Rishabh Pant : எளிதில் இவரால் தோனி ஆகிவிட முடியாது – ஷிகர் தவான் கோபம்

Dhawan
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க வீரர்களான ரோஹித் மற்றும் தவான் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி பெரிய ஸ்கோரை 358 ரன்கள் அடித்தது.

Toss

பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி இலக்கினை எளிதாக 48 ஓவர்களில் சேசிங் செய்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஹாண்ட்ஸ்கோம்ப் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மேலும் டர்னர் இறுதியில் அதிரடியாக விளையாடி 43 பந்தில் 84 அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அவர் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த போட்டியின் தோல்வி குறித்து பேசிய தவான் : இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக பனிப்பொழிவு அமைந்தது. மேலும், பண்ட் தவறவிட்ட ஸ்டம்பிங் போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவர் அந்த ஸ்டம்பிங்கை செய்திருந்தால் வெற்றி முடிவுமாரி இருக்கும். மேலும், பண்ட் இளம் வீரர் என்பதால் அவருக்கு இன்னும் அனுபவம் தேவை. அதனால் அவர் தோனி என்று கூடாது. அவரின் அனுபவத்தினை பிடிக்க இன்னும் நிறைய காலம் பண்டிற்கு தேவைப்படும் என்றார்.

pant

மேலும், பண்ட் அந்த ஸ்டம்பிங்க்கை தவறவிட்டவுடன் அரங்கம் முழுவதும் இருந்த ரசிகர்கள் தோனி, தோனி என்று ஆர்ப்பரித்த வன்னம் இருந்தனர். இருப்பினும் இன்னும் பண்டிற்கு அவரின் கீப்பிங் திறனை அதிகரித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Bumrah : கடைசி பந்தில் தோனி போல சிக்ஸ் அடித்த பும்ரா. குதித்து குதித்து சிரித்து தள்ளிய கேப்டன் கோலி – வைரல் வீடியோ

- Advertisement -