தெய்வ வசியம் ஏற்பட பரிகாரம்

amman vater neem
- Advertisement -

ஒவ்வொரு வரும் ஆலயம் சென்றதும் தெரிந்தவர்கள் சொல்லும் பரிகாரங்கள் வழிபாடுகள் அனைத்தையும் செய்வதற்கு முக்கியமான காரணம் தெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என்பது தான். இந்த தெய்வத்தின் அருள் நமக்கு கிடைத்தால் மட்டுமே நம்முடைய வேண்டுதல் அனைத்தும் பலிக்கும். நாம் நினைத்த காரியம் நல்ல முறையில் நடக்கும்.

அத்தகைய தெய்வ வசியம் நம்மிடம் பரிபூரணமாக கிடைக்க வேண்டுமெனில் நம்மிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் முழுவதுமாக நீங்க வேண்டும். இந்த ஆற்றலை நீக்கி தெய்வ அனுக்கிரகத்தை பெற இந்தப் எளிய பரிகாரம் போதும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தெய்வ வசியம் ஏற்பட பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்ய பூஜையோ அல்லது ஆலய வழிபாடோ செய்யத் தேவையில்லை. நீங்கள் தினமும் குளிக்கும் நீரில் ஒரு பொருளை கலந்து குளிக்க வேண்டும் அவ்வளவு தான். இதன் மூலம் நம் உடம்பில் இருக்கும் கெட்ட சக்திகள் தேவையற்ற அதிர்வலைகள் நீங்கி நல்ல மாற்றம் நிகழும்.

அதுமட்டுமின்றி நல்ல முக வசீகரமும் தெய்வ கடாட்சமும் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக இருந்தாலே போதும். நம்முடைய சொல் செயல் சிந்தனை அனைத்தும் தெளிவுற்று நல்ல முறையில் நம்முடைய வாழ்க்கை பயணம் தொடரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. சரி அந்த தெய்வ வசியத்தை பெற என்ன செய்ய வேண்டும் பார்க்கலாம்.

- Advertisement -

இந்த வசியத்தை பெற நாம் குளிக்கும் போது சேர்த்து குளிக்க வேண்டிய ஏழு பொருட்களை முதலில் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு சுத்தமான காய்ச்சாத பசும் பால் ஒரே ஒரு சொட்டு தண்ணீரில் கலந்து குளிக்கலாம். அதே போல் ஆட்டுப்பால் கிடைத்தால் அதையும் கலந்து குளிக்கலாம். இது கிடைக்காத பட்சத்தில் துளசி இலை, அருகம்புல், வேப்ப இலை, மருதாணி இலை, வெள்ளெருக்க நிலை இவற்றில் ஏதேனும் ஒன்றை குளிக்கும் தண்ணீரில் சேர்த்து குளிக்கலாம்.

இவையெல்லாம் சேர்த்து குளிக்கும் அந்த தண்ணீர் சுடுதண்ணீரோ அல்லது குளிர்ந்த நீரோ எது வேண்டுமானாலும் இருக்கலாம் அது உங்கள் விருப்பம். அப்படி குளிக்கும் போது இந்த இலைகள் உங்கள் கால் மீது படும் என்ற எண்ணம் உங்களுக்கு தேவையற்றது. ஏனெனில் இது உங்களுடைய உடம்பில் இருக்கும் தேவையற்ற எதிர்மறை ஆற்றலை எடுத்துக் கொண்டு தான் கீழே விழுகிறது. ஆகையால் அதை பற்றி கவலை கொள்ள தேவையில்லை.

- Advertisement -

இதை வேலை கிடைக்காமல் வேலைக்காக முயற்சிப்பவர்கள் செய்யலாம். கர்ப்பிணி பெண்கள் செய்யலாம் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் அல்லது தொழிலில் முன்னேற்றம் வேண்டும் என எதை நினைத்து வேண்டுமானாலும் இதை செய்யலாம். பெண்கள் மாத விலக்கான சமயத்தில் மட்டும் இந்த முறையை பின்பற்றக் கூடாது.

இதையும் படிக்கலாமே: பணவரவை அதிகரித்து அடகு நகையை மீட்க பரிகாரம்

தெய்வக் கடாட்சத்துடன் பெ தெய்வக் கடாட்சத்துடன் திகழ வைக்கக்கூடிய இந்த எளிமையான தாந்திரீக முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் செய்து நல்ல முறையில் பயனடையுங்கள் என்று இந்த கருத்துடன் பரிதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -