காசு சேராமல் தரித்திரம் பிடித்தது போல் இருக்கா? 7 சனிக்கிழமையில் இதை செய்யுங்கள் எல்லாம் மாறுமாம்!

matta-thengai-black-thread-cash
- Advertisement -

கையில் காசு இல்லை என்றால் நமக்கு பைத்தியமே பிடித்து விடும். அந்த அளவிற்கு காசு இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த பிரபஞ்சம் முழுவதும் நமக்கு வேண்டிய சிறு பொருட்களாக இருந்தாலும், பெரிய விஷயமாக இருந்தாலும் பணம் இல்லை என்றால் கிடைப்பது கிடையாது. இந்த காசை சேர விடாமல் தடுப்பது எது? நம்மை பிடித்த தரித்திரம் நீங்க நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

உழைத்தால் காசு வரும் என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல சோம்பல் இருந்தால் அந்த காசு நம்மை விட்டு சென்று விடும் என்பதும் உண்மை. ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய எதிரி அவனுடைய சோம்பல் தான் என்கிறது பல ஆன்மீக நூல்கள். சோம்பல் என்னும் இந்த எதிரியை விரட்டி அடித்து விட்டால் உங்களைப் பிடித்த தரித்திரமும் உங்களை விட்டு நீங்கிவிடும்.

- Advertisement -

நன்கு உழைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதன் திடீரென சோர்ந்து போய் சோம்பலாக இருப்பதற்கு அவன் உடலில் இருக்கக்கூடிய நெகட்டிவ் வைப்ரேஷன் தான் காரணம். ஏதோ ஒரு விஷயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாசிட்டிவ் எனர்ஜியை இழந்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்குள் தன்னால் எதுவுமே முடியாது என்கிற மனநிலை உருவாக துவங்குகிறது. எப்படியாவது முன்னேறி விடுவோம் என்கிற அந்த கனவு உடைபடும் பொழுது, இது போல உடைந்து போய் அமர்ந்து விடுகிறோம்.

ஒரு விஷயத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆயிரம் தடைகள் வந்து போய்க் கொண்டிருப்பது இயல்பான ஒன்றுதான்! அதை எதிர்த்து போராடி மேலும் பயணிப்பது தான் புத்திசாலித்தனம். எனவே சோர்ந்து போய் அமர்ந்து கொள்ளாமல் தடைகளை படிக்கற்களாக நினைத்து மென்மேலும் நீங்கள் முன்னேறி சென்று கொண்டே இருக்க வேண்டும். இதற்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கக்கூடிய எளிய பரிகாரம் உண்டு.

- Advertisement -

கருப்பு நூல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உச்சந்தலையில் இருந்து உங்களுடைய உயரத்திற்கு ஏற்ப ஐந்து மடங்கு அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஆள் உயர இந்த நூல் 5 மடங்கு மடித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த நூலை ஒரு மட்டை தேங்காயில் சுற்றிக் கொள்ளுங்கள். தோல் உரிக்காத மட்டை தேங்காய் தான் இதற்கு தேவை.

இதையும் படிக்கலாமே:
18 நாட்களில் வீட்டிற்கு கிரகப்பிரவேசம்! யார் நினைத்தாலும் வீட்டை சீக்கிரமாக கட்டி முடிக்கலாம். இந்த விசித்திர பரிகாரம் மட்டும் உங்களுக்கு தெரிந்திருந்தால்.

மட்டை தேங்காய் முழுவதும் இந்த நூலை சுற்றி இறுக்கமாக முடிந்து கொள்ளுங்கள். பிறகு இந்த தேங்காயை பாதிக்கப்பட்டவருடைய கைகளாலேயே ஓடும் நீரில் விட்டு விட வேண்டும். ஆறு, குளம், ஏரி என்று ஓடிக் கொண்டிருக்கும் நீரில் கொண்டு போய் விட்டு விடுங்கள். மட்டை தேங்காயை நீரில் விட்ட பின்பு கைகளை அலம்பி விட்டு இரு கை கூப்பி மனதார உங்களுடைய இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள். இன்றோடு பிடித்த தரித்திரம் எல்லாம் நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் வீடு திரும்பி விடுங்கள். இது போல ஏழு சனிக்கிழமைகளில் நீங்கள் செய்து வந்தால் உங்கள் மனதில், உடம்பில், புத்தியில் இருக்கக்கூடிய எல்லா எதிர்வினைகளும் நீங்கி விடும். தரித்திரம், பீடை ஒழிந்து உங்களுக்கு புது தெம்பு பிறக்கும். இதனால் அடுத்தடுத்த வெற்றி உங்களுக்குத்தான் கிட்டும்.

- Advertisement -