இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி20 போட்டி நேற்று பெங்களுருவில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதனபடி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கோலி 72 ரன்களையும், ராகுல் 47 மற்றும் தோனி 40 ரன்களையும் குவித்தனர்.
பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி மேக்ஸ்வெல்லின் அபார சதம் மூலம் போட்டியினை 19.4 ஓவர்களில் 194 ரன்கள் குவித்து எளிதாக வென்றது. மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 113 குவித்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். இதன்மூலம் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் என இரண்டு விருதினையும் தட்டிச்சென்றார். ஆஸ்திரேலிய அணி (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர். இதில் 4ஆவது ஓவரை ஆடிய போது ஆஸ்திரேலிய வீரரின் பந்தை கணிக்க முடியாமல் ஆதி வயிற்றில் அடிவாங்கி வலியால் துடித்தார். உடனே முறுத்துவ உதவிக்கு உதவியாளர்கள் வந்தனர். இதோ அந்த வீடியோ :
— DRV (@OyePKMKB) February 27, 2019
இந்தியா அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரை உலகக்கோப்பை தொடருக்கு முந்தய தொடர் என்பதால் இந்த தொடரினை அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்