்வரர் ஆவதற்கான யோகம் உண்டாகும்.

- Advertisement -