18 நாட்களில் வீட்டிற்கு கிரகப்பிரவேசம்! யார் நினைத்தாலும் வீட்டை சீக்கிரமாக கட்டி முடிக்கலாம். இந்த விசித்திர பரிகாரம் மட்டும் உங்களுக்கு தெரிந்திருந்தால்.

grahapravesam
- Advertisement -

இன்று ஒரு விசித்திரமான பரிகாரத்தை பற்றி பார்க்க போகின்றோம். சில பேருக்கு இந்த பரிகாரம் தெரிந்திருக்கலாம். சில பேருக்கு இந்த பரிகாரம் தெரியாமலும் இருந்திருக்கலாம். இருப்பினும் அனைவரின் நன்மையை கருதி இந்த ஜோதிட பரிகாரம் உங்களுக்காக பகிரப்பட்டுள்ளது. நீங்கள் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்கள். வீட்டிற்கு உண்டான பிளான் ரெடி பண்ணிட்டீங்க. கிட்டத்தட்ட பைசாவும் ரெடி பண்ணிட்டீங்க. நீங்கள் கட்டப் போகும் வீட்டை அருமையாக சூப்பராக சீக்கிரம் கட்டி முடிக்க வேண்டும் என்றால், வீடு கட்ட தொடங்குவதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்களேன். உங்களுடைய வீடு கடகடவென கட்டி சீக்கிரம் கிரகப்பிரவேசம் வைத்து விடுவீர்கள். அது என்ன பரிகாரம் நேரத்தை கடத்தாமல் இப்போதே தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

18 நாளில் வீடு கிரகப்பிரவேசம் வைக்க பரிகாரம்:
இந்த பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். தூக்கணாங்குருவி கூடு. நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். பார்ப்பதற்கு ரொம்பவும் அழகாக இருக்கும். இந்த தூக்கணாங்குருவி ஒரு மரத்தில் கூடு கட்ட தொடங்கி விட்டால், 18 நாட்களில் அந்த கூட்டை கட்டி முடித்துவிட்டு, 18வது நாள் கிரகப்பிரவேசம் நடத்தி விடுமாம். அதாவது அந்த கூட்டிற்கு தூக்கணாங்குருவி குடியேறி விடும். அதுவும் வெறும் 18 நாட்களில். தூக்கணாங்குருவிக்கு தனது வீட்டைக் கட்டிக் கொள்ள மொத்தம் 18 நாட்கள் தான் எடுக்கும்.

- Advertisement -

அதனால நீங்க என்ன பண்றிங்க, நீங்க வீடு கட்டுவதற்காக போட்ட பிளானை கொண்டு போய் தூக்கணாங் குருவி கூடு கட்டிருக்கும் மரத்துக்கு அடியில் வைத்து விட்டு, மனம் நிறைவாக உங்களுடைய வீட்டை சீக்கிரம் கட்டி முடிக்கபட வேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திடம் பிரார்த்தனை செய்து, தூக்கணாங்குருவி கூடு கட்டி வைத்திருக்கும் அந்த மரத்தை 18 முறை வலம் வந்து வேண்டிக் கொண்டால் உங்களுடைய வீடு எந்த பிரச்சனையும் இல்லாமல், எந்த தடைகளும் வராமல் அழகாக சீக்கிரமே கட்டி முடிக்கப்படும். (தூக்கணாங்குருவி கூடு கட்டிருக்கும் மரத்தை நாங்கள் எங்க போய் தேடுறது. அது உங்களுடைய சாமத்தியம்).

தூக்கணாங்குருவி கூடு கட்டி வைத்திருக்கும் அந்த மரத்தடியில் அவ்வளவு பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும். அந்த இடத்தில் வேண்டுதல் வைத்தால் உங்களுடைய கனவு சீக்கிரம் நினைவாகும். (ஒருவேளை நீங்கள் வீடு கட்டத் தொடங்கி விட்டு அந்த வேலை பாதியிலேயே நிற்கிறது என்றாலும் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் உங்களுடைய தடைபட்ட வீடு கட்டும் வேலை சீக்கிரம் தொடங்கி கிரகப்பிரவேசம் செய்து விடுவீர்கள்).

- Advertisement -

இந்த ரகசிய ஜோதிட குறிப்பு பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்காது. நம்பிக்கை இருந்தால் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். சரி எங்களுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசை இருக்கு. நாங்கள் வாடகை வீட்டில் தான் இருக்கின்றோம். எங்களுக்கு சொந்த நிலம் கூட கிடையாது. மாதம் தோறும் சம்பாதிக்க கூடிய வருமானத்தில் சாப்பிட்டு வருகின்றோம். நாங்கள் சொந்த வீடு கட்ட எப்படி நிறைய பணம் சம்பாதித்து நிலம் வாங்கி வீடு கட்டுவது. உங்களுடைய வீட்டில் தூக்கணாங்குருவி கூடின் படத்தை வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் பொன் பொருள் கொழித்து செல்வம் நிலையாக நிலைக்க சமையலறையில் இருக்கும் இந்த பொருளை உடனே மாற்றி வைத்து விடுங்கள். இதனால் நம் வீட்டிற்கு வரக் கூடிய ஐஸ்வர்யம் தடைபடும்.

அந்த தூக்கணாங்குருவி படத்திற்கு முன்பு தினமும் நீங்கள் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையை சொல்லுங்கள். சீக்கிரம் வீடு கட்டக்கூடிய யோகம் உங்களுக்கு தேடி வரும். முழு நம்பிக்கையோடு மேல் சொன்ன பரிகாரங்களை செய்பவர்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -