டி20 போட்டியில் விளையாடாமல் இவர் பேட் எடுத்துக்கொண்டு உதவியாளராக ஓடிவருவதை பார்க்க முடியவில்லை. நாளைய போட்டியில் இவர் களமிறங்க வேண்டும் – ரசிகர்கள் ஆவல்

Dhawan
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த ஞாயிற்று கிழமை துவங்கியது. அன்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 126 ரங்கள் மட்டுமே அடித்தது. இதனை சற்று சிரமத்துடன் சேசிங் செய்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை அடைந்தது ஆஸ்திரேலிய அணி.

Toss

இதற்கடுத்து தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 2ஆவது போட்டி நாளைக்கு (27-02-2019) பெங்களுருவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை சமன் செய்ய முடியும். இல்லையெனில் முதல் முறையாக டி20 தொடரை இந்தியாவில் இழக்கும் நிலை ஏற்படும்.

- Advertisement -

முதல் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர். இந்த போட்டியில் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்டத்தின் இடையே இவர் பேட் எடுத்துக்கொண்டு உதவியாளராக மைதானத்தில் விளையாடிய வீரருக்கு பேட் கொடுக்க ஓடி வந்தார். இதனை பார்த்த தவான் ரசிகர்கள் இவரை உதவியாளராக பார்க்கமுடியவில்லை. நாளைய போட்டியில் இவர் ஆட வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிவரும் தவான் இந்திய அணிக்கு ஒரு முக்கிய வீரரே இருப்பினும், அவருக்கு ஓய்வு தரும் நோக்கிலே அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

தற்போது உள்ள அணியின் மிகச்சிறந்த வீரர் கோலி, தோனி என யாரும் இல்லை. இவர்தான் டாப் – ஆகாஷ் சோப்ரா ட்வீட்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -