பணவரவை அதிகரித்து அடகு நகையை மீட்க பரிகாரம்

lakshmi poojai
- Advertisement -

மகாலட்சுமி தாயாரின் அருள் ஒருவருக்கு இருந்தால்தான் அவருக்கு பணவரவு என்பது ஏற்படும். அந்த பணவரவால் தான் சேமிப்பு உயர்ந்து அந்த சேமிப்பை நகையாக நம்மால் மாற்ற முடியும். இந்த நகையை வாங்கி வீட்டில் இருக்கும் பெண்கள் அணிவதற்கும் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக வேண்டும். இதில் எந்த இடத்திலாவது மகாலட்சுமி தாயாரின் அருள் இல்லை என்றால் இந்த விஷயங்கள் எதுவுமே நடைபெறாமல் சென்று விடும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அடகு வைத்த தங்க நகையை மீட்பதற்கும் பணவரவை அதிகரிப்பதற்கும் செய்யக்கூடிய மகாலட்சுமி பூஜையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

கஷ்டப்பட்டு வாங்கிய நகையை வீட்டில் வைத்து அழகு பார்க்க முடியாமல் அடகு கடையில் வைத்து பணமாக மாற்றி அதை அவசரத்திற்காக செலவு செய்து விட்டு அடகு வைத்த தங்க நகையை திருப்ப முடியாமல் கஷ்டப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய அடகு நகையை திருப்புவதற்காக பண வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்வார்கள். அந்த வருமானம் அதிகரிப்பதற்கு மகாலட்சுமி தாயாரின் அருள் கண்டிப்பான முறையில் தேவை. அந்த அருளை பெற்றுவிட்டால் வருமானத்தை அதிகரித்து அதன் மூலம் தங்க நகையை நம்மால் மீட்க முடியும்.

- Advertisement -

இந்த மகாலட்சுமி பூஜையை வெள்ளிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். காலையில் எப்பொழுதும் போல் சுத்தமாக எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி எப்பொழுதும் செய்வதுபோல் பூஜையை செய்து முடித்து விட வேண்டும். பிறகு அருகில் இருக்கக்கூடிய கடைக்கு சென்று புதிதாக கல்லுப்பு வாங்கி வரவேண்டும். ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ள வேண்டும். அது நிறைய கல்லுப்பை போட வேண்டும்.

உபயோகப்படுத்திய கல் உப்பை பயன்படுத்தக் கூடாது. புதிதாக வாங்கிய கல் உப்பை தான் பயன்படுத்த வேண்டும். அந்த கல்லுப்பிற்கு மேல் மஞ்சளை தூவ வேண்டும். அதற்கு மேல் குங்குமத்தை தூவ வேண்டும். அடுத்ததாக பச்சரிசியில் மஞ்சளை கலந்து அட்சயாக தயார் செய்து அதை தூவ வேண்டும். இப்படி தூவை முடித்த பிறகு ஒரு புள்ளி இல்லாத எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அந்த எலுமிச்சம் பழத்தை பூஜையறையில் இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை டம்ளரில் வைத்து மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாரிடம் நம்முடைய வருமானம் அதிகரித்து அதன் மூலம் தங்க நகையை திருப்ப வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

இப்படி வேண்டி முடித்த பிறகு அரை மணி நேரம் கழித்து இந்த கல்லுப்பு வைத்திருக்கும் கண்ணாடி டம்ளரை எடுத்து நகை வைத்திருக்கும் நகை பெட்டியின் அருகிலோ அல்லது பணம் வைத்திருக்கும் பணப்பெட்டியின் அருகிலோ வைத்து விட வேண்டும். மூன்றாவது நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்து ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். அருகில் ஓடுகின்ற நீர் இல்லாத பட்சத்தில் இவை அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஆண்கள் வீட்டில் விளக்கேற்றும் பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

இப்படி வாராவாரம் வெள்ளிக்கிழமை தோறும் இந்த மகாலட்சுமி பூஜையை செய்வதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். அதன் மூலம் அடகு வைத்த தங்க நகையை மீட்டெடுக்க முடியும்.

- Advertisement -