இந்த ஒரு பொருள் மட்டும் உங்கள் வீட்டில் இருந்தால் போதும். அதிர்ஷ்டம் உங்கள் வீட்டுப் கதவை தேடிவந்து தட்டும்

lakshmi
- Advertisement -

யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று தெரியாது. ஒரு சிலர் மண்ணை தொட்டாலும் பொன்னாக மாறும். ஒரு சிலருக்கு திருமணம் ஆனவுடனேயே அவர்களின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக மாறிவிடும். இதற்கு காரணம் திருமணமாகி வந்தவளின் ராசியாக கூட இருக்கலாம் என்று சொல்வார்கள். ஒரு சிலர் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு மாறும் பொழுது அவர்களின் வாழ்க்கை முன் இருந்ததைவிட மிகவும் வசதியுடன் இருக்கும். இதற்கும் புது வீடு வந்ததும் அதிர்ஷ்டம் வந்து விட்டது என்று சொல்வார்கள். ஆனால் இந்த அதிர்ஷ்டம் எப்படி, எப்போது வரும் என்பது நமக்குத் தெரியாது. இப்படி வரப்போகும் அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தால் வாழ்க்கையே முடிந்து போய்விடும். எப்படி ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் இருப்பதற்கு சில காரணங்கள் இருக்கிறதோ, அதைப் போல அதிர்ஷ்டம் இல்லாமல் போவதற்கும் காரணங்கள் இருக்கின்றன. வாருங்கள் இந்த அதிர்ஷ்டத்தை எப்படி நமது வீட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஒருவருடைய ஜாதகத்தில் தீராத தோஷம் இருந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என்பது இருக்காது. அது போல அவர்களின் வீட்டில் வாஸ்து கோளாறு இருந்தாலும் அதிர்ஷ்டம் இருக்காது. பூர்வஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவாக அதிர்ஷ்டம் நம்மிடம் வருவதகல்லை. மற்றவர்களுக்கு கெடுதல் நினைப்பவர்களிடமும், பொறாமைப் படுபவர்களிடமும் அதிர்ஷ்டம் நெருங்கவே நெருங்காது.

- Advertisement -

இங்கே கூறப்பட்டுள்ள சில தவறுகளை சில பரிகாரங்கள் செய்து கொள்வதன் மூலம் சரி செய்ய முடியும். ஆனால் ஒரு சிலவற்றை நீங்கள் நினைத்தால் மட்டுமே சரி செய்ய முடியும். ஒருவர் வாழும் வாழ்க்கையை வைத்து தான் அதிஷ்டசாலிகள் அல்லது அதிர்ஷ்டம் இல்லாதவர்களால் என்று சொல்ல முடியும். அப்படி அதிர்ஷ்டத்தை நம்மிடம் கொண்டு வரும் ஒரு பொருளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒருவருக்கு மன நிம்மதி மற்றும் செல்வந்தராக வாழும் வாழ்க்கை இவை இரண்டும் கிடைத்து விட்டால் அவர்களை அதிர்ஷ்டசாலி என்று தான் சொல்வார்கள். மன அமைதி மட்டும் கிடைத்து விட்டால் போதாது. வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வதற்க்கு பணமும் இருக்க வேண்டும். அதேபோல் பணம் மட்டும் இருந்து, நல்ல வாழ்க்கை கிடைக்காமல் போனால் மன நிம்மதி இருக்காது.

- Advertisement -

எனவே இவை இரண்டும் சரியாக அமைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். இதற்கு முதலில் நாம் சம்பாதிக்கும் பணம் பண பெட்டியிலிருந்து வீண் விரயம் ஆகாமல் இருந்தால் இவற்றை சரிசெய்து கொள்ள முடியும். இதற்கு நமது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவர முருகப் பெருமானின் வாகனமாக மயில் இறகை பணம் வைக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். அதனை முறைப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

அதற்கு முதலில் ஒரு கருநீல நிற துணியை பணம் வைக்கும் இடத்தில் விரித்துக் கொள்ள வேண்டும். இந்த துணி வெல்வெட் அல்லது பட்டு துணியாக இருக்க வேண்டும். பிறகு அதன் மீது ஒரு மயில் இறகை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதன் மேல்புறம் உங்கள் பணத்தை வைத்துக் கொண்டே வர வேண்டும். அது மட்டுமல்லாமல் 9 மயிலிறகை பூஜை அறையில் வைத்து வழிபட்டாலும் உங்களுக்கு இருக்கும் துன்பங்கள் அனைத்தும் மறைந்துபோகும். இவ்வாறு நீங்கள் மயிலிறகை பயன்படுத்தும் பொழுது உங்கள் பணம் வீண் விரயம் ஆகாமல் பெருகிக் கொண்டே இருக்கும்.

- Advertisement -