கோவிலுக்கு செல்லும்போது இதை மட்டும் நெற்றியில் வைத்துக் கொண்டு போனால், தெய்வங்களின் பார்வை நேரடியாக உங்கள் மேல் விழும். உங்களுடைய வேண்டுதலும் சீக்கிரம் பலிக்கும்.

thilagam
- Advertisement -

நாம் எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும் அதில் ஒரு வசிய தன்மை தேவை. இறைவனை நாம் வழிபாடு செய்ய வேண்டும் என்றாலும் கட்டாயம் இந்த வசியத்தன்மை தேவைதான். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. வசியம் என்றால் தெய்வத்தை வசியம் செய்து நம்முடைய உள்ளங்கையில் வைத்துக் கொள்வது கிடையாது. தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். கோவிலுக்கு செல்கின்றோம். நேர்மறை ஆற்றல் கோவிலில் முழுமையாக இருக்கும். அந்த நேர்மறை ஆற்றலையும் இறை சக்தியையும் நமக்குள் வசியப்படுத்திக் கொள்வது எப்படி என்பதிலும் ஒரு சூட்சமம் இருக்கிறது.

கோவிலுக்கு போய் யார் எப்படி வேண்டுதல் வைத்தாலும் பலிக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இருப்பினும் அந்த ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷனை அதிகமாக பெறுவதற்கு இந்த வசியத்தன்மை நம்மிடம் இருக்க வேண்டும். சில பேர் சொல்லுவாங்க என்னுடைய வேண்டுதல் இந்த கோவிலில் வைத்து உடன் பலித்து விட்டது என்று. சில பேர் சொல்லுவாங்க நான் எவ்வளவு நாளா இந்த வேண்டுதலை வைத்திருக்கின்றேன். ஆனால் அது படிக்கவே இல்லை என்று. காரணம் வசிய தன்மை தான். வசியத்தன்மையை அதிகரித்துக் கொள்ள ஒரு சுலபமான திலகத்தை நம் கையாலேயே நம் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை பற்றிய சின்ன குறிப்பு தான் இது. நம்பிக்கை உள்ளவர்கள் படித்து பலன் பெறலாம்.

- Advertisement -

இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருள் மருதாணி இலை. எங்கிருந்தாவது ஒரு கைப்பிடியோ இரண்டு கைப்பிடியோ தேவையான அளவு மருதாணி இலைகளை கொண்டு வந்து நன்றாக காய வைத்து மிக்ஸியில் அரைத்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். நைசான மருதாணி பொடி கிடைக்கும். பொடியாக கடையிலிருந்து மருதாணியை வாங்கக்கூடாது. இப்படித்தான் வீட்டிலேயே மருதாணி பொடியை தயார் செய்ய வேண்டும். சிறிய கண்ணாடி பாட்டிலிலோ அல்லது பீங்கான் கிண்ணத்திலோ இதை போட்டு சுத்தமான நெய் ஊற்றி கலந்தால் இது ஒரு மை போல நமக்கு தயாராகி இருக்கும். இதை பூஜை அறையில் வைத்து விட்டு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த மையை வாசனைக்காக ஜவ்வாது புனுகு இப்படி உங்களுக்கு விருப்பமான வாசனை பொருளை சேர்த்துக் கொள்ளலாம்.

நீங்கள் கோவிலுக்கு செல்லும்போது அல்லது வீட்டிலிருந்து வெளியே ஏதோ ஒரு நல்ல காரியத்திற்காக கிளம்புகிறீர்கள் என்றால் இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு சென்றால் நீங்கள் செல்லக்கூடிய காரியம் உங்களுக்கு வெற்றியைத் தரும். அருட் கடாட்சம் கிடைக்கும். லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லுவார்கள் அல்லவா. அந்த கடாட்சத்தை நிறைவாக பெறுவதற்கு இந்த மை நன்றாக வேலை செய்யும். நெற்றியில் இட்டுக் கொள்ளலாம் தவறு கிடையாது. நெற்றியில் வைத்தால், இதை என்ன என்று கேட்பார்கள், பதில் சொல்ல முடியாது என்றால் இதை லேசாக உச்சந்தலையில் கூட தடவிக் கொள்ளலாம் அது நம்முடைய விருப்பம் தான்.

- Advertisement -

மருதாணியை கையில் பெண்கள் வைத்திருந்தாலே அதிலிருந்து அவ்வளவு நேர்மறை ஆற்றல் வெளிவரும். அதனால் தான் பெண்கள் கையில் மருதாணியை நல்ல நாட்களில் இட்டுக் கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அப்படிப்பட்ட வசியத்தன்மையை நேர்மறை ஆற்றலை நமக்கு பெற்று தரக்கூடிய இந்த வசிய திலகத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு வாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறைவதை உங்களால் உணர முடியும்.

உங்களை சுற்றி ஒரு நேர்மறை வட்டம் எப்போதும் இருக்கும். நெகட்டிவ் எனர்ஜி உங்கள் பக்கத்தில் வரவே வராது. பின்பு நீங்கள் நினைக்கும் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த குறிப்பை பின்பற்றி பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -